வியாழன், 29 டிசம்பர், 2016

பாதிரிமார்களில் இரண்டு விழுக்காட்டினருக்குமேல் பாலியல் வன்முறை : ஃபோப் ஒப்புதல்!


ரோம், ஜூலை 15-_ பாதிரிமார்களில் ஏறக் குறைய இரண்டு விழுக் காட்டளவினர்மீது பாலி யல் வன்முறைக் குற்றச் சாட்டு உள்ளதாக போப் பிரான்சீஸ் தெரிவித் துள்ளார்.

இத்தாலி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மதக் குருமார்கள்மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு இருப்பதை, போப்பின் திருச்சபை இல்லத்திலேயே தொழுநோயாக உள்ளது என்றும் வருணித்துள்ளார்.

லா ரிபப்ளிகா நாளி தழின் நிறுவனரும், 90 வயதுள்ள நாத்திகருமான யூஜினோ ஸ்கால்ஃபரி பல முறை போப்புகளைக் கண்டித்து எழுதி வந்துள் ளார். யூஜினோவுடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாட லில் போப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது,என்னுடன் பணியாற்றுபவர்களில் என்னிடம் (சிறார்களிடம் பாலியல் வன்முறைக்கு எதிராக இருப்பதால்) மோதல் போக்கில் இருக் கிறார்கள். குறிப்பாக சர்ச்சுகளில் சிறார்கள் மீதான பாலியல் வன் முறைகளில் ஈடுபடுவோர் இரண்டு விழுக்காட் டளவில் உள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த புள்ளி விவரத்தகவல்கள் என்னை புதிய சிந்தனைகளுக்கான நடவடிக்கைகளில் தள்ள வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால், இந்தத் தகவல் புதைகுழியாகவே பார்க்கப்படுகிறது என்று போப் கூறினார்.

சர்ச்சுகள் குறித்த 2012 ஆண்டின் புள்ளி விவரங் களின்படி, கத்தோலிக்கக் கிறிஸ்துவ பாதிரிகள் 4,14,000 பேர் உலகம் முழுவதும் உள்ளனர்.

வாடிகன் தொடர்பா ளர் ஃபெடரிகோ லோம் பார்டி கூறும்போது, லா ரிபப்ளிகா நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல் களை முழுமையாக போப் கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை. சிறுவர்கள்மீதான பாலியல் வன்முறைகுறித்த புகாரில் கர்தினால்கள் இருப்பதாகக் கூறப்படுவ தற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. சிறுவர்களுக்கான வாசகர்களை  கவர்வதற் காக அப்படி வெளியிட் டுள்ளது என்று கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக 26 பெண்கள் போப்பிடம் பாதிரிமார் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவும், மதப்பணி களில் ஈடுபடும் பெண் களும்  திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை,15.7.14

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சிறுமி பாலியல் வன்கொடுமை கத்தோலிக்க பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


திருவனந்தபுரம், டிச. 10- கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட் டம், புத்தன் வேலிகரா பகுதி யைச் சேர்ந்த 14 வயது சிறு மிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் எட் வின் பிக்காரஸ் (வயது 41) பாலியல் தொல்லை கொடுத் தார் என சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் செய் தார்.
இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பாதிரியார் எட்வின் பிக்காரஸ், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து அவரை பலமுறை பாலியல் வன்முறை செய்தது தெரிய வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அச் சிறுமிக்கு பாதிரியார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து காவல்துறையினர் எட் வின் பிக்காரசை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி நிஷார் அகமது வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங் கினார்.
வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரின் நடவடிக்கையால் 14 வயது சிறுமி பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர், பொறுப் பேற்றுள்ள ஆலய உறுப்பினர் கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்டது அந்த சிறுமி மட்டுமல்ல. ஆலய, உறுப்பினர்களும் பாதிக்கப்பட் டுள்ளனர். இச்செயலை புரிந்த குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் அடைந்ததால் அவருக்கு தண்டனை வழங்குவதில் சலுகை காட்ட நீதிமன்றம் விரும்பவில்லை. சட்டத்திற் குட்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, குழந்தைகள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் இந்திய தண்டனை சட்டம் 375 (ஏ), 376 (1), 375 (பி), 376 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் இவ ருக்கு இரட்டை ஆயுள் தண் டனை விதிக்கப்படுகிறது மற் றும் அபராதமாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.
மேலும் நீதிபதி, தனது தீர்ப்பில் குற்றவாளி எட்வின் பிக்காரசின் சகோதரர் சில்வஸ் டர் பிக்காரசுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
குற்ற சம்பவம் நடந்ததும் குற்றவாளி எட்வின் பிக்கா ரஸ் தலைமறைவானபோது அவ ருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக இந்ததண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.
இதுபோல சிறுமிக்கு பாலி யல் தொல்லை நடந்ததும் அவரை பரிசோதனை செய்த அரசு டாக்டர் அஜிதா, சிறு மிக்கு நேர்ந்த கொடுமையை உடனடியாக காவல்துறையின ருக்கு தெரிவிக்காமல் மறைத்த தோடு, குற்றவாளியின் தவ றுக்கு துணைபோனதையும் கடுமையாக கண்டித்தார்.
பாதிரியார் எட்வின் பிக்கா ரஸ் மீது புகார் கூறப்பட்டு அவர், கைது செய்யப்பட்டதுமே பாதிரியார் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,11.12.16