திங்கள், 29 மே, 2023

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

  

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

கோவை, ஏப். 19- கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் ஒன்றை கொடுத் தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திரும ணத்துக்கு பின் நானும், எனது கணவரும் அய்தராபாத்தில் வசித்து வந்தோம். திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நாங்கள் கோவில், கோவிலாக சென்று வந்தோம். அப்போது மத்தியப் பிரதேசத்தில் ஆசிரமம் நடத்தி வரும் ஒரு சாமியார் பற்றி எனது கணவர் அறிந்தார். அவரை சந்தித்து எங்க ளுக்கு குழந்தை இல்லாத விவ ரத்தை தெரிவித்துள்ளார். அந்த சாமியார் சொன்னபடி எனது கணவர் வீட்டுக்கு வந்து இரவு நேரங்களில் பூஜைகளை நடத் தினார்.

ஆக்ரோஷமாக இருந்த அந்த பூஜைகளை பார்த்து நான் அச்சம் கொண்டேன். சாமியார் இப்படித் தான் பூஜைகளை செய்யச் சொன் னார் என்று கூறி எனது கணவர் தெரிவித்து என்னை சமாளித்தார். இந்தநிலையில் சாமியார் பெங் களூர் வந்திருந்தார்.

அவரை பார்க்க எனது கணவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கு தனி அறைக்கு வரச்சொன்ன சாமியார், அவருடைய ஆசைக்கு என்னை இணங்குமாறு கூறினார். அப்போது தான் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என தெரிவித்தார். நான் மறுப்பு தெரிவித்து வெளியே வந்து விட்டேன்.

இதுபற்றி கணவரிடம் தெரிவித்தேன். அவரோ எந்தவித கோபமும் கொள்ளாமல் சாமியார் சொல்படி நடந்து கொள் என தெரிவித்தார். எனது கணவரின் தோழி ஒருவரும் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு சாமியார் சொல்வதை கேட்கும்படி கூறினார். ஆனால் யார் சொல்லை யும் நான் கேட்கவில்லை.

அதன்பிறகு நான் எனது பெற் றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். சில மாதங்கள் கழித்து அய்தரா பாத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றேன். ஆனால் கணவர் என்னை வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டார். சாமி யார் உன்னுடன் வாழக் கூடாது என கூறி இருப்பதாக தெரிவித்து என்னுடன் பேச மறுத்தார்.

அந்த சமயம் சாமியார் என்னை தொடர்பு கொண்டு எனது ஆசைக்கு இணங்கினால் தான் உன் கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்வேன் என்று மிரட் டினார். ஆசைக்கு இணங்காததால் அந்த சாமியார் எனது வாழ்க் கையே அழித்து விட்டார்.

எனவே அந்த சாமியார், எனது கணவர், கணவரின் தோழி ஆகி யோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் கிழக்கு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விவரம் தெரியவந்தது.

மேலும் புகார் மனுவில் அந்த பெண் கூறியுள்ள விவரங்கள் உண்மை தானா என்பது பற்றி விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை யினர் தெரிவித்தனர்.

சாமியார்கள் ஜாக்கிரதை! பூஜை பெயரால் பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை : சாமியார் கைது

 

 திருமலை,மே 19- உடல் நலன் பாதிப்பை சரி செய்ய சிறப்பு பூஜை செய்வதாக கூறி இளம்பெண்ணை நிர்வாணமாக்க முயன்ற மோசடி சாமியார் கைது செய்யப்பட்டார். 

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த தாரகாராமா நகரை சேர்ந்தவர் ஹமாவதி (30). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்தநிலையில், காளஹஸ்தியை சேர்ந்த சுப்பையா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் ஹமாவதி தனது உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சுப்பையா,’உங்கள் வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் உடல் நலக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்’’ என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஹமாவதியிடம் பூஜைக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும் என்றும் சாமியார் கூறியுள் ளார். அதற்கு ஹமாவதி ரூ.20 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டு முன்பணமாக ரூ.7,500அய் போன்பே மூலம் சுப்பையாவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினார். 

கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டில் பூஜை செய்ய இருப்பதாகவும் வீட்டில் உன்னை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது எனவும் ஹமாவதியிடம் கூறினார். இதனையடுத்து, ஹமாவதி தனது வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டார். இதையறிந்து கொண்டு சுப்பையா வந்து அவரது வீட்டில் 6 இடங்களில் கோலமிட்டு மஞ்சள், குங்குமம், எலுமிச்சை வைத்து ஒரு பொம்மையை வரைந்துள்ளார்.

இதன்பின்னர், அந்த பொம்மை வரையப்பட்ட இடத்தில் ஹமாவதியை நிர்வாணமாக அமரும்படி கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத ஹமாவதி, ‘’அவ்வாறு எந்த பூஜையும் வேண்டாம்’’ என கூறியுள்ளார். அத்துடன் இதை ஏற்க மறுத்த ஹமாவதி வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓட முயன்றார். ஆனால், சுப்பையா ஹமாவதியை வலுக்கட்டாயமாக அடித்து நிர்வாணமாக்க முயன்றுள்ளார். அதற்குள் ஹமாவதி அவசர போலீஸ் 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்ததால் ரோந்து பணியில் இருந்த ரேணிகுண்டா நகர காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தபோது சுப்பையா தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஹமாவதி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மோசடி சாமியார் சுப்பையாவை கைது செய் தனர். இவ்வாறு வேறு எங்காவது பூஜை செய்வதாக கூறி இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளானா என்று விசாரிக்கின்றனர்.

புதன், 22 மார்ச், 2023

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் ஒரு வழக்கு

 

பெங்களூரு அக்15 கருநாடகா சித்ரதுர்கா முருக மடத்தில் படிக்கும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச் சாட்டில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சிறீ காவலில் வைக்கப் பட்டுள்ளார்.  கருநாடக மாநி லம் சித்ரதுர்கா முருக மடத்தின் விடுதியில் படிக்கும் இரண்டு  சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்ததாக மடாதி பதி சிவமூர்த்தி முருக சிறீ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையில் சரணடைந்த சிவமூர்த்தி முருகா, செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட் டுள்ளார். முருகசிறீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதி கரித்து வரும் நிலையில், தற் போது மடத்தில் சமையல் பணி யாளராக இருந்த பெண் ஒருவர் புதிதாக புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்வு அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. அந்த பெண், தனது மகள்களில் ஒருவரை காவல் நிலையத்திற்கு  13.10.2022 அன்று அழைத்துச் சென்று, தனது இரண்டு மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார்.

இது தவிர, மேலும் இரண்டு சிறுமிகள் உள்பட மொத்தம் நான்கு சிறுமிகள் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளான தாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலியல் துன் புறுத்தல் குற்றச்சாட்டில், சிறை யில் உள்ள சிவமூர்த்தி முருக சிறீ மீது மைசூர் நசராபாத் காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் கூடுதலாக, முருக மடத் தில் பணிபுரியும் ஊழியரின் குழந் தைகளை பாலியல் ரீதியாக துன் புறுத்திய வழக்கில் முருக மடத்தின் சீடர்கள் உட்பட 7 பேர் மீதும் எப்அய்ஆர் பதிவு செய் யப்பட்டுள்ளது. விடுதி வார்டன், சீடர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடை பெறுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஞாயிறு, 5 மார்ச், 2023

பகவான் கிருஷ்ணனை போல நான் நடந்து கொண்டேன் - அதில் என்ன தப்பு?" என்று கூறிய பாலியல் வன்கொடுமை குற்றவாளி சாமியார் ஆசாராமிற்கு ஆயுள் தண்டனை


 அகமதாபாத், பிப்.1 தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில்,  குஜராத் சாமியார் ஆசாராமிற்க்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

குஜராத் மாநிலம், அகமதா பாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசா ராம் பாபு. இவருக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் உள்ளது. இவரது ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வரும்  பெண் சீடர்களிடம் சாமியார்  அத்துமீறி வந்துள்ளார்.  இது தொடர்பான புகாரின் பேரில்,  கடந்த 2013ஆ-ம் ஆண்டு, ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டன விதித்து  2018-ஆம் ஆண்டு நீதிமன் றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரது ஆசிரம மேனாள் சிஷ்யை ஒருவர், அவர்மீது , அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அவரது மனுவில், தான்,  தனது 17 வயதில் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிர மத்தில் 2001 முதல் 2006 வரை  இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம்  பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு  குஜராத்தின் காந்தி நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிந்த நிலையில், நேற்று (31.1.2023) தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் சாமியார் குற்றவாளி என கூறிய நீதிமன்றம், அவரது  மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகள் என கூறிக் கொண்ட 4 பெண்கள் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் களை விடுதலை செய்ததுடன்,  குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

கோவிலில் வெள்ளி தகடுகளை திருடிய அர்ச்சக பார்ப்பனர்கள் கைது


கும்பகோணம், பிப்.4 மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலில் படிச்சட்டத்தின் மீது இருந்த வெள்ளித் தகடுகளை திருடியதாக அர்ச்சகர்கள் 2 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர் பகுதியில் பரிமள ரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த கோவி லில் உற்சவர் சாமி சிலையை தூக்கி செல்ல பயன்படும் படிச்சட்டம் மரத்தால் செய்யப்பட்டு அதன் மேல் வெள்ளித் தகடுகளால் கவசம் இடப்பட்டு இருந்தது.

இந்த படிச் சட்டத்தின் மேல் இருந்த வெள்ளி தகடுகள் கடந்த 2014-ஆம் ஆண்டு வெட்டி எடுக்கப்பட்டு திருட்டு போனது. இதுகுறித்து காவல்துறையில் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையில் புகார்

இந்த நிலையில் படிச்சட்டத்தில் இருந்த வெள்ளிக் கவசத்தை திருடிய வர்கள், பழைய படிச்சட்டத்திற்கு பதிலாக புதிதாக வெள்ளிக் கவசம் இடப்பட்ட படிச்சட்டத்தை தயார் செய்து கோவிலில் வைக்க முயற்சி செய்வதாக சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையில் புகார் மனு அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கோவிலில் இருந்த படி சட்டத்தின் வெள்ளி கவசம் திருடு போனது உறுதி செய்யப்பட்டது.

தீட்சிதர்-பட்டர் கைது

இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், படிச் சட்டத்தில் இருந்த வெள்ளித் தகடுகளை திருடிய குற்றவாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் தீவிர விசார ணையில் சிறீநிவாச ரங்க பட்டர் மற்றும் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரும் இணைந்து படிச் சட்டத்தில் இருந்த வெள்ளி தகடுகளை திருடியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் வெள்ளித் தகடுகளை கட்டி களாக உருக்கி மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்து புதிய படிச் சட்டம் செய்ய ஆர்டர் கொடுத்து உள்ளதும், புதிய படிச் சட்டம் செய்வதற்கு நன்கொடை யாளர்கள் மூலம் பணம் கொடுக்க சொல்லி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

15 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து இருவரும் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி மயிலாடுதுறையில் உள்ள சம்பந்தப் பட்ட நகைக்கடைக்கு நேரில் சென்ற காவல்துறையினர், அங்கு புதிதாக படி சட்டம் செய்ய வைத்திருந்த 15 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசா ரணை செய்யும் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன் றத்தில் நேற்று (3.2.2022) ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வியாழன், 23 செப்டம்பர், 2021

பா.ஜ.க. தலை எடுத்ததால் ஏற்பட்ட நிகர பலன்?


சாமியார்களின் தலைமை மடங்கள் என்று கூறிக்கொண்டு பல இருந்தாலும், அலகாபாத் பாகம்பரி மடம் தான் அனைத்து சாமியார் மடங்களுக்கும் தலைமையானது என்று கூறப்படுகிறது. இதன் தலைவராக இருந்த சாமியார் நரேந்திர கிரி, அய்யத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அடுத்து இவரது மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

அலகாபாத்தில் உள்ள அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற இந்திய சாமியார்களின் தலைமையிடம், சங்கராச்சாரியார் உருவாக்கிய மடங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், மற்ற எந்த ஒரு சாமியார் மடமும் போலியானது என்று அறிக்கை விட்டுள்ள இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சாமியார்  நரேந்திர கிரி.

இந்த நரேந்திரகிரி சாமியார் முலாயம் சிங் ஆட்சிக்காலத்திலும், அகிலேஷ் ஆட்சிக் காலத்திலும் பாஜகவின் உதவியால் அரசை கலைத்துவிடுவேன் என்று மிரட்டியவர்.  அதுமட்டுமல்லாமல் உத்தரப் பிரதேச தலைமைக் காவல் ஆணையரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வளைத்துக் கொண்டார். இதன் காரணமாக தலைமை செயலகத்தில் உத்தரப் பிரதேச தலைமைக்காவல் ஆணையரே பட்டினிப் போராட்டம் நடத்தினார். இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த அளவிற்கு சாமியார் அரசியலில் தனது ஆதிக்கத்தைக் செலுத்தியிருந்தார்.

 மரணமடைந்த சாமியார் நரேந்திர கிரிக்கு முறையற்ற பெண் தொடர்புகள் அதிகம் உண்டு. இவர் தமது பாதுகாப்பாளராக இருந்தவரின் மனைவியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்து அந்த விவகாரம் வெளியே தெரிந்த உடன் அந்தப் பாதுகாவலருக்குப் பல கோடி மதிப்பிலான மாளிகையை எழுதிக்கொடுத்தார். இதனை அடுத்து ஊர்க்காரர்கள் சில ஆயிரங்கள் மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்த காவலருக்கு பல கோடி மதிப்பு மாளிகை எப்படி சொந்தமானது என்று கேட்டுப் போராட்டம் நடத்தினர்.

 இந்த விவகாரத்தில் சாமியார் தனது பெயர் வராமல் இருக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து எதிர்ப்பாளர்களை மடக்கிய தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மடத்தை நிர்வகிக்கும் சில நிர்வகிகளுக்கும், சாமியாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது,

 இந்த நிலையில் இவரது மோசடிகளை வெளிக்கொண்டு வருவோம் என்று மிரட்டிய அவரது முக்கிய சீடர்கள் - பல பெண் களோடு அவர்களும் தொடர்பில் இருந்து மடத்தின் சொத்துக்களை வாரி வழங்கினர். 

சமீபத்தில் சாமியாரின் தலைமை சீடரும், யோகா குரு என்று தன்னைக் கூறிக்கொள்ளுபவருமான   ஆனந்த கிரி முதலமைச்சர் ஆதித்யநாத்தைச் சந்தித்து  தலைமை சாமியார் நரேந்திர கிரி குறித்துப் பல புகார்களை சான்றுகளோடு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து தற்போது மரணமடைந்த சாமியார் நரேந்திர கிரி தன்னுடைய சீடர்கள் குறித்த புகாரை கொடுக்க  மோடி, அமித்ஷா,  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் போன்றவர்களை சந்திக்க முயற்சித்தார். கரோனா காரணமாக அவருக்கு அனுமதி கிடைக்காததால் தனது சீடர்களின் முறையற்ற பாலியல் காணொலிகள், அவர்கள் பெண்களுக்கு எழுதிக்கொடுத்த மடத்தின் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மோடிக்கு அனுப்ப முடிவு செய்து சேகரித்து வைத்திருந்தார். இதனை அறிந்துகொண்ட   யோகா குரு என்று தன்னைக்கூறிக்கொள்ளும் ஆனந்த கிரி  கடுமையான மோதலில் ஈடுபட்டார் 

இதையடுத்து, அகாடா பரிஷத் மற்றும் பாகம்பரி மடத்திலிருந்து ஆனந்த் கிரி வெளியேற்றப்பட்டார்.  இந்த நிலையில் தலைமை சாமியார் நரேந்திரகிரி அய்யத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.  அவரது அறையில் இருந்த பல பொருட்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதும் தெரியவந்துள்ளது.

 சாமியார் மடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல, அயோத்தியில் உள்ள சாமியார் மடங்களில் வெளிநாடுகளில் இருந்து கூட விலைமாதர்களை சீடர்கள்  என்ற பெயரில் அழைத்துவந்து கூத்தடித்த விவகாரங்கள் காணொலிகளாக வெளியாகி சாமியார்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன.

 இப்படி பல சாமியார்கள் பாலியல் வக்கிரம் கொண்டு அலைவதும், சிக்கிக் கொண்ட பிறகு சொத்துக்களை எழுதிக் கொடுப்பதும் மக்களிடத்தில் அவமதிப்பை ஏற்படுத்தி விட்டது. சாமியார்களின் மோசடிகளைப் பயன்படுத்தி சிலர் சாமியார்களிடம் பெண்களை அனுப்பி அதை ரகசியமாக படம் பிடித்து மிரட்டுவது, அவ்வாறு மிரட்டுபவர்கள் கொலை செய்யப்படுவதும், அலகாபாத், வாரணாசி, பைசாபாத் (அயோத்தியா) போன்ற இடங்களில் பொதுவான காட்சியாக உள்ளது.  ஆனால் இப்போது இந்தியாவிற்கு சாமியார்களின் தலைவராக உள்ள நரேந்திர கிரி மரணம் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது,

 இவர் 2015 ஆம் ஆண்டு பாலியலைத் தூண்டும் போதை மருந்துகளை கொண்டுவரச்சொன்னதாக டில்லி விமான நிலையத் தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கூறியதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த மடத்திற்கு நாடு முழுவதும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் பக்தர்கள் நன்கொடையாக கொடுத்தவை ஆகும்.

உ.பி.யில் முதல் அமைச்சராக இருப்பவரே - ஒரு மடத்தின் தலைவராக இருந்தவர்தானே!

பா.ஜ.க. அரசியலில் தலை எடுக்க ஆரம்பித்ததால் ஏற்பட்ட நிகர பலன் இதுதான்!

இந்துராஜ்ஜியம் அமைக்கத் துடிப்போர் பதில் கூறுவார்களா?

ஞாயிறு, 25 ஜூலை, 2021

சிக்கினார் திருச்சி சாமியார்!

 

புதுடில்லிஜூலை 22 ரவுடிகள் ‘என்கவுன்ட்டர்பட்டியல் தொடர் பான ஒலிப்பதிவு சர்ச்சையில் சிக்கிய திருச்சி அல்லித்துறை சாமியாரையும்அவருடன் அலை பேசியில் பேசியதாகக் கூறப் படும் வழக்குரைஞரையும் காவல் துறையினர் நேற்று (21.7.2021) கைது செய்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (32). தேஜஸ் சுவாமிகள் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னி யம்மன் கோயில் பகுதியில் வசித்தபடி ஜாதகம் பார்த்து வருகிறார்வெளிநாட்டு பிரமுகர்கள்அரசியல் பிரபலங் கள்தொழிலதிபர்கள் உட்பட முக்கிய நபர்கள் அதிகளவில் வந்து சென்றதால் குறுகிய காலத்தில் பிரபலமானார்.

இந்நிலையில் ரவுடிகள் ‘என்கவுன்ட்டர்‘ பட்டியல் தொடர்பாகவும்முக்கியப் பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு சைரன் காரில் சென்றது தொடர்பாகவும் வழக்குரைஞர் கார்த்திக் என்பவரிடம் சாமியார் பேசுவதுபோன்ற ஒலி பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினஇதுகுறித்து சாமியாரிடம் ஜீயபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர்அப்போது தனக்கும் அந்த ஒலிபதிவுக்கும் தொடர்புஇல்லை என சாமியார் தெரிவித்தார்.

மேலும்தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறு செய்துஇருப்பதாக சோமரசம்பேட்டை காவல் நிலையம்சைபர் கிரைம்பிரிவு ஆகியவற்றில் சாமியாரும் கடந்த 12ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி தனிப்படை காவல்துறையினர் நேற்று  (21.7.2021) அதிகாலை அல்லித்துறையில் உள்ள வீட்டுக்குச் சென்று சாமியாரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல ரவுடிகள் பட்டியல் குறித்து சாமியாருடன் அலைபேசியில் பேசியதாக கூறப்படும் வழக்குரைஞரான கார்த்திக் என்பவரையும் பிடித்து விசாரித்தனர்அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் பொன்மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சாமியார்வழக்குரைஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போதுபொன் மலை பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜைஅதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கொட்டப் பட்டு ஜெய்பணம் கேட்டுமிரட்டியுள்ளார்இதுதொடர்பான புகாரின்பேரில் ரவுடியை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதையடுத்துஇந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க உதவுமாறு அல்லித்துறை சாமியாரிடம் ரவுடி கொட்டப்பட்டு ஜெய் முறையிட்டதைத் தொடர்ந்துபுகார் அளித்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜை சாமியார்வழக்குரைஞர் கார்த்திக் உள்ளிட்டோர் மிரட்டியுள்ளனர்இந்தப் புகாரின் அடிப்படையிலேயே சாமியார்ரவுடி கொட்டப்பட்டு ஜெய்வழக்குரைஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.