வியாழன், 14 மார்ச், 2024

மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி 75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம்


மூடநம்பிக்கையின் உச்சம்

விடுதலை நாளேடு

 மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி

75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம்
கிராம மக்கள் மீது காவல்துறை வழக்கு

மும்பை,மார்ச் 8- பில்லி, சூனியம் வைப்ப தாக சந்தேகப்பட்டு ஒரு வரை கோவில் திருவிழாவில் ஒரு கும்பல் கட்டாயப் படுத்தி நெருப்பில் தள்ளி விட்ட கொடூரம் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலம் தானே மாவட் டத்தில் உள்ள கேர்வலே கிராமத்தில் லட்சுமண் என்ற 75 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் மாந்திரீக வேலையில் ஈடு பட்டு பில்லி, சூனியம் வைப்பதாக கிராமத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகப் பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இதில் தீ மிதிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி!

அப்போது திடீரென கிராமத்தைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் லட்சுமண் வீட்டுக்கு வந்த னர். அவர்கள் தீ மிதி நடக்கும் பகுதிக்கு அவரை அடித்து இழுத்துச் சென்றனர். மாந்திரீக வேலையில் ஈடுபடும் உனக்கு இதுதான் தண்டனை எனக்கூறி, அந்த முதியவரை மிரட்டி, நெருப்பில் இறங்கி நடன மாட வேண்டும் என்று கட் டாயப்படுத்தினர். இதற்கு அவர் தயக் கம் காட்டவே, அந்த கும்பல் முதியவரின் கையை பிடித்து உள்ளே இறக்கி விட்டனர். மேலும் அவர்கள் முதிய வரை வெளியே வர விடாமல் உள்ளே நிற்க வைத்து சித்திரவதை செய்தனர். நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் காட் சிகளை கிராம மக்களும் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
நெருப்பின் வெப்பம் தாங்க முடி யாமல் முதியவர் நெருப்புக் குழியில் அங்கும், இங்கும் ஓடினார். சிறிது நேரத் துக்கு பின்னரே கும்பல், முதியவரை நெருப்பில் இருந்து வெளியே வர அனுமதித்தனர்.

இதற்கிடையே அந்த கும்பலின் கொடூர செயலால் முதியவரின் கால் உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற் பட்டது. இந்த நிகழ்வு குறித்து முதியவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மூடநம்பிக்கை ஒழிப் புச் சட்டம், காயம் ஏற்படுத்துதல் உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கும் பலைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

முதியவரை கிராமத்தினர் கட் டாயப் படுத்தி நெருப்பில் இறங்க வைத்த காட்சிப் பதிவுகள் தற்போது சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சனி, 9 மார்ச், 2024

பக்தி படுத்தும் பாடு சிறுமி பாலியல் வன்கொடுமை:மடாதிபதி கைது

 


விடுதலை நாளேடு

பெங்களூரு மார்ச் 9 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மடாதிபதியை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளரும் காவல்துறையினரிடம் சிக்கினார்.

கருநாடகத்தின் துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில் ஹங்க ரனஹள்னி வித்யாசவுடேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள இந்த கோவிலுக்குச் சொந்தமான மடத் தின் மடாதிபதியாக பாலமஞ்சுநாதா சுவாமி என்பவர் இருக்கிறார். அவருக்கு உடலில் தோல் நோய் ஏற்பட்டது.

இதுபற்றி அவர் தனது மேனாள் உதவியாளர் அபிஷேக் என்பவரிடம் கூறியுள்ளார். அவர், டாக்டர் என கூறி ஒரு இளம்பெண்ணை மடாதிபதிக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஆனால், அந்த இளம்பெண்ணிடம் நேரடியாக தனது உடலில் உள்ள பிரச் சினைகளைக் காண்பிக்க மறுத்த மடாதி பதி, அந்த இளம் பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தன்னுடைய உடலில் உள்ள தோல் நோய் தொடர்பான ஒளிப் படங்களை அனுப்பினார். பின்னர் காட்சிப் பதிவு அழைப்பு மூலம் பேசி உடல் பிரச்சினைகளை காண்பித்தார்.
அதை அந்த இளம்பெண், மடாதி பதியின் மேனாள் உதவியாளர் அபி ஷேக் உள்ளிட்டோர் சேர்ந்து கைப்பேசி யில் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அதை வைத்து மடாதிபதியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
இதுபற்றி மடாதிபதி தனது தற் போதைய உதவியாளர் அபிலாஷ் என்பவர் மூலம், சைபர் கிரைம் காவல் துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் அபிஷேக், பெங்க ளூருவைச் சேர்ந்த அந்த இளம்பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய் தனர். இந்த நிகழ்வு கடந்த மாதம் நடந்தது.

இந்த நிலையில், அபி ஷேக்கை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். அதில் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, தனது மடத்தில் 18 வயது நிரம்பாத சிறுமி யைத் தொடர்ந்து பாலியல் வன் கொடுமை செய்து வருவதாகக் கூறி னார்.
அதையடுத்து கடந்த 7 ஆம் தேதி இரவு காவல்துறையினர் மடத்தில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவ ணங்களைக் கைப்பற்றினர். மேலும் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த தும் தெரியவந்தது. அதையடுத்து காவல் துறையினர் பால மஞ்சுநாதா சுவாமி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் அபிலாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் மீது ஹூலியூர் துர்கா காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வியாழன், 25 ஜனவரி, 2024

பெண் சாமியார் என்று வேடங்கட்டி பணத்தைக் குவித்தவர்களுக்கிடையே மோதல்!


செவ்வாய், 28 நவம்பர், 2023

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

சாமியார்கள்... ஜாக்கிரதை!

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

கோவை, ஏப். 19- கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் ஒன்றை கொடுத் தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திரும ணத்துக்கு பின் நானும், எனது கணவரும் அய்தராபாத்தில் வசித்து வந்தோம். திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நாங்கள் கோவில், கோவிலாக சென்று வந்தோம். அப்போது மத்தியப் பிரதேசத்தில் ஆசிரமம் நடத்தி வரும் ஒரு சாமியார் பற்றி எனது கணவர் அறிந்தார். அவரை சந்தித்து எங்க ளுக்கு குழந்தை இல்லாத விவ ரத்தை தெரிவித்துள்ளார். அந்த சாமியார் சொன்னபடி எனது கணவர் வீட்டுக்கு வந்து இரவு நேரங்களில் பூஜைகளை நடத் தினார்.

ஆக்ரோஷமாக இருந்த அந்த பூஜைகளை பார்த்து நான் அச்சம் கொண்டேன். சாமியார் இப்படித் தான் பூஜைகளை செய்யச் சொன் னார் என்று கூறி எனது கணவர் தெரிவித்து என்னை சமாளித்தார். இந்தநிலையில் சாமியார் பெங் களூர் வந்திருந்தார்.

அவரை பார்க்க எனது கணவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கு தனி அறைக்கு வரச்சொன்ன சாமியார், அவருடைய ஆசைக்கு என்னை இணங்குமாறு கூறினார். அப்போது தான் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என தெரிவித்தார். நான் மறுப்பு தெரிவித்து வெளியே வந்து விட்டேன்.

இதுபற்றி கணவரிடம் தெரிவித்தேன். அவரோ எந்தவித கோபமும் கொள்ளாமல் சாமியார் சொல்படி நடந்து கொள் என தெரிவித்தார். எனது கணவரின் தோழி ஒருவரும் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு சாமியார் சொல்வதை கேட்கும்படி கூறினார். ஆனால் யார் சொல்லை யும் நான் கேட்கவில்லை.

அதன்பிறகு நான் எனது பெற் றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். சில மாதங்கள் கழித்து அய்தரா பாத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றேன். ஆனால் கணவர் என்னை வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டார். சாமி யார் உன்னுடன் வாழக் கூடாது என கூறி இருப்பதாக தெரிவித்து என்னுடன் பேச மறுத்தார்.

அந்த சமயம் சாமியார் என்னை தொடர்பு கொண்டு எனது ஆசைக்கு இணங்கினால் தான் உன் கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்வேன் என்று மிரட் டினார். ஆசைக்கு இணங்காததால் அந்த சாமியார் எனது வாழ்க் கையே அழித்து விட்டார்.

எனவே அந்த சாமியார், எனது கணவர், கணவரின் தோழி ஆகி யோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் கிழக்கு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விவரம் தெரியவந்தது.

மேலும் புகார் மனுவில் அந்த பெண் கூறியுள்ள விவரங்கள் உண்மை தானா என்பது பற்றி விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை யினர் தெரிவித்தனர்.

குழந்தைப் பேறு வேண்டி வந்தவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : சாமியார் கைது

சாமியார்கள்! ஜாக்கிரதை

குழந்தைப் பேறு வேண்டி வந்தவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : சாமியார் கைது

சேலம், நவ. 23 - குழந்தை பேறுக்காக பரிகாரம் தேடி வந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் கோவில் பூசாரி. அவரை கைது செய்த காவல்துறை, அவரது கூட்டாளியை யும் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சேடப்பட்டி பகு தியை சேர்ந்த 38 வயதாகும் பசவராஜ் என்பவருடைய மனைவி செல்வி. இவருக்கு 28 வயது ஆகிறது. பசவராஜ் பெங்களூருவில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். பசவராஜ் மற்றும் செல்வி இணையருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. இதுவரை இவர்க ளுக்கு குழந்தைகள் இல்லை.

குழந்தை பேறுக்காக கடந்த ஓர் ஆண்டாக செல்வி பல்வேறு இடங் களில் மருத்துவம் மற்றும் பரிகாரம் செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த 15ஆம் தேதி காலை செல்வி திடீரென காணாமல் போனார். மனைவியை காணவில்லை என தாரமங்கலம் காவல் துறையில் பசவராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சேலம் தாரமங்கலம் காவல்துறையினர் செல்வியை தேடி வந்தனர். இந்தநிலையில், திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம் மன் கோவில் அருகில் காட்டுப்பகுதியில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது தான், பிணமாக கிடந்தது பசவ ராஜ் மனைவி செல்வி என்பது தெரிய வந்தது.. விசாரணையில், அந்த பகு தியை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசியது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர் பூசாரி மற்றும் அவரது கூட்டாளி ஆகியோரை கைது செய்து கொலைக்கான கார ணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியார் கைது

சாமியார்கள் ஜாக்கிரதை!

ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  இவர் ஏற்கெனவே பெற்றோருடன் வந்த ஒரு சிறுமியை பெற்றோர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள நிலையில் தற்போது 2ஆவது முறையாக வசமாக சிக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வென்கோஜியில் ஞானானந்த ஆசிரமம் உள்ளது.  ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரபலமான இந்த ஆசிரமத்தின் தலைவராக சாமியார் பூர்ணானந்த சரஸ்வதி உள்ளார். 

பெற்றோரை இழந்த பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் ஏராளமானவர்கள் இந்த ஆசிரமத்தில் இருந்து வருகின்றனர். இங்கு 15 வயது சிறுமி ஒருவரும் தங்கி இருந்தார். இந்த குழந்தைகளின் பெயரைச்சொல்லி வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் இவரது மடத்திற்கு பலர் பணம் அனுப்பிவருகின்றனர். 

 வேத விற்பன்னர் மற்றும் அனைத்து உலக ஆசைகளில் இருந்தும் விடுபட்டு பூர்ணாகதி அடைந்தவர் என்ற பட்டத் தையும் சாமியார் அமைப்பு இவருக்குக் கொடுத்துள்ளது. இதனை அடுத்து இவர் பூர்ணானந்த சரஸ்வதி என்று அழைக்கப்பட்டார்

 இவர் மீது ஏற்கெனவே ஆசிரமத்தில் உள்ள சிறுமிகளுக்குப் பாலியல் ரீதியில் தொல்லை தருவதாகக் கூறி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. அந்தத் தொலைக்காட்சி செய்தியாளர் மிரட்டப்பட்டார். அதன் பிறகு அந்த பாலியல் வன்கொடுமை செய்தி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்திக்க  பெற்றோருடன் வந்த சிறுமி மீது ஆசைப்பட்டு பெற்றோருக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். 

 ஆனால் அவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாக அந்தக் கொடுமை பாலியல் தொல்லை என்று சாதாரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார்.  அன்றே அதிகாரவர்க்கம் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இந்நிலையில் தான் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி, தனது ஆசிரமத்தில் இருக்கும் மேலும் பல சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 

 அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் அவரது பாலியல் வக்கிரத்தின் கொடுமைகள் தாங்காமல் எதிர்ப்பு தெரிவித்தார்.  அதற்கு அந்தச் சாமியார் "நான் ஏற்கெனவே சிறைக்குச் சென்று வந்துள்ளேன். இனிமேல் என் மீது யார் புகார் கொடுத்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்

ஆகவே இதை வெளியில் சொன்னால் நீயும், இதர பிள்ளைகளும் பல கொடுமைகளை சந்திக்க நேரிடும்" என மிரட்டல் விடுத்தார்.

இதனால் அந்தச் சிறுமி சம்பவம் குறித்து வெளியில் கூற முடியாமல் மனம் நொந்து போனார். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மடாதிபதி பூர்ணானந்தா சரஸ்வதி, சிறுமியையும், ஆசிரமத்தில் உள்ள வேறு சில சிறுமிகளையும் தொடர்ந்து வலுக்கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சிறுமி யாருக்கும் தெரியாமல் ஆசிரமத்தை விட்டு வெளியேறி ரயில் மூலம் விஜயவாடா சென்றார். ரயில் நிலையத்தில் ஆதரவற்ற ஒரு சிறுமி ஒருவர் அழுது கொண்டு இருப்பதைக் கண்ட ரயில்வே காவல்துறையினர் அவரை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதபடி கூறியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து ஆசிரமம் இருக்கும் திஷா என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதியை உடனடியாக  கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

நாடு எந்தத் திசையில் போய்க் கொண்டு இருக் கிறது? சாமியார்கள் என்ற போர்வையில் காமவெறிக் கசடர்கள் கிளம்பி விட்டனர். நாட்டில் நடப்பது மதவாத ஆட்சியாயிற்றே!

சாமியார்கள் எத்தகைய மோசடிப் பேர் வழிகள் என்பதற்கு நித்தியானந்தா, ராம்தேவ் போன்றவர்களே போதுமானவர்கள்.

சாமியார்கள் ஜாக்கிரதை!

சாமியார்கள் எத்தகைய மோசடிப் பேர் வழிகள் என்பதற்கு நித்தியானந்தா, ராம்தேவ் போன்றவர்களே போதுமானவர்கள்.

நித்தியானந்தா தானே நிறுவியதாகக் கூறிக் கொள்ளும் கைலாசா நாடு, அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்தியாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி தப்பி ஓடி, தலைமறைவான நித்தியானந்தா, உலகின் முன்மாதிரி நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்காவிலேயே 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து சாதித்தது எப்படி என்ற கேள்வி அந்நாட்டையே உலுக்கியது.

தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் சாமியார் நித்தியானந்தா மீதான சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. பிரபல நடிகையுடன் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதன் பிறகு பெங்களூருவை அடுத்த பிடதியில் இருந்து முழு நேரமாக இயங்கத் தொடங்கிய நித்தியானந்தா, மதுரை ஆதினத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள், பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டார். இதனால், எழுந்த நெருக்கடி காரணமாகத் தலைமறைவான அவர், 2019ஆம் ஆண்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார். அதுமுதல் அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரிய வரவில்லை.

தலைமறைவாக இருந்த நித்தியானந்தா 2019ஆம் ஆண்டின் இறுதியில் ஹிந்துக்களுக்கு என 'கைலாசா' என்ற தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக திடீரென அறிவித்தார்.

கைலாசாவின் இணையதளமாகக் குறிப்பிடப்படும் (https://kailaasa.org)   இணைய முகவரியில் காணப்படும் அந்தத் தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாட்டில் முறைப்படி இந்துத்துவத்தைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் உலகம் முழுவதும் வாழும் ஹிந்துக்களுக்கான நாடு இது என்றும் கூறிக் கொண்டார்.

அவரது இருப்பிடம் எங்கே என்று இதுவரை அறியப்படாத நிலையில், இந்த இணையதளம் வாயிலாக நித்தியானந்தாவின் போதனைகள் அடங்கிய காட்சிப் பதிவுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. வேடதாரி நித்தியானந்தா எங்கே இருக்கிறார்? அவர் உருவாக்கியதாகக் கூறிக்கொள்ளும் கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பது புரியாத கேள்வி.

அந்த வேளையில்தான், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்துடன் கைலாசா நாடு 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி காட்சிப் பதிவுகள் மற்றும் ஒளிப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியானது.

அந்த காட்சிப் பதிவில் நெவார்க் நகரத்தில் உள்ள சிட்டி ஹாலில் அந்நகர பிரதிநிதிகளுடன், கைலாசா பிரதிநிதிகள் கையெழுத்திடும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக நித்தியின் சீடர்கள் பெருமிதம் தெரிவித்து வந்தனர்.அடுத்து வந்த நாள்களில், அய்.நா. ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கைலாசா பிரதிநிதிகள் உரையாற்றிய காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியானதும், "நித்தியானந்தா உண்மையிலேயே கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டாரோ?  கைலாசா தனி நாடு உண்மைதானோ?" என்ற சந்தேகம் எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் உருவானதுதான் வேடிக்கை!

இதையடுத்து உண்மையறிய களத்தில் இறங்கிய பி.பி.சி.க்கு மின்னஞ்சல் வாயிலாக அய்.நா. பதில் அளித்தது.

"பொது விவாதங்கள் என்ற தலைப்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும்" என்று இந்த  குழுக்களை, மேற்பார்வையிடும் அய்.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்தார்.

இரு கூட்டங்களிலும் கைலாசா பிரதிநிதிகள் பதிவு செய்த கருத்துகள் சற்றும் பொருந்தாத வகையில் இருந்ததால் அவற்றை நிராகரிப்பதாக அவர் பதில் அளித்திருந்தார். இதன்மூலம், நித்தியானந்தா கூறிக் கொண்டபடி, கைலாசாவை தனிநாடாக அய்.நா. அங்கீகரிக்கவே இல்லை என்பது நிரூபணமானது.கைலாசாவுக்கு அய்.நா. அங்கீகாரம் என்ற நித்தியானந்தாவின் கூற்று பித்தலாட்டமானது என்று நிரூபணமான நிலையில்தான், அடுத்த அதிர்ச்சி தரும் தகவல் அதே அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது.

அதாவது, நித்தியானந்தாவின் கற்பனை தேசமான 'கைலாசா'வுடன் நெவார்க் நகரம் மட்டுமல்ல, 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக பி.டி.அய். நிறுவனம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது.

கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகக் கூறப்பட்ட அமெரிக்க நகரங்கள் மேற்கே பசிபிக் கடற்கரை முதல் கிழக்கே அட்லாண்டிக் கடற்கரை வரை விரவிக் கிடக்கின்றன. வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லே நகரமும் அவற்றில் ஒன்று.

"எங்கள் பிரகடனம் ஒன்றும் அங்கீகாரம் அல்ல. ஒரு விண்ணப்பத்திற்கான பதில்தான் அது. அந்த விண்ணப்பத்தில் இருந்த விவரங்களை நாங்கள் சரிபார்க்கவில்லை," என்று ஜாக்சன்வில்லே நகரம் விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல், கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் நகரமான நெவார்க்கும் தற்போது பின்வாங்கியுள்ளது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவால் ஏமாற்றப்பட்டதை நெவார்க் சிட்டி ஹால் ஒப்புக் கொண்டுள்ளது. கைலாசா என்ற நாடே இல்லை என்பதைக் கண்டுபிடித்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக நெவார்க் மேயர் அறிவித்துள்ளார். 

நித்யானந்தாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை எழுத வில்லை.சாமியார்களின் யோக்கியதை - இன்று உலகமே காறி உமிழும் அளவுக்கு அம்பலமாகி வருவதை அம்பலப்படுத்தத்தான்.

 வெட்கக்கேடு! காவிகளா, காலிகளா என்று கேட்கும் நிலைதானே இன்று!