சனி, 9 மார்ச், 2024

பக்தி படுத்தும் பாடு சிறுமி பாலியல் வன்கொடுமை:மடாதிபதி கைது

 


விடுதலை நாளேடு

பெங்களூரு மார்ச் 9 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மடாதிபதியை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளரும் காவல்துறையினரிடம் சிக்கினார்.

கருநாடகத்தின் துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில் ஹங்க ரனஹள்னி வித்யாசவுடேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள இந்த கோவிலுக்குச் சொந்தமான மடத் தின் மடாதிபதியாக பாலமஞ்சுநாதா சுவாமி என்பவர் இருக்கிறார். அவருக்கு உடலில் தோல் நோய் ஏற்பட்டது.

இதுபற்றி அவர் தனது மேனாள் உதவியாளர் அபிஷேக் என்பவரிடம் கூறியுள்ளார். அவர், டாக்டர் என கூறி ஒரு இளம்பெண்ணை மடாதிபதிக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஆனால், அந்த இளம்பெண்ணிடம் நேரடியாக தனது உடலில் உள்ள பிரச் சினைகளைக் காண்பிக்க மறுத்த மடாதி பதி, அந்த இளம் பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தன்னுடைய உடலில் உள்ள தோல் நோய் தொடர்பான ஒளிப் படங்களை அனுப்பினார். பின்னர் காட்சிப் பதிவு அழைப்பு மூலம் பேசி உடல் பிரச்சினைகளை காண்பித்தார்.
அதை அந்த இளம்பெண், மடாதி பதியின் மேனாள் உதவியாளர் அபி ஷேக் உள்ளிட்டோர் சேர்ந்து கைப்பேசி யில் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அதை வைத்து மடாதிபதியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
இதுபற்றி மடாதிபதி தனது தற் போதைய உதவியாளர் அபிலாஷ் என்பவர் மூலம், சைபர் கிரைம் காவல் துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் அபிஷேக், பெங்க ளூருவைச் சேர்ந்த அந்த இளம்பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய் தனர். இந்த நிகழ்வு கடந்த மாதம் நடந்தது.

இந்த நிலையில், அபி ஷேக்கை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். அதில் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, தனது மடத்தில் 18 வயது நிரம்பாத சிறுமி யைத் தொடர்ந்து பாலியல் வன் கொடுமை செய்து வருவதாகக் கூறி னார்.
அதையடுத்து கடந்த 7 ஆம் தேதி இரவு காவல்துறையினர் மடத்தில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவ ணங்களைக் கைப்பற்றினர். மேலும் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த தும் தெரியவந்தது. அதையடுத்து காவல் துறையினர் பால மஞ்சுநாதா சுவாமி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் அபிலாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் மீது ஹூலியூர் துர்கா காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக