புதன், 11 செப்டம்பர், 2019

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளிடம் பாலியல் வன்முறை

பாஜக அமைச்சரின் முகத்திரையைக் கிழித்த மாணவி


ஷாஜகான்பூர், செப்.11, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று சமூக இணையளத்தில் காணொலி ஒன்று வெளியிட்டார். அதில் தான் படித்த கல்லூரியை நடத்தி வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சின்மயானந்த்(72) தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்றும் கொன்றுவிடுவதாக மிரட்டுவ தாகவும் புகார் கூறினார். அடுத்த நாளே அவர் காணாமல் போனார். இது குறித்து அந்த மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் காணாமல் போன அந்த மாணவி ராஜஸ் தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் ஷாஜகான்பூரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சின்மயானந்த், என்னை பலாத்காரம் செய்தார். ஓராண் டுக்கு மேலாக எனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு என்னிடம் காணொலி உட்பட அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவர் பல மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்றார்.

-  விடுதலை நாளேடு, 11.9.19

புதன், 4 செப்டம்பர், 2019

தோஷம் கழிப்பதாகக் கூறி மோசடி: சாமியார்கள் கைது

சென்னை, ஆக.13 சென்னையில் தோஷம் கழிப்பதாகக் கூறி மோசடி யில் ஈடுபட்ட  சாமியார்களை காவல் துறையினர்  விரட்டிப் பிடித்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங்கரை ஆசிரியர் காலனியில் ஓய்வு பெற்ற அரசு வங்கி அதிகாரி சந்திரபால் பாண்டியன்(65) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். பின்னர் மகனின் உயிரிழப்பு குறித்து தெரிந்து கொள்ள குடும்பத்துடன் திருவண் ணாமலைக்கு சென்று குறி கேட்டுள்ளனர்.

அப்போது முகவரியை பெற்ற   சாமியார்கள்,  தங்களது குழுவை சேர்ந்த 5 பேரை கடந்த மாதம் 21-ஆம் தேதி அந்த வீட்டிற்கு அனுப்பி மகன் இறந்ததை கூறி வீட்டின் உரிமையாளரை நம்ப வைத்து பின்னர் தோஷம் கழிக்க வேண்டும் என கூறியதால் அவர்களும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அங்கு  சாமியார்கள் பூஜை செய்துவிட்டு 4 பவுன் நகை, ரூ. 1,000 ரூபாய் ஆகிய வற்றுடன் காரில் தப்பிச் சென்றனர். பின்னர், வீட்டின் உரிமையாளர் பூஜையில் வைத்த நகை காணாமல் போனதை அறிந்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில்  தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை நடத்திய காவல்துறை நீலாங்கரை, அடையார், போரூர், சிறீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 60- க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக் களை ஆய்வு செய்தனர். இதையடுத்து வாகனப் பதிவு எண் மூலம் அதன் உரிமையாளர் ராம்ஜி என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணை யில் காரை ஆறு மாதத்திற்கு முன்பு அண்ணாநகர் கார் விற்பனையகத் தில் விற்பனை செய்ததும்,  வேலூர் காட்பாடியைச் சேர்ந்த செந்தில் என்பவர் வாங்கியதும் தெரியவந்தது.

அவரைப் பிடித்த தனிப்படை காவல்துறையினர் அவரது உறவின ரும்  சாமியாருமான திருவண்ணா மலையைச் சேர்ந்த ஜோசபை(67) கைது செய்தனர்.  ஜோசப் கைது செய்யப்பட்டதை அறிந்த உதய குமார்(37) சென்னை அண்ணா சாலை அருகே காரில் தப்பிச் செல்வதை செல்லிடப்பேசி சிக்னல் மூலம் தெரிந்து கொண்ட காவ லர்கள் இரண்டு இருசக்கர வாகனத் தில் காரைத் துரத்தி உதயகுமாரை கைது செய்து அவர்களிடமிருந்து கார், 4 பவுன் தங்க நகை, பணம்  ஆகியவற்றைப் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரைத் தேடி வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 13. 8 .19

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

பலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புக்கூடு குவியல்கள்

லிமா, செப். 1- பெரு நாட்டின் தலைநகரான லிமாவின் வடக்குக் கடற்கரை பகுதியில் உள்ள மிகப் பெரிய பலியிடும் பீடத்தின் அருகில் 227 குழந்தைகளின் எலும்பு கூடு களை கண்டறிந்துள்ளனர்.  கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த கடற்கரைக்கு அருகில் உள்ள பம்பா-லா-க்ரூஸ் நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச் சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட் டபோது 56 குழந்தைகளின் எலும் புக்கூடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டன. அதன் விளை வாக கடந்த ஆண்டில் பம்பா-லா-க்ரூஸில் பலியிடப்பட்ட 140 குழந் தைகள் மற்றும் 200 ஒட்டகங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த கடற்கரை பகுதியில் கண்டறியப் பட்ட பலிபீடத்தில் 227 குழந்தை களின் எலும்புக்கூடுகள் கண்டறி யப்பட்டுள்ளன. இதுகுறித்து தலைமை தொல்பொருள் ஆராய்ச் சியாளர் ஃபெரன் காஸ்டிலோ கூறுகையில், "பலியிடப்பட்ட குழந் தைகளின் எலும்புகள் கண்டெடுக் கப்பட்ட மிகப்பெரிய தளம் இது. கடவுள்களை கவுரவிக்கவும், எல் நினோ நிகழ்வு நடக்காமல் இருக்க இயற்கையை சமாதானப்படுத்தவும் 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பலியிடப்பட்டுள் ளனர்" என தெரிவித்தார்.
மேலும், கி.பி.1200_1475ஆம் ஆண்டுவரை பெரு நாட்டில் நிலவி வந்த சிமு நாகரீகத்தில்தான் இந்த பலியிடல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
- விடுதலை நாளேடு, 1.9.19

செவ்வாய், 28 மே, 2019

பில்லி சூன்ய ஏமாற்று சாமியார் பெண்ணை சூறையாடிய கேவலம்



விழுப்புரம், மே28, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மாந்திரீகம் செய்வதாகக் கூறி, பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட  சாமியார், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட் டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கிற செல்வமணி (வயது 40). இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேடு ஆகும். திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாக வும் கூறி வந்துள்ளார்.

இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத் தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் வலம் வந்தார். அவரை நம்பியவர்களில் பெண் கள் பலரும் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடிச் சென் றுள்ளனர். அந்த சமயத்தில் அவர் களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடு களுக்கு சென்று வந்தார். இதில் பல பெண்களை ஏமாற்றி, அவர்களை கணவரிடமிருந்து பிரித்து, தன்வச மாக்கி குடும்பம் நடத்தி வந்ததாக வும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடியும் சென்றுள்ளார்.

தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

மாந்திரீகம், பில்லி சூனியம் நீக்குவதாக கூறி திண்டிவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களான பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள் ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள் ளார். பில்லி சூனியம் எடுப்பதுபோல் சென்று, பெண்களையும் ஏமாற்றி வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மணியை செல்பேசிமூலம் தொடர்பு கொண்டார். அப்போது தனது மகனின் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது, அதை நீங்கள் வந்து சரிசெய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சாமியார் மணி அவரது வீட்டுக்கு நேரடியாக சென் றார். அங்கு அவர்களது பிரச்சி னைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள வர்களின் விவரங்களை கேட்டறிந் தார். அப்போது, அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து, உங்கள் ஊரில் ஒரு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் பறந்து போய் விடும் என்று தெரிவித்தார். கோவில் கட்டும் போது உங்களது மகள் வீட்டில் இருந்தால் அவளுக்கு ஆகாது, எனவே எனது பாதுகாப்பில் அவள் இருக்க வேண் டும் என்று தெரிவித்தார்.

இதை நம்பிய அவர்கள், தங் களது மகளை சாமியாரோடு அனுப்பி வைத்தனர். அதன்படி அந்த இளம்பெண்ணை சாமியார் ஓங்கூருக்கு அழைத்து வந்தார். பல மாதங்களாக தன்னுடன் இருந்த, அந்த இளம்பெண்ணுக்கு 19-ஆவது வயது பிறந்தவுடன், அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகளை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகை யால் எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டார்.

இதை கேட்டு இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் ஆசைக்கு இளம் பெண்ணும் சம்மதிக்கவில்லை. எனவே அவரிடம், உனது அண் ணனின் பிரச்சினை தீர வேண்டும் என்றால், நீ என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே முடியும் எனக்கூறி ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இளம் பெண் ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்.

இது குறித்து தனது தந்தையிடம் இளம்பெண் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் விஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

பாலியல் வன்முறை புகாரில் சாமியார் மணியும், அவருக்கு உத விய பெண் ஹேமாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு மோசடிகளை செய்து வந்துள்ளார் என்பது தெரிய வந் தது. ஹேமாவை அவரது கணவரி டம் இருந்து பிரித்து வந்து தன்வசப் படுத்திக்கொண்டதும் தெரியவந் தது. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப் பிலையுடன் வலம் வந்துள்ளார்.அவர் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் எனும் கோணத்தில்  காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 28.5.19

வெள்ளி, 10 மே, 2019

இந்திய சாமியாரின் ஆபாசக் கைவரிசை!

ஆஸ்திரேலியாவில் ஆசாமி கைது!




பாலியல் தொடர்பான குற்றத்திற்காக கைதாகி சிட்னி சிறையில் உள்ள சாமியார்


ஆனந்த் கிரியுடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்.


சிட்னி,மே10இந்தியாவைச்சேர்ந்த சாமி யார் ஆனந்த் கிரி என்பவர் பாலியல் தொடர்பான குற்றத்திற்காக ஆஸ்தி ரேலியா நாட்டில் கைது செய்யப்பட் டுள்ளார். இவரது பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அல காபாத் நகரத்திலுள்ள அனுமான் கோயிலில் சாமியாராக இருப்பவர் ஆனந்த் கிரி. இவர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றிருந்தபோது பெண் ணிடம் தவறான செய்கையில் ஈடுபட்டு ஆஸ்திரேலியாவில் கம்பி எண்ணுகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூட்டி ஹில் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் யாகம் செய்ய சென்றுள்ளார். அப்போது 34 வயதுள்ள ஒரு பெண் ணிடம் தவறான நோக்கத்தோடு உடல் பாகத்தில் கை வைத்துள்ளார். இதை அந்தப் பெண் தட்டிக்கேட்டார். உடனே அவரும், அவருடன் சென்றவர்களும் அந்தப்பெண்ணை தாக்கினார்கள். இதே போல்  2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 29 வயதுடைய ஒரு பெண்ணிடம் தனது குறும்புத்தனத்தைக் காட்டினார். இந்த இரண்டு பேரும் சிட்னி காவல்துறையிடம் புகார் அளித்தி ருந்தனர். இந்த நிலையில் இவர் மீண்டும் சிட்னி சென்றார்.

அங்குள்ள ஒரு பொது இடத்தில் மதம் தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அவரை சிட்னி காவ லர்கள் கைது செய்தனர். பின்னர் பிணையில் விடுவிக்குமாறு சிட்னி நீதிமன்றத்தில் இவர் சார்பாக வழக் குரைஞர்கள் மனுதாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது. மீண்டும் சிறை வைக் கப்பட்டுள்ள இவர் மீதான வழக்கை ஜூன் 23 ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்திய தூதரகமே வழக்கிற்கு உதவியது.


சாமியார் மீதான பாலியல் குற்றச் சாட்டு மற்றும் பெண்ணைத் தாக்கியது தொடர்பான வழக்கில் இந்திய தூத ரகமே சாமியார் ஆனந்த கிரிக்கு ஆதர வாக வழக்குரைஞர்களை அமர்த்தி வாதாடியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் விசா குளறுபடி களால் மாணவர்கள் பலர் கல்வியை பாதியிலேயே விட்டு விட்டு நாடு திரும்பிய நிலையில் இதற்கு உதவாத இந்திய தூதரகம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட சாமியாருக்குத் தொடர்ந்து விசா வழங்கியதுமல்லாமல் அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கும் சென்று வாதாடியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

- விடுதலை நாளேடு, 10.5.19

வியாழன், 4 ஏப்ரல், 2019

கா(லி)விகளின் ஒழுக்கம்?

சிறுமி வன்புணர்வு- கொலை!


இந்து பாரத் சேனா நிர்வாகி கைது


கோவை, ஏப்.2 கோவை துடியலூர் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்விற்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாரத இந்து சேனா என்ற அமைப்பினர் கைதாகியுள்ளனர்.

கோவைக்கு அருகில் உள்ள பொள் ளாச்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த கொடூர பாலியல் வன்புணர்வு நிகழ்வு நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் போது திடீரென்று கோவை புறநகர் துடியலூரில் 8 வயது சிறுமி பாலியல்வன்கொடுமைக்கு ஆட்பட்டு கொல்லப்பட்டது உடற்கூறு பரிசோ தனையில் உறுதியானது, 5 நாட்களாக குற்றவாளியைத் தேடிவந்த காவல் துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த பாரத் இந்து சேனா என்ற அமைப்பினர் மீது சந்தேகம் வரவே அந்த அமைப் பில் உள்ள விஜயகுமார் என்பவரை விசாரித்த நிலையில் அதே அமைப் பைச் சேர்ந்த பாரத் இந்து சேனா நிர்வாகி சந்தோஷ் குமார் என்பவர் இந்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டார்.

ஏற்கனவே இந்த அமைப்பினர் அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத் துவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் சரியான சான்றுகள் இல்லாமல் நடவ டிக்கை எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.  இந்த நிலையில், அந்த இந்து அமைப் பினரால் சிறுமி கொலை செய்யப்பட் டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

- விடுதலை நாளேடு, 2.4.19

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவனந்தபுரம், பிப்.17 கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், பாதிரி யாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான ராபின் வடக்கன் செரிலுக்கு (51) பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ), இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.வினோத் சனிக்கிழமை தீர்ப் பளித்தார். இந்த தண்டனையை, அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ராபினுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில், பாதித் தொகை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும். இதுதவிர, வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக, அரசு தரப்பு வழக் குரைஞர் பீனா கூறியதாவது: கடந்த 2016-இல் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கினார். 2017-ஆம் ஆண் டில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்துபரம்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அந்தக் குழந்தை, வயநாடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப் பட்டது.
மாவட்ட சிறார் பாதுகாப்பு ஆணை யத்துக்கு வந்த தொலைபேசித் தகவலை அடுத்து, சிறுமி பலாத்கார சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. முதலில், பாலியல் குற்ற சம்பவத்தை மூடி மறைத்ததற்காக, சிறுமியின் தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையின் 2 மருத்துவர்கள், அந்த மருத்துவமனை நிர்வாகி, வயநாடு சமூகநலத் துறையின் முன்னாள் தலைவர் தாமஸ் ஜோசப் தேரகம், அந்தக் குழுவின் உறுப்பினர் பெட்டி ஜோஸ், வயநாடு ஆதரவற்றோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஒபிலியா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் தெரிந்த பிறகு, காவல் துறைக்கு தெரி விக்காமல், அதை மூடி மறைத்ததற்காக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும், போதிய ஆதாரங்கள் இல் லாததால், அவர்கள் 6 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று அந்த வழக்குரைஞர் கூறினார்.
-  விடுதலை நாளேடு, 17.2.19

புதன், 23 ஜனவரி, 2019

மந்திரத்தால் குழந்தை பிறக்குமா? (தலைப்புரை)

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே புதூர் கிராமத்தை  சேர்ந்தவர்  பிரபாகரன் (35). இவர் பெயிண்டர். இவரது மனைவி ஜானகி (30). கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணமான இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தைப்பேறு வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமரைதாங்கல் பகுதியை சேர்ந்த சாமியார் பாபு (42) என்பவரை சந்தித்துள்ளனர்.  அப்போது சாமியார், பவுர்ணமி அன்று இரவு பூஜை செய்தால் உங்களுக்குக் கண்டிப்பாகக் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பூஜைக்கு தம்பதியினர் சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி கடந்த 20ஆம்தேதி அன்று நள்ளிரவு  பவுர்ணமியில் சாமியார் பாபு நடத்திய சிறப்பு! பூஜையில்  பிரபாகரன், ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். சாமியார் கேட்டுக்கொண்டபடி ஜானகி தனது பவுன் சங்கிலி, கம்மல் ஆகியவற்றைக் கழற்றி பூஜையில் வைத்துள்ளார்.

சாமியார் 'பயபக்தியுடன்' மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்க, அவ்விருவரும், கண்களை மூடி சாமியார் சொன்ன மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாமியார் பாபு, அங்கிருந்த பெரிய  கல்லை எடுத்து பிரபாகரனின் முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியதால் பிரபாகரன் மயங்கி விழுந்ததால்  அதிர்ச்சி அடைந்த ஜானகி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்  வருவதையறிந்த சாமியார், பூஜையில் வைத்திருந்த ஜானகியின் நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

அதன்பிறகு ஜானகி நடந்த விஷயங்களை சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து சாமியார் வீட்டின் முன் மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து, காஞ்சிபுரம் வட்ட காவல்துறை ஆய்வாளர்  ராஜாங்கம் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு மயங்கிக் கிடந்த பிரபாகரனை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக  சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் காவல்துறை துணைக் கண்காணிப் பாளர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.   காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடி சாமியார் பாபுவைத் தேடி வருகின்றனர்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இது போன்ற நிகழ்வுகள் வெட்கப்படத்தக்கவை!

குழந்தைப் பேற்றுக்கும் மந்திரங்கள் ஓதுவதற்கும் என்ன சம்பந்தம்? இரண்டு பெண்டாட்டிக்காரனான விநாயனுக்கே குழந்தை இல்லையே. அப்படி இருக்கும் பொழுது மதச் சடங்குகளைச் செய்வது மடத்தனத்தின் உச்சக் கட்டம் அல்லவா?

ஆன்மிக இதழ்களை வெளியிடும் நாளேடுகளும் இதற்கு முக்கிய காரணமாகும். விஞ்ஞான கருவி களைப் பயன்படுத்தி  அச்சிட்ட அதில் அறிவுக்குப் புறம்பான ஆபாச மூடத்தனங்களைப் பக்திப் போர்வையில் வாசிப்போரின் மூளைக்குள் திணிக்க லாமா?

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் பரப்ப வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக (51A-h) வெளியிடப்படும் ஆன்மிக இதழ்களுக்கு மூக்காணங் கயிறு தேவை.

-  விடுதலை நாளேடு, 22.1.19

வெள்ளி, 4 ஜனவரி, 2019

இளம்பெண்ணை கோயிலில் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவு!

அயோத்தியில் தலைமை அர்ச்சகர் கைது




அயோத்தி, ஜன.4 -அயோத்தியில், கோயிலுக்கு வந்த பெண்ணை உள்ளேயேஅடைத்துவைத்து, பலமுறை பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கிய சம்ப வம் நடந்துள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தலைமை அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தி லுள்ள அயோத்தி, கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி இங்குள்ள கோயில் ஒன்றுக்கு, வாரணாசியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் வழிபாட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள தலைமை அர்ச்சகர், அந்தப் பெண்ணிடம் ஆன்மிகம் தொடர்பாக பேசிக் கொண்டே கோயிலில் இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று அடைத்துள்ளார். பின்னர் ஒருவாரமாக அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். கடும் சித்ரவதையை அனுபவித்து வந்த அந்த இளம்பெண், செவ்வாய்க்கிழமையன்று கோயிலில் இருந்து தப்பி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற்று, மருத்துவ பரிசோதனைகளை நடத்திய காவல்துறையினர், தலைமை அர்ச்சகரை தற்போது கைது செய்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 4.1.19