செவ்வாய், 22 டிசம்பர், 2015

பாதிரியார்கள் திருமணம்: போப்பிடம் பெண்கள் விண்ணப்பம்


வாடிகன்,மே 21- வாடிகன் சிட்டியில் கத்தோலிக்க பாதிரி யார்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க வலி யுறுத்தி போப்புக்கு பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர். கத் தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. இந்த பழக்கம் சுமாராக ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் இத்தாலியை சேர்ந்த 26 பெண்கள் போப் பிரான்சி சுக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாங்கள் அனைவரும் கத்தோ லிக்க கிறிஸ்தவ மத பாதிரியார்களை காதலிக்கிறோம். அவர் களும் எங்களை மனமாற விரும்புகின்றனர். ஆனால், எங் களை திருமணம் செய்ய விடாமல் மத கோட்பாடு தடுக் கிறது. இதனால் நாங்கள் கடும் துயருக்கு ஆளாகி இருக் கிறோம். அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனவே, அவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள். உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். பல கஷ்டங்களில் தவிக்கும் அவர்களுக்கு மாற்றம் தாருங்கள். இதன் மூலம் அனைத்து தேவாலயங்களிலும் நல்லது நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். கடிதத்தில் தங்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை மட்டும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.  கடிதத்தில் பல தொலைபேசி எண்களையும் எழுதியுள்ளனர். இத்தகவலை வாடிகன் இணையதளம் வெளியிட்டுள்ளது.
-விடுதலை,21.5.14

பாதிரியாரின் காமப் பசிக்கு மாணவி இரை!


திருவனந்தபுரம், ஜூலை 28_ கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோவிலில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.
இலவச கணினிப் பயிற்சி
இந்தக் கோவிலின் சார்பில் ஒரு இலவச கணினிப் பயிற்சி நிறுவன மும் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த நிறுவனத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் இலவச மாக கணினி பயிற்சி பெற்று வந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியும் கணினி பயிற்சி பெற்று வந்தார். அந்த மாணவியிடம் பாதி ரியார் ஜோமோன் அன் பாக பழகினாராம். மேலும் அவரது படிப் பிற்கும் பல உதவிகளை செய்து வந்தாராம்.
இந்த நிலையில் அவர் ஆசைவார்த்தைகளை கூறி அந்த மாணவியை பாலியல் வன்முறை செய்துள்ளார். மேலும் அதை தனது செல்பேசி யில் படம் பிடித்து வைத்து கொண்டு மிரட்டி அந்த மாண வியை தொடர்ந்து தனது ஆசைக்கு பலியாக்கி வந்துள்ளார்.
காவல் துறை கண்காணிப்பாளரிடம்...
நாளடைவில் அந்தப் பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது. தனது ஆசைக்கு இணங்காவிட் டால் அந்த மாணவியின் ஆபாச படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டத் தொடங்கினார். இதனால் பயந்துபோன அந்த மாணவி இடுக்கி காவல் துறை கண்காணிப்பாள ரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி எடுத் துக்கூறி கதறி அழுதார்.
அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி அந்தப் பாதிரியாரைக் கைது செய்தனர். அவரது செல்பேசியை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாசப் படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந் தது தெரிய வந்தது.
மேலும் அந்தப் பாதிரி யாரின் கணினியிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய் யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் பாதிரி யார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க் கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையி னர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் பாதிரி யாருக்கு எதிராக  பெண் கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துப் போராட்டங்களிலும் இறங்கியுள்ளனர்.
-விடுதலை,18.7.14

செக்ஸ் குற்றம் மன்னிப்புக் கோரும் போப்!

வாடிகன்சிட்டி, ஜூலை 10_ மேலை நாடுகளில் சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் செக்ஸ் குற்றத்துக்கு ஆளாகி பல சிறுவர்  சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளி யாகி இருந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர் _சிறுமிகளிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார்.
வாடிகன் சிட்டியில் நேற்று அவர் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அதில் பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தால் பாதிக் கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தை மறுந்து விடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இருந்தாலும் அவர்கள் செய்த குற்றத் தையும் பாவச் செயல்க ளையும் விட்டு விடுங்கள். அவர்களின் செயலுக்காக உங்களிடம் நான் மன் னிப்பு கேட்டுக் கொள்கி றேன்.
செக்ஸ் குற்றத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு அடிமையானவர்கள் மற் றும் தற்கொலை செய்தவர் களை நினைக்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது என்றார்.
பிரார்த்தனையின்போது அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அது ஸ்பெ யினில் மொழி பெயர்க்கப் பட்டது.
-விடுதலை,10.7.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சாமியார் சல்லாபம்: டி.வி. காட்டிக் கொடுத்தது



பெங்களூர், மே 2-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னைத் தானே விளம் பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி சிறீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது.
இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் ஓட்டுநர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரைக் கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரிய வில்லை.

சபரிமலையில் பெண் பக்தர்களிடம் தவறான நடத்தை
திருவனந்தபுரம், மே 2- சபரிமலையில் உள்ள  அய்யப்பன் கோ விலுக்கு லட் சக்கணக் கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக் குட்பட்ட சிறுமிகளும் 50 வயதுக்கு மேலான பெண்களும் மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய முடியும்.
இந்த நிலையில் கடந்த சித்திரை விஷு பண்டிகையின்போது சபரிமலை சன்னிதானத்தில் 18ஆம் படி அருகே பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஜகாங்கீர் என்பவர் சிறுமிகளிடமும், பெண் பக்தர்களிடமும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக பக்தர்கள் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த புகார் மீது சரியான விசாரணை நடத்தப்படவில்லை.
இதைத் தொடர்ந்து காவல் உயர் அதிகாரி ஏ.டி.ஜி.பி.ஹேமச்சந்திரனிடம் புகார் கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நடைபெற்ற விசா ரணையில் துணை ஆய்வாளர் ஜகாங்கீர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
-விடுதலை,2.5.14

சிறுமிகளை பாலியல் வன்முறை செய்து தலைமறைவான பாதிரியார் பிரேசிலில் கைது


ரியோ டி ஜெனிரோ, மார்ச் 2 அமெரிக்காவின் மின்னியபொலிஸ் அருகே உள்ள ஃபின்லேசன் பகுதி யில் கிறிஸ்துவ மத தொண் டூழியம் செய்யவரும் இளம் பெண்களுக்கான கன்னி யாஸ்திரி முகாமை நடத்தி வந்த பாதிரியாரான விக்டர் அர்டன் பெர்ணார்ட் (53) என்பவர் அந்த முகாமில் பயிற்சிக்காக வந்த ஒரு சிறுமியை 13 வயதில் இருந்து சுமார் 10 ஆண்டு கள் வரை பலவந்தப்படுத்தி பாலியல் வன்முறை செய்த தாக புகார்கள் எழுந்தன.
இதேபோல், தன்னையும் அவர் 12 வயது முதல் 20 வயது வரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத் தியதாக அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண்ணும் தெரிவித்தார்.  அவரால் பாதிக்கப் பட்ட மேலும் பல பெண் கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கத் தயங்கி வந்த நிலையில் விக்டர் அர்டன் பெர்ணார்ட் கடந்த 2010ஆ-ம் ஆண்டு திடீரென தலைமறை வானார்.
அவர் பிடிபட் டால் அதிகபட்சமாக 30 ஆண்டு சிறை தண்டனை உறுதி என்ற நிலையில் அமெரிக்க காவல்துறை யினர் அவரை வலைவீசி தேடிவந்தனர்.
அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கிய குற்ற வாளியாகவும் அறிவிக்கப் பட்டிருந்த அவரை பிரே சில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 2100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ப்ரை யாடா பிப்பா கடற்கரை பகுதியில் உள்ள ஒரு பங் களாவில் நேற்று பிரேசில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவருடன் சுமார் 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்த கணி னிகள், செல்பேசிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. விரைவில் அமெரிக்க காவல்துறையினரிடம் அவர்கள் ஒப்படைக்கப் படுவார்கள் என தெரி கின்றது.
-விடுதலை,2.3.15

குழந்தை வரத்திற்கு நள்ளிரவு பூஜையாம் பெண் வன் புணர்ச்சி: இருவர் கைது



சிவகங்கை, பிப். 27_ சிவ கங்கையில், குழந்தை வரத் திற்கு இரவில் சிறப்புப் பூஜை நடத்தி, பெண்ணை வன் புணர்ச்சி செய்தது தொடர்பாக இருவரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே, அல்லூர் பெண்ணிற்கு திரு மணமாகி மூன்றாண்டு களாக குழந்தை இல்லை. ஜோசியத்தில் கணவருக்கு நேரம் சரியில்லை என அறிந்து சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.
தேவகோட்டை அருகே பில்லி, சூனியம் செய்யும் கணவரின் தூரத்து உறவின ரான எழுவன் கோட்டை விசுவநாதன் வயது 50, அவரது நண்பர் ஜெபஸ் திராஜ் (வயது 45) ஆகி யோர் பிப்., 19இல் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். அன்றிரவு 10.30 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின்போது, கணவர் எதிரில் மனைவி இருக்கக்கூடாது என விசுவநாதன் கூறியதால் பெண்ணை கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்று ஜெபஸ்திராஜ் பாலியல் வன்முறை செய் துள்ளார்.
காவல்துறையினர் விசாரணையில் இருவரும் செய்த சதியில் பெண் வன் புணர்ச்சி செய்யப்பட்டது தெரிந்தது. வேறொரு பெண்ணுக்கு சிறப்பு பூஜை நடத்தவேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ணின் கணவர் மூலம் இருவரையும் வரவழைத்த காவல்துறையினர் அவர் களை கைது செய்தனர்.
-விடுதலை,27.2.15

வியாழன், 10 டிசம்பர், 2015

தர்ம அடி வாங்கினான் மந்திரவாதி



மைசூரு, டிச.10 உன்சூர் அருகே புதையல் இருப்பதாகக் கூறி விவசா யியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த மந்திரவா தியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப் படுவதாவது:
மைசூரு அருகே கெத் தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேஷ் (வயது 46). இவர் தன்னை மந்திரவாதி என்று கூறிக் கொண்டு அந்தப் பகுதி மக்களிடம் பில்லி, சூனி யம் எடுக்க பூஜை செய்வ தாக கூறி வந்தார். இதற் கிடையே கடந்த 2 மாதங் களுக்கு முன்பு மகாதே சுக்கு, மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா ஆஸ் வாலு கிராமத்தை சேர்ந்த குமாரசாமி என்ற விவ சாயியுடன் பழக்கம் ஏற் பட்டது. இந்த பழக்கத்தை வைத்து மகாதேஷ், குமாரசாமியின் குடும்பப் பிரச்சினை, சொத்து விவ ரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டார்.
இந்த நிலையில் மகா தேஷ், குமாரசாமியின் விவசாய தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அந்த புதையலை எடுக்க நிறைய பூஜைகள் நடத்த வேண்டும் என்றும், அந்த புதையலை எடுக்காமல் விட்டுவிட்டால் குடும்பத் தினர் உயிருக்கு ஆபத்து என்றும் குமாரசாமியிடம் கூறியுள்ளார். இதனால் அவரும் புதையலை எடுக்க பூஜை நடத்த சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி அடிக்கடி லட்சக்கணக்கான ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு குமாரசாமியின் நிலத்தில் உள்ள புதையலை எடுக்க மந்திரவாதி மகாதேஷ் தனது வீட்டிலேயே பூஜை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை இரவு குமாரசாமி யின் தோட்டத்திற்கு சென்ற மகாதேஷ், தானே ஒரு பழைய குடத்தை ஒரு இடத்தில் புதைத்து வைத் துள்ளார். மறுநாளான நேற்று முன்தினம் (செவ் வாய்க்கிழமை) மகாதேஷ், குமாரசாமியின் தோட் டத்திற்கு சென்று பூஜை நடத்தினார். அப்போது குமாரசாமியும், அவரது உறவினர்களும் அங்கு இருந்தனர். அந்த சமயத் தில் தோட்டத்தில் ஒரு இடத்தை காண்பித்து இங்கு புதையல் இருப்ப தாக மகாதேஷ் கூறியுள் ளார்.
ஆனால் அந்த இடத் தில் ஏற்கனவே குழி தோண்டி மணல் மூடப் பட்டிருந்தது. இதனால் குமாரசாமிக்கும் அவரது உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அந்த இடத்தில் குழி தோண்டி பார்த்தனர். அங்கு ஒரு பழைய குடம் மட்டும் இருந்தது. அதில் புதையல் இல்லை. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக் களுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குமார சாமி, மகாதேசிடம் கேட் டுள்ளார். அதற்கு நீங்கள் பூஜை நடத்தும் போது சுத்தமாக இல்லை. இத னால் புதையல் கிடைக் காமல் போய்விட்டதாக கூறி, அங்கிருந்து புறப் பட்டுச் சென்றார். அப் போது குமாரசாமியின் பக்கத்து தோட்டத்துக் காரர் ஒருவர் அங்கு வந் தார். அவர், திங்கட் கிழமை இரவு மந்திரவாதி மகாதேஷ் இங்கு வந்து குழி தோண்டி குடத்தை புதைத்து வைத்ததை குமாரசாமியிடம் தெரிவித் தார். அப்போது தான் மந்திரவாதி மகாதேஷ், புதையல் இருப்பதாக கூறி பணம் பறித்து வந்தது அவருக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திர மடைந்த குமாரசாமி, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மந்திர வாதி மகாதேசை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை பிளி கெரே காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர். அவரை காவல் நிலையத் தில் கைது செய்தனர்.
மேலும் குமாரசாமி, பிளிகெரே காவலர் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், மந்திரவாதி மகாதேஷ் எனது தோட் டத்தில் புதையல் இருப்ப தாகவும், அந்த புதையலை எடுக்க பூஜை செய்வதாக கூறி ரூ.6 லட்சம் வரை வாங்கி மோசடி செய்துள் ளார் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, கைதான மகாதேசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-விடுதலை,10.12.15

பாதிரியார் கைது


திருச்சூர், டிச.10 கேரள மாநிலம் திருச் சூரை அடுத்த கோட் டபுரத்தில் உள்ள ஒரு கிறித்துலயத்தில் பாதிரி யாராக இருந்தவர் எட்வின் பிகாரஸ் (வயது 41). திருச்சபையில் வேலை பார்த்து வந்த ஒரு சிறு மியை எட்வின் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன் கலவி செய்து வந்தார்.
இது குறித்து அந்த சிறுமி தன்னுடைய பெற் றோரிடம் கூறியுள்ளார்.   அவர்கள் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர்.
இதனிடையே எட்வின் தப்ப உதவியதாக அவருடைய உறவினர்கள் 2 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். அவர்கள் மூலமாக எட் வினை 8 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் காவல்துறை யினர் கைது செய்தனர்.
-விடுதலை,10.12.15