ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சிறுமி பாலியல் வன்கொடுமை கத்தோலிக்க பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


திருவனந்தபுரம், டிச. 10- கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட் டம், புத்தன் வேலிகரா பகுதி யைச் சேர்ந்த 14 வயது சிறு மிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் எட் வின் பிக்காரஸ் (வயது 41) பாலியல் தொல்லை கொடுத் தார் என சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் செய் தார்.
இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பாதிரியார் எட்வின் பிக்காரஸ், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து அவரை பலமுறை பாலியல் வன்முறை செய்தது தெரிய வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அச் சிறுமிக்கு பாதிரியார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து காவல்துறையினர் எட் வின் பிக்காரசை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி நிஷார் அகமது வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங் கினார்.
வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரின் நடவடிக்கையால் 14 வயது சிறுமி பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர், பொறுப் பேற்றுள்ள ஆலய உறுப்பினர் கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்டது அந்த சிறுமி மட்டுமல்ல. ஆலய, உறுப்பினர்களும் பாதிக்கப்பட் டுள்ளனர். இச்செயலை புரிந்த குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் அடைந்ததால் அவருக்கு தண்டனை வழங்குவதில் சலுகை காட்ட நீதிமன்றம் விரும்பவில்லை. சட்டத்திற் குட்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, குழந்தைகள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் இந்திய தண்டனை சட்டம் 375 (ஏ), 376 (1), 375 (பி), 376 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் இவ ருக்கு இரட்டை ஆயுள் தண் டனை விதிக்கப்படுகிறது மற் றும் அபராதமாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.
மேலும் நீதிபதி, தனது தீர்ப்பில் குற்றவாளி எட்வின் பிக்காரசின் சகோதரர் சில்வஸ் டர் பிக்காரசுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
குற்ற சம்பவம் நடந்ததும் குற்றவாளி எட்வின் பிக்கா ரஸ் தலைமறைவானபோது அவ ருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக இந்ததண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.
இதுபோல சிறுமிக்கு பாலி யல் தொல்லை நடந்ததும் அவரை பரிசோதனை செய்த அரசு டாக்டர் அஜிதா, சிறு மிக்கு நேர்ந்த கொடுமையை உடனடியாக காவல்துறையின ருக்கு தெரிவிக்காமல் மறைத்த தோடு, குற்றவாளியின் தவ றுக்கு துணைபோனதையும் கடுமையாக கண்டித்தார்.
பாதிரியார் எட்வின் பிக்கா ரஸ் மீது புகார் கூறப்பட்டு அவர், கைது செய்யப்பட்டதுமே பாதிரியார் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,11.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக