புதன், 24 ஜூலை, 2024

இவர்கள்தான் சாமியார்கள்! 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை

Published June 28, 2024,விடுதலை நாளேடு

 ராமாபுரம், ஜூன் 28- சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தேபாது 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் சைதுசெய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த பள்ளிக் கரணை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 17 மற்றும் 14 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இருவரும் தந்தையுடன் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அப்போது 2 பேரும் வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், கோத் தாரி நகரில் உள்ள அவர்களது சித்தப்பா வீட்டில் தங்கி வந்தனர்.

அவரது சித்தப்பா வீட்டில் அடிக்கடி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சாமியாரான அரீஷ் (வயது 38), விஜி என்ற ஜெயக்குமார் (30), சூளைமேடு பகுதியை சேர்ந்த சதீஷ் (41) ஆகிய 3 பேரும் சேர்ந்து செய்து வந்தனர்.
அப்போது இவர்கள் 3 பேரும் சேர்ந்து, பூஜை செய்ய வேண்டும் என கூறி 14 வயது சிறுவனை தனியாக அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்தனர். மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் சிறுவனை மிரட்டினர்.

இந்தநிலையில் கடந்த சில நாள்sகளுக்கு முன்பு சிறுவர்கள் இருவரும் தாயாரை பார்க்க பள்ளிக்கரணைக்கு சென்றனர். அப்போது 14 வயது மகனின் உடலில் இருந்த காயங்களை பார்த்த அவரது தாயார், அதுபற்றி கேட்டபோதுதான், சிறுவன் சித்தப்பா வீட்டில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கூறினார்.
அதிர்ச்சி அடைந்த சிறுவ னின் தாயார், இதுபற்றி வளசர வாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சாமியார் அரீஷ் மற்றும் விஜி, சதீஷ் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சனி, 1 ஜூன், 2024

பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது


கோவையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சென்னையில் தங்கி பிரபல சேனலில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், சமீபத்தில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த 2021 ஆம் ஆண்டு மண்ண டியில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது கோவில் அர்ச்சக ரான கார்த்திக் முனுசாமி என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து எனது வீட்டுக்கு வந்த அவர், ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலில் வன்கொடுமை செய்தார். நான் மயக்கம் தெளிந்து பார்தத போது, எனது காலில் விழுந்த அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வந்த காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது அவரின் சித்தப்பா காளிதாஸ் என்னை மிரட்டினார்.

இதற்கிடையே நான் கர்ப்பமடைந்த காலத்தில் என்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார் அந்த தொகுப்பாளினி.

இதனையடுத்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறை யினர் காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, அவரது சித்தப்பா காளிதாஸ் உட்பட அய்ந்து பேர் மீது கருக்கலைத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமி திடீரென தலைமறைவானார். இதனால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் முனுசாமி கொடைக்கானலில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கொடைக்கானல் சென்ற காவலர் அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 14 மார்ச், 2024

மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி 75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம்


மூடநம்பிக்கையின் உச்சம்

விடுதலை நாளேடு

 மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி

75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம்
கிராம மக்கள் மீது காவல்துறை வழக்கு

மும்பை,மார்ச் 8- பில்லி, சூனியம் வைப்ப தாக சந்தேகப்பட்டு ஒரு வரை கோவில் திருவிழாவில் ஒரு கும்பல் கட்டாயப் படுத்தி நெருப்பில் தள்ளி விட்ட கொடூரம் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலம் தானே மாவட் டத்தில் உள்ள கேர்வலே கிராமத்தில் லட்சுமண் என்ற 75 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் மாந்திரீக வேலையில் ஈடு பட்டு பில்லி, சூனியம் வைப்பதாக கிராமத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகப் பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இதில் தீ மிதிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி!

அப்போது திடீரென கிராமத்தைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் லட்சுமண் வீட்டுக்கு வந்த னர். அவர்கள் தீ மிதி நடக்கும் பகுதிக்கு அவரை அடித்து இழுத்துச் சென்றனர். மாந்திரீக வேலையில் ஈடுபடும் உனக்கு இதுதான் தண்டனை எனக்கூறி, அந்த முதியவரை மிரட்டி, நெருப்பில் இறங்கி நடன மாட வேண்டும் என்று கட் டாயப்படுத்தினர். இதற்கு அவர் தயக் கம் காட்டவே, அந்த கும்பல் முதியவரின் கையை பிடித்து உள்ளே இறக்கி விட்டனர். மேலும் அவர்கள் முதிய வரை வெளியே வர விடாமல் உள்ளே நிற்க வைத்து சித்திரவதை செய்தனர். நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் காட் சிகளை கிராம மக்களும் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
நெருப்பின் வெப்பம் தாங்க முடி யாமல் முதியவர் நெருப்புக் குழியில் அங்கும், இங்கும் ஓடினார். சிறிது நேரத் துக்கு பின்னரே கும்பல், முதியவரை நெருப்பில் இருந்து வெளியே வர அனுமதித்தனர்.

இதற்கிடையே அந்த கும்பலின் கொடூர செயலால் முதியவரின் கால் உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற் பட்டது. இந்த நிகழ்வு குறித்து முதியவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மூடநம்பிக்கை ஒழிப் புச் சட்டம், காயம் ஏற்படுத்துதல் உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கும் பலைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

முதியவரை கிராமத்தினர் கட் டாயப் படுத்தி நெருப்பில் இறங்க வைத்த காட்சிப் பதிவுகள் தற்போது சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சனி, 9 மார்ச், 2024

பக்தி படுத்தும் பாடு சிறுமி பாலியல் வன்கொடுமை:மடாதிபதி கைது

 


விடுதலை நாளேடு

பெங்களூரு மார்ச் 9 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மடாதிபதியை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளரும் காவல்துறையினரிடம் சிக்கினார்.

கருநாடகத்தின் துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில் ஹங்க ரனஹள்னி வித்யாசவுடேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள இந்த கோவிலுக்குச் சொந்தமான மடத் தின் மடாதிபதியாக பாலமஞ்சுநாதா சுவாமி என்பவர் இருக்கிறார். அவருக்கு உடலில் தோல் நோய் ஏற்பட்டது.

இதுபற்றி அவர் தனது மேனாள் உதவியாளர் அபிஷேக் என்பவரிடம் கூறியுள்ளார். அவர், டாக்டர் என கூறி ஒரு இளம்பெண்ணை மடாதிபதிக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஆனால், அந்த இளம்பெண்ணிடம் நேரடியாக தனது உடலில் உள்ள பிரச் சினைகளைக் காண்பிக்க மறுத்த மடாதி பதி, அந்த இளம் பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தன்னுடைய உடலில் உள்ள தோல் நோய் தொடர்பான ஒளிப் படங்களை அனுப்பினார். பின்னர் காட்சிப் பதிவு அழைப்பு மூலம் பேசி உடல் பிரச்சினைகளை காண்பித்தார்.
அதை அந்த இளம்பெண், மடாதி பதியின் மேனாள் உதவியாளர் அபி ஷேக் உள்ளிட்டோர் சேர்ந்து கைப்பேசி யில் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அதை வைத்து மடாதிபதியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
இதுபற்றி மடாதிபதி தனது தற் போதைய உதவியாளர் அபிலாஷ் என்பவர் மூலம், சைபர் கிரைம் காவல் துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் அபிஷேக், பெங்க ளூருவைச் சேர்ந்த அந்த இளம்பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய் தனர். இந்த நிகழ்வு கடந்த மாதம் நடந்தது.

இந்த நிலையில், அபி ஷேக்கை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். அதில் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, தனது மடத்தில் 18 வயது நிரம்பாத சிறுமி யைத் தொடர்ந்து பாலியல் வன் கொடுமை செய்து வருவதாகக் கூறி னார்.
அதையடுத்து கடந்த 7 ஆம் தேதி இரவு காவல்துறையினர் மடத்தில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவ ணங்களைக் கைப்பற்றினர். மேலும் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த தும் தெரியவந்தது. அதையடுத்து காவல் துறையினர் பால மஞ்சுநாதா சுவாமி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் அபிலாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் மீது ஹூலியூர் துர்கா காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வியாழன், 25 ஜனவரி, 2024

பெண் சாமியார் என்று வேடங்கட்டி பணத்தைக் குவித்தவர்களுக்கிடையே மோதல்!