ஞாயிறு, 16 டிசம்பர், 2018

அருள்வாக்கு கூறுவதாக பெண்ணிடம் நகை-பணம் பறித்த சாமியார்

நாகர்கோவில், டிச.9 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 49). ஓட்டல் தொழிலாளி. இவரு டைய மனைவி அமலு (45). இவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் காவல்துறை கண்காணிப்பாளர் சிறீநாத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

எங்கள் ஊருக்கு கோபால் என்ற பெயரில் சாமியார் ஒருவர் மனைவி பிள்ளைகளுடன் வந்தார். அவர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருள்வாக்கு சொல்லி வந்தார். இதை நம்பி ஒருமுறை நானும் அருள்வாக்கு கேட்க சென்றேன். அப்போது உங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செய்வினையை அகற்ற வேண்டும் என்றால் நகைகளை கழற்றி எனது பூஜையறையில் உள்ள சாமி படத்துக்கு முன் வையுங்கள் என்றார்.

அதை நம்பி நானும் 5 பவுன் நகையை கழற்றி வைத்தேன். அருள்வாக்கு சொல்லிய பிறகு நகையை கேட்டபோது செய் வினை அகன்றதும் நானே தருகிறேன் என்று கூறினார். இதற்கிடையே அவசர தேவைக் காக என்னிடம் அந்த சாமி யாரும், அவருடைய மனைவியும் சேர்ந்து கடன் கேட்டனர். அவர் களை நம்பிய நான் 2 தவணையாக ரூ.5 லட்சத்தை கொடுத்தேன்.

இந்த நிலையில் அவர்கள் திடீரென அங்கிருந்து வீட்டை காலிசெய்து குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டனர். என்னை போல் பல பெண்கள் அவர்களிடம் ஏமாந்துள்ளனர். எங்கள் ஊருக்கு சாமியார் வந்த போது தனது சொந்த ஊர் தூத்துக்குடி என்று கூறினார். அங்கு விசாரித்தபோது, அது அவருடைய சொந்த ஊர் இல்லை என்பது தெரிய வந்தது. இதற் கிடையே அவருடைய செல் போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த சாமியார் நாகர்கோவிலில் தங்கியிருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது.

அதனால் நாங்கள் ஓசூரில் இருந்து நாகர்கோவில் வந்தோம். இங்கு வந்த பிறகு சாமியாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை கண்டுபிடித்து எங்களு டைய நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அருள்வாக்கு சொல்வதாக கூறி ஓசூர் பெண்ணிடம் நகை, பணத்தை பறித்த சாமியார் நாகர்கோவிலில் பதுங்கி இருப் பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின் றனர்.

- விடுதலை நாளேடு, 9.12.18

திங்கள், 10 டிசம்பர், 2018

யாரிந்த சாமியார் சாக்ஷி?



1956ஆம் ஆண்டு பிறந்த சாமியார் சாக்ஷியின் உண்மையான பெயர் அரி, இளம் வயது முதலே பல்வேறு வழக்குகளின் கீழ் சிறைசென்றவர். இவரது தந்தை ஆத்மானந்த என்பவர் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்ட பண்ணை வீட்டை ஆக்கிரமித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, தான் ஆக்கிரமித்த இடத்தையும் வீட்டையும் சாக்ஷி ஆசிரமம் என்று பெயரிட்டு மதச்சாயம் பூசிவிட்டார். அரி தன்மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அரி என்ற பெயரைவிட தனது தந்தையின் ஆசிரமமான சாக்ஷி என்பதையே தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

இவர் மீது கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக 37-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

2014ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர் மனுதாக்கல் செய்தபோது இவரே சமர்பித்த விபரம் ஆங்கிலத்தில் பட்டியலிடப் பட்டுள் ளது.

1.    4 charges related to criminal intimidation (IPC Section-506)
2.    2 charges related to Promoting enmity between different groups on grounds of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to mainten ance of harmony (IPC Section-153A)
3.    2 charges related to Cheating and dishonestly inducing delivery of property (IPC Section-420) 
4.    2 charges related to Forgery of valuable security, will, etc. (IPC Section-467)
5.    2 charges related to Forgery for purpose of cheating (IPC Section-468)
6.    1 charge related to voluntarily causing hurt to deter public servant from his duty (IPC Section-332)
7.    1 charge related to Injuring or defiling place of worship with intent to insult the religion of any class (IPC Section-295)
8.    1 charge related to Dacoity with murder (IPC Section-396)
9.    1 charge related to Robbery, or dacoity, with attempt to cause death or grievous hurt (IPC Section-397)
10.    1 charge related to criminal breach of trust (IPC Section-406)
11.    1 charge related to Criminal breach of trust by public servant, or by banker, merchant or agent (IPC Section-409)
12.    1 charge related to Murder (IPC Section-302)
13.    4 charges related to Intentional insult with intent to provoke breach of the peace (IPC Section-504)
14.    3 charges related to rioting (IPC Section-147)
15.    3 charges related to voluntarily causing hurt (IPC Section-323)
16.    2 charges related to Using as genuine a forged document or electronic record (IPC Section-471)
17.    1 charge related to Punishment (IPC Section-53)
18.    1 charge related to Causing grievous hurt by act endangering life or personal safety of others (IPC Section-338)
19.    1 charge related to Punishment of criminal conspiracy (IPC Section-120B)


இவ்வளவு குற்றப்பின்னணி கொண் டவர் அரசியலுக்கு வரத் தகுதியானவர் தானே, அதுவும் காவி உடை உடுத்தியவர் என்றால் கூடுதல் தகுதி. எனவே 1999-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச பாஜக பருக்காபாத் நாடாளுமன்றத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது. வாஜ்பாயின் நண்பரான பிரம்தத் திரிவேதியை கொலைசெய்தவர்களுள் அரி என்ற சாக்ஷியும் ஒருவர் என வாஜ்பாயிடம் உளவுத்துறை கூறியதை அடுத்து இவர் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இவரை சமாஜ்வாதி கட்சி மாநிலங்களவை உறுப்பினராக்கி டில்லிக்கு அனுப்பிவைத்தது.

2000ஆம் ஆண்டு ஆக்ரா சாலையில் விபத்தில் சிக்கிய ஒரு குடும்பத்தை மீட்கிறேன் என்று கூறி விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை தன்னுடைய ஜீப்பில் தூக்கிச் சென்று பாலியல்வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் இவரும் இவரது இரண்டு சகோதரர்களும் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 2005ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினருக்காக ஒதுக்கிய பணத்தை முழுவதுமாக கையாடல் செய்தது தொடர்பாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து 21 மார்ச் 2006 அன்று நாடாளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது, இவர் குடியரசுத்தலைவர் மற்றும் சபாநாயகரிடம் மன்னிப்புக் கடிதம் எழுத்திக் கொடுத்தும் இவரது கடிதம் நிரா கரிக்கப்பட்டு இவர் தகுதி நீக்கம் செய்யப்பட் டார்.

2009ஆம் ஆண்டு சுஜாதா வர்மா என்ற கல்லூரி முதல்வரை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டார். பிறகு 1500 ரூபாய் பிணையில் விடுதலைசெய்யப் பட்டார். 2012ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 2014ஆம் ஆண்டு அமித்ஷா இவரை உன்னாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இதனை அடுத்து இவர் 3ஆவது முறையாக நாடாளுமன்ற உறுப்பின ரானார். இவர் மீது இன்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சர்ச்சைப் பேச்சுக்கள்

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கோட்சேவின் சிலையை வைக்கவேண்டும் என்று பல்வேறு சாமியார் அமைப்புகளில் இருந்து கையெழுத்து வாங்கி மோடியிடம் வழங்கச் சென்றார். ஆனால் மோடி அயல்நாட்டுப் பயணத்தில் இருந்ததால் அவரால் இயலவில்லை. இதனால் இவர் பொதுவாக நாடாளுமன்றத்தில் கோட்சே சிலையை வைக்க அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று அறிக்கை விட்டார். இது இவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக தலைமை அறிக்கை விட்டது. இந்துக்கள் அனைவரும் அய்ந்து குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதம் நிலைத்து நிற்கவேண்டு மென்றால் பெண்கள் இந்த தியாகத்தை செய்தே ஆகவேண்டும் என்று அறிக்கை விட்டார். ராஜஸ்தான் பள்ளியில் அனைத்து மாணவர்களும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கட்டாய சுற்றறிக்கை விட்டபோது அதை நாடு முழுவதிலுமுள்ள இசுலாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்த் தனர். இதற்கு கருத்து கூறிய சாமியார் சாக்ஷி சூரிய நமஸ்காரத்தை வெறுப்பவர்கள் தெரு வில் செல்லக்கூடாது, பகலில் நடமாடாமல் இரவில் மட்டும் இவர்கள் நடமாடவேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

தாதரியில் அக்லாக் முகமது படுகொலை செய்யப்பட்டது குறித்து இவர் கூறும் போது, பசுவைக் கொலை செய்தவர்களுக்கு இதைவிட ஒரு நல்ல பாடம் எதுவுமே இருக்கமுடியாது என்று கூறியவர். இந்துக்கள் அனைவரும் கையில் ஆயுதம் எடுக்க வேண்டும்; பசுவை கொலைசெய்யும் ஒவ் வொருவரையும் கொலைசெய்யவேண்டும் என்று கூறினார். பின்னால் கொலைசெய்யும் பேச்சு பத்திரிகைகளால் மிகைப்படுத்தப்பட்டது என்று கூறினார். இவரை அமித்ஷா டில்லிக்கு அழைத்து கண்டித்ததாக பத்திரிகைகள் எழுதின. ஆனால் அப்படி ஒன்றுமில்லை. பீகார் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த என்னை அழைத்தார் என்று கூறினார். பீகார் தேர்தலின் போது பசுமாட்டுப் பிரச்சினையைக் கிளப்பி, இந்துக்களின் ஓட்டுக்களைப் பெற திட்டம் தீட்டிக்கொடுத்த வர்களில், இவரும் ஒருவர் என உ.பி.யிலிருந்து வெளிவரும் அமர் உஜாலா என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் கூறியிருந்தார். பின்னர் அவர் தான் சொன்னது தவறு என்று மன்னிப்பு கடிதமும் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளிப்பவர்கள் அனைவரும் மோடியின் எதிரிகள் என்றும் மோடியின் புகழை விரும்பாமல் இவர்கள் இப்படிச் செய்வ தாகவும் கூறியிருந்தார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் கன்னையா குமார் உட்பட 7 மாணவர்களை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும் என்று கூறினார்.

நிலை மாற வேண்டும்


பார்ப்பனர்கள் என்ன சொல்லும் நிலைமை ஏற்படவேண்டும்? நாங்கள் 100க்கு 3 பேர் இருக்கிறோம். எங்களுக்கும் உரிமை அளிக்கப்படவேண்டும் என்று பார்ப்பனர்கள் நம்மிடம் கேட்கவேண்டும். இன்று நாம் நமது விகிதாசாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிற நிலை மாறவேண்டும் என்றார் தந்தை பெரியார்.


- விடுதலை', 30.1.1970

விடுதலை ஞாயிறு மலர்', 24.11.18



ஞாயிறு, 9 டிசம்பர், 2018

அருள்வாக்கு கூறுவதாக பெண்ணிடம் நகை-பணம் பறித்த சாமியார்

நாகர்கோவில், டிச.9 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 49). ஓட்டல் தொழிலாளி. இவரு டைய மனைவி அமலு (45). இவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் காவல்துறை கண்காணிப்பாளர் சிறீநாத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
எங்கள் ஊருக்கு கோபால் என்ற பெயரில் சாமியார் ஒருவர் மனைவி பிள்ளைகளுடன் வந்தார். அவர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருள்வாக்கு சொல்லி வந்தார். இதை நம்பி ஒருமுறை நானும் அருள்வாக்கு கேட்க சென்றேன். அப்போது உங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செய்வினையை அகற்ற வேண்டும் என்றால் நகைகளை கழற்றி எனது பூஜையறையில் உள்ள சாமி படத்துக்கு முன் வையுங்கள் என்றார்.
அதை நம்பி நானும் 5 பவுன் நகையை கழற்றி வைத்தேன். அருள்வாக்கு சொல்லிய பிறகு நகையை கேட்டபோது செய் வினை அகன்றதும் நானே தருகிறேன் என்று கூறினார். இதற்கிடையே அவசர தேவைக் காக என்னிடம் அந்த சாமி யாரும், அவருடைய மனைவியும் சேர்ந்து கடன் கேட்டனர். அவர் களை நம்பிய நான் 2 தவணையாக ரூ.5 லட்சத்தை கொடுத்தேன்.
இந்த நிலையில் அவர்கள் திடீரென அங்கிருந்து வீட்டை காலிசெய்து குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டனர். என்னை போல் பல பெண்கள் அவர்களிடம் ஏமாந்துள்ளனர். எங்கள் ஊருக்கு சாமியார் வந்த போது தனது சொந்த ஊர் தூத்துக்குடி என்று கூறினார். அங்கு விசாரித்தபோது, அது அவருடைய சொந்த ஊர் இல்லை என்பது தெரிய வந்தது. இதற் கிடையே அவருடைய செல் போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த சாமியார் நாகர்கோவிலில் தங்கியிருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது.
அதனால் நாங்கள் ஓசூரில் இருந்து நாகர்கோவில் வந்தோம். இங்கு வந்த பிறகு சாமியாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை கண்டுபிடித்து எங்களு டைய நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அருள்வாக்கு சொல்வதாக கூறி ஓசூர் பெண்ணிடம் நகை, பணத்தை பறித்த சாமியார் நாகர்கோவிலில் பதுங்கி இருப் பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின் றனர்.
 - விடுதலை நாளேடு, 9.12.18