புதன், 4 செப்டம்பர், 2019

தோஷம் கழிப்பதாகக் கூறி மோசடி: சாமியார்கள் கைது

சென்னை, ஆக.13 சென்னையில் தோஷம் கழிப்பதாகக் கூறி மோசடி யில் ஈடுபட்ட  சாமியார்களை காவல் துறையினர்  விரட்டிப் பிடித்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங்கரை ஆசிரியர் காலனியில் ஓய்வு பெற்ற அரசு வங்கி அதிகாரி சந்திரபால் பாண்டியன்(65) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். பின்னர் மகனின் உயிரிழப்பு குறித்து தெரிந்து கொள்ள குடும்பத்துடன் திருவண் ணாமலைக்கு சென்று குறி கேட்டுள்ளனர்.

அப்போது முகவரியை பெற்ற   சாமியார்கள்,  தங்களது குழுவை சேர்ந்த 5 பேரை கடந்த மாதம் 21-ஆம் தேதி அந்த வீட்டிற்கு அனுப்பி மகன் இறந்ததை கூறி வீட்டின் உரிமையாளரை நம்ப வைத்து பின்னர் தோஷம் கழிக்க வேண்டும் என கூறியதால் அவர்களும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அங்கு  சாமியார்கள் பூஜை செய்துவிட்டு 4 பவுன் நகை, ரூ. 1,000 ரூபாய் ஆகிய வற்றுடன் காரில் தப்பிச் சென்றனர். பின்னர், வீட்டின் உரிமையாளர் பூஜையில் வைத்த நகை காணாமல் போனதை அறிந்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில்  தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை நடத்திய காவல்துறை நீலாங்கரை, அடையார், போரூர், சிறீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 60- க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக் களை ஆய்வு செய்தனர். இதையடுத்து வாகனப் பதிவு எண் மூலம் அதன் உரிமையாளர் ராம்ஜி என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணை யில் காரை ஆறு மாதத்திற்கு முன்பு அண்ணாநகர் கார் விற்பனையகத் தில் விற்பனை செய்ததும்,  வேலூர் காட்பாடியைச் சேர்ந்த செந்தில் என்பவர் வாங்கியதும் தெரியவந்தது.

அவரைப் பிடித்த தனிப்படை காவல்துறையினர் அவரது உறவின ரும்  சாமியாருமான திருவண்ணா மலையைச் சேர்ந்த ஜோசபை(67) கைது செய்தனர்.  ஜோசப் கைது செய்யப்பட்டதை அறிந்த உதய குமார்(37) சென்னை அண்ணா சாலை அருகே காரில் தப்பிச் செல்வதை செல்லிடப்பேசி சிக்னல் மூலம் தெரிந்து கொண்ட காவ லர்கள் இரண்டு இருசக்கர வாகனத் தில் காரைத் துரத்தி உதயகுமாரை கைது செய்து அவர்களிடமிருந்து கார், 4 பவுன் தங்க நகை, பணம்  ஆகியவற்றைப் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரைத் தேடி வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 13. 8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக