ஞாயிறு, 16 டிசம்பர், 2018

அருள்வாக்கு கூறுவதாக பெண்ணிடம் நகை-பணம் பறித்த சாமியார்

நாகர்கோவில், டிச.9 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 49). ஓட்டல் தொழிலாளி. இவரு டைய மனைவி அமலு (45). இவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் காவல்துறை கண்காணிப்பாளர் சிறீநாத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

எங்கள் ஊருக்கு கோபால் என்ற பெயரில் சாமியார் ஒருவர் மனைவி பிள்ளைகளுடன் வந்தார். அவர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருள்வாக்கு சொல்லி வந்தார். இதை நம்பி ஒருமுறை நானும் அருள்வாக்கு கேட்க சென்றேன். அப்போது உங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செய்வினையை அகற்ற வேண்டும் என்றால் நகைகளை கழற்றி எனது பூஜையறையில் உள்ள சாமி படத்துக்கு முன் வையுங்கள் என்றார்.

அதை நம்பி நானும் 5 பவுன் நகையை கழற்றி வைத்தேன். அருள்வாக்கு சொல்லிய பிறகு நகையை கேட்டபோது செய் வினை அகன்றதும் நானே தருகிறேன் என்று கூறினார். இதற்கிடையே அவசர தேவைக் காக என்னிடம் அந்த சாமி யாரும், அவருடைய மனைவியும் சேர்ந்து கடன் கேட்டனர். அவர் களை நம்பிய நான் 2 தவணையாக ரூ.5 லட்சத்தை கொடுத்தேன்.

இந்த நிலையில் அவர்கள் திடீரென அங்கிருந்து வீட்டை காலிசெய்து குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டனர். என்னை போல் பல பெண்கள் அவர்களிடம் ஏமாந்துள்ளனர். எங்கள் ஊருக்கு சாமியார் வந்த போது தனது சொந்த ஊர் தூத்துக்குடி என்று கூறினார். அங்கு விசாரித்தபோது, அது அவருடைய சொந்த ஊர் இல்லை என்பது தெரிய வந்தது. இதற் கிடையே அவருடைய செல் போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த சாமியார் நாகர்கோவிலில் தங்கியிருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது.

அதனால் நாங்கள் ஓசூரில் இருந்து நாகர்கோவில் வந்தோம். இங்கு வந்த பிறகு சாமியாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை கண்டுபிடித்து எங்களு டைய நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அருள்வாக்கு சொல்வதாக கூறி ஓசூர் பெண்ணிடம் நகை, பணத்தை பறித்த சாமியார் நாகர்கோவிலில் பதுங்கி இருப் பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின் றனர்.

- விடுதலை நாளேடு, 9.12.18

திங்கள், 10 டிசம்பர், 2018

யாரிந்த சாமியார் சாக்ஷி?



1956ஆம் ஆண்டு பிறந்த சாமியார் சாக்ஷியின் உண்மையான பெயர் அரி, இளம் வயது முதலே பல்வேறு வழக்குகளின் கீழ் சிறைசென்றவர். இவரது தந்தை ஆத்மானந்த என்பவர் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்ட பண்ணை வீட்டை ஆக்கிரமித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, தான் ஆக்கிரமித்த இடத்தையும் வீட்டையும் சாக்ஷி ஆசிரமம் என்று பெயரிட்டு மதச்சாயம் பூசிவிட்டார். அரி தன்மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அரி என்ற பெயரைவிட தனது தந்தையின் ஆசிரமமான சாக்ஷி என்பதையே தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

இவர் மீது கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக 37-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

2014ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர் மனுதாக்கல் செய்தபோது இவரே சமர்பித்த விபரம் ஆங்கிலத்தில் பட்டியலிடப் பட்டுள் ளது.

1.    4 charges related to criminal intimidation (IPC Section-506)
2.    2 charges related to Promoting enmity between different groups on grounds of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to mainten ance of harmony (IPC Section-153A)
3.    2 charges related to Cheating and dishonestly inducing delivery of property (IPC Section-420) 
4.    2 charges related to Forgery of valuable security, will, etc. (IPC Section-467)
5.    2 charges related to Forgery for purpose of cheating (IPC Section-468)
6.    1 charge related to voluntarily causing hurt to deter public servant from his duty (IPC Section-332)
7.    1 charge related to Injuring or defiling place of worship with intent to insult the religion of any class (IPC Section-295)
8.    1 charge related to Dacoity with murder (IPC Section-396)
9.    1 charge related to Robbery, or dacoity, with attempt to cause death or grievous hurt (IPC Section-397)
10.    1 charge related to criminal breach of trust (IPC Section-406)
11.    1 charge related to Criminal breach of trust by public servant, or by banker, merchant or agent (IPC Section-409)
12.    1 charge related to Murder (IPC Section-302)
13.    4 charges related to Intentional insult with intent to provoke breach of the peace (IPC Section-504)
14.    3 charges related to rioting (IPC Section-147)
15.    3 charges related to voluntarily causing hurt (IPC Section-323)
16.    2 charges related to Using as genuine a forged document or electronic record (IPC Section-471)
17.    1 charge related to Punishment (IPC Section-53)
18.    1 charge related to Causing grievous hurt by act endangering life or personal safety of others (IPC Section-338)
19.    1 charge related to Punishment of criminal conspiracy (IPC Section-120B)


இவ்வளவு குற்றப்பின்னணி கொண் டவர் அரசியலுக்கு வரத் தகுதியானவர் தானே, அதுவும் காவி உடை உடுத்தியவர் என்றால் கூடுதல் தகுதி. எனவே 1999-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச பாஜக பருக்காபாத் நாடாளுமன்றத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது. வாஜ்பாயின் நண்பரான பிரம்தத் திரிவேதியை கொலைசெய்தவர்களுள் அரி என்ற சாக்ஷியும் ஒருவர் என வாஜ்பாயிடம் உளவுத்துறை கூறியதை அடுத்து இவர் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இவரை சமாஜ்வாதி கட்சி மாநிலங்களவை உறுப்பினராக்கி டில்லிக்கு அனுப்பிவைத்தது.

2000ஆம் ஆண்டு ஆக்ரா சாலையில் விபத்தில் சிக்கிய ஒரு குடும்பத்தை மீட்கிறேன் என்று கூறி விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை தன்னுடைய ஜீப்பில் தூக்கிச் சென்று பாலியல்வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் இவரும் இவரது இரண்டு சகோதரர்களும் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 2005ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினருக்காக ஒதுக்கிய பணத்தை முழுவதுமாக கையாடல் செய்தது தொடர்பாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து 21 மார்ச் 2006 அன்று நாடாளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது, இவர் குடியரசுத்தலைவர் மற்றும் சபாநாயகரிடம் மன்னிப்புக் கடிதம் எழுத்திக் கொடுத்தும் இவரது கடிதம் நிரா கரிக்கப்பட்டு இவர் தகுதி நீக்கம் செய்யப்பட் டார்.

2009ஆம் ஆண்டு சுஜாதா வர்மா என்ற கல்லூரி முதல்வரை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டார். பிறகு 1500 ரூபாய் பிணையில் விடுதலைசெய்யப் பட்டார். 2012ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 2014ஆம் ஆண்டு அமித்ஷா இவரை உன்னாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இதனை அடுத்து இவர் 3ஆவது முறையாக நாடாளுமன்ற உறுப்பின ரானார். இவர் மீது இன்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சர்ச்சைப் பேச்சுக்கள்

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கோட்சேவின் சிலையை வைக்கவேண்டும் என்று பல்வேறு சாமியார் அமைப்புகளில் இருந்து கையெழுத்து வாங்கி மோடியிடம் வழங்கச் சென்றார். ஆனால் மோடி அயல்நாட்டுப் பயணத்தில் இருந்ததால் அவரால் இயலவில்லை. இதனால் இவர் பொதுவாக நாடாளுமன்றத்தில் கோட்சே சிலையை வைக்க அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று அறிக்கை விட்டார். இது இவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக தலைமை அறிக்கை விட்டது. இந்துக்கள் அனைவரும் அய்ந்து குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதம் நிலைத்து நிற்கவேண்டு மென்றால் பெண்கள் இந்த தியாகத்தை செய்தே ஆகவேண்டும் என்று அறிக்கை விட்டார். ராஜஸ்தான் பள்ளியில் அனைத்து மாணவர்களும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கட்டாய சுற்றறிக்கை விட்டபோது அதை நாடு முழுவதிலுமுள்ள இசுலாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்த் தனர். இதற்கு கருத்து கூறிய சாமியார் சாக்ஷி சூரிய நமஸ்காரத்தை வெறுப்பவர்கள் தெரு வில் செல்லக்கூடாது, பகலில் நடமாடாமல் இரவில் மட்டும் இவர்கள் நடமாடவேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

தாதரியில் அக்லாக் முகமது படுகொலை செய்யப்பட்டது குறித்து இவர் கூறும் போது, பசுவைக் கொலை செய்தவர்களுக்கு இதைவிட ஒரு நல்ல பாடம் எதுவுமே இருக்கமுடியாது என்று கூறியவர். இந்துக்கள் அனைவரும் கையில் ஆயுதம் எடுக்க வேண்டும்; பசுவை கொலைசெய்யும் ஒவ் வொருவரையும் கொலைசெய்யவேண்டும் என்று கூறினார். பின்னால் கொலைசெய்யும் பேச்சு பத்திரிகைகளால் மிகைப்படுத்தப்பட்டது என்று கூறினார். இவரை அமித்ஷா டில்லிக்கு அழைத்து கண்டித்ததாக பத்திரிகைகள் எழுதின. ஆனால் அப்படி ஒன்றுமில்லை. பீகார் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த என்னை அழைத்தார் என்று கூறினார். பீகார் தேர்தலின் போது பசுமாட்டுப் பிரச்சினையைக் கிளப்பி, இந்துக்களின் ஓட்டுக்களைப் பெற திட்டம் தீட்டிக்கொடுத்த வர்களில், இவரும் ஒருவர் என உ.பி.யிலிருந்து வெளிவரும் அமர் உஜாலா என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் கூறியிருந்தார். பின்னர் அவர் தான் சொன்னது தவறு என்று மன்னிப்பு கடிதமும் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளிப்பவர்கள் அனைவரும் மோடியின் எதிரிகள் என்றும் மோடியின் புகழை விரும்பாமல் இவர்கள் இப்படிச் செய்வ தாகவும் கூறியிருந்தார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் கன்னையா குமார் உட்பட 7 மாணவர்களை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும் என்று கூறினார்.

நிலை மாற வேண்டும்


பார்ப்பனர்கள் என்ன சொல்லும் நிலைமை ஏற்படவேண்டும்? நாங்கள் 100க்கு 3 பேர் இருக்கிறோம். எங்களுக்கும் உரிமை அளிக்கப்படவேண்டும் என்று பார்ப்பனர்கள் நம்மிடம் கேட்கவேண்டும். இன்று நாம் நமது விகிதாசாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிற நிலை மாறவேண்டும் என்றார் தந்தை பெரியார்.


- விடுதலை', 30.1.1970

விடுதலை ஞாயிறு மலர்', 24.11.18



ஞாயிறு, 9 டிசம்பர், 2018

அருள்வாக்கு கூறுவதாக பெண்ணிடம் நகை-பணம் பறித்த சாமியார்

நாகர்கோவில், டிச.9 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 49). ஓட்டல் தொழிலாளி. இவரு டைய மனைவி அமலு (45). இவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் காவல்துறை கண்காணிப்பாளர் சிறீநாத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
எங்கள் ஊருக்கு கோபால் என்ற பெயரில் சாமியார் ஒருவர் மனைவி பிள்ளைகளுடன் வந்தார். அவர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருள்வாக்கு சொல்லி வந்தார். இதை நம்பி ஒருமுறை நானும் அருள்வாக்கு கேட்க சென்றேன். அப்போது உங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செய்வினையை அகற்ற வேண்டும் என்றால் நகைகளை கழற்றி எனது பூஜையறையில் உள்ள சாமி படத்துக்கு முன் வையுங்கள் என்றார்.
அதை நம்பி நானும் 5 பவுன் நகையை கழற்றி வைத்தேன். அருள்வாக்கு சொல்லிய பிறகு நகையை கேட்டபோது செய் வினை அகன்றதும் நானே தருகிறேன் என்று கூறினார். இதற்கிடையே அவசர தேவைக் காக என்னிடம் அந்த சாமி யாரும், அவருடைய மனைவியும் சேர்ந்து கடன் கேட்டனர். அவர் களை நம்பிய நான் 2 தவணையாக ரூ.5 லட்சத்தை கொடுத்தேன்.
இந்த நிலையில் அவர்கள் திடீரென அங்கிருந்து வீட்டை காலிசெய்து குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டனர். என்னை போல் பல பெண்கள் அவர்களிடம் ஏமாந்துள்ளனர். எங்கள் ஊருக்கு சாமியார் வந்த போது தனது சொந்த ஊர் தூத்துக்குடி என்று கூறினார். அங்கு விசாரித்தபோது, அது அவருடைய சொந்த ஊர் இல்லை என்பது தெரிய வந்தது. இதற் கிடையே அவருடைய செல் போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த சாமியார் நாகர்கோவிலில் தங்கியிருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது.
அதனால் நாங்கள் ஓசூரில் இருந்து நாகர்கோவில் வந்தோம். இங்கு வந்த பிறகு சாமியாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை கண்டுபிடித்து எங்களு டைய நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அருள்வாக்கு சொல்வதாக கூறி ஓசூர் பெண்ணிடம் நகை, பணத்தை பறித்த சாமியார் நாகர்கோவிலில் பதுங்கி இருப் பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின் றனர்.
 - விடுதலை நாளேடு, 9.12.18

வியாழன், 29 நவம்பர், 2018

பாலியல் வழக்கு: தென்கொரியாவில் பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை



சியோல், நவ. 26- தென் கொரி யாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய கிறித்தவ ஆலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ ஜே ராக் (வயது 75).

1982-ஆம் ஆண்டு வெறும் 12 பேருடன் ஆரம்பித்த இந்த தேவாலயத்தில் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுப் பினர்களாக இருக்கிறார்கள்.

அந்த ஆலயத்தின் உறுப்பி னர்களாக உள்ள 3 பெண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களை பாதிரியார் லீ, தனது அடுக்கு மாடி குடியிருப்பு வீட் டுக்கு அழைத்து, வலுக்கட்டா யமாக பாலியல் வன்முறை செய்து விட்டார் என புகார் செய்தனர்.

அவர்களில் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் அரசரை விட மேலா னவர். அதனால்தான் அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை என்று கூறினார்.

இந்த 3 பெண்களைப் போன்று மேலும் 5 பெண்கள், பாதிரியார் லீ மீது காவல்துறை யில் பாலியல் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட் டார். அவர் தன் மீதான பாலியல் புகார்களை மறுத்தார்.

இருப்பினும் அவர் மீது சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு விசாரணை நடைபெற் றது. விசாரணையில், அவர் தனது ஆலயத்தில் உறுப்பினர் களாக உள்ள பெண்களை நீண்ட காலமாக பாலியல் வன் முறை செய்து வந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என கருதி 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுங் மூன் சங் தீர்ப்பு அளித்தார்.

-  விடுதலை நாளேடு, 26.11.18

திங்கள், 12 நவம்பர், 2018

சிறைக்குப் படை எடுக்கும் சாமியார்கள்



பாலியல் வன்முறை மற்றும் இயற்கைக்கு மாறாக உறவுகொண்டது உள்ளிட்ட குற்றங்களின்கீழ் சாமியார் தாதி என்பவர்மீது மத்திய புலனாய்வு விசாரணைக் குழு விசாரணை செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாமியார் தாதியின் பாலியல் வன்முறை யால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் ஒருவர் தெற்கு டில்லி ஃபதேபுர்பேரி காவல்நிலை யத்தில் 7.6.2018 அன்று புகார் கொடுத்தார். சாமியாருடன் உள்ள பெண் ஒருவர் தம்மை கட்டாயப்படுத்தி சாமியாரின் அறைக்குள் தள்ளிவிட்டதாகவும், சாமியார் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் காவல்நிலையத்தில் அப்பெண் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். சாமியாரின் சீடராக பத்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்த அப்பெண்ணுடன் மற்ற இருவரையும் சேர்த்து அவர்களின் சொந்த மாநிலமாகிய ராஜஸ்தானுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாமியாரின் கட்டாயத்தின்பேரில் அவ ரது இச்சைக்கு உடன்படாத பெண்ணிடம், இங்குள்ள அனைத்து பெண்களுமே என்னுடன் படுத்தவர்கள்தான் என்று ஆணவத்துடன் கூறினாராம்.

சாமியார்மீது அப்பெண் அளித்த புகாரின்பேரில் 22.6.2018 அன்று தாதி மண்டல் எனப்படும் ஆசிரமத்தில் சாமி யார் தாதியிடம் டில்லி காவல்துறையினர் விசாரணை செய்தார்கள். அதன்பின்னர் வழக்குப் பதிவு செய்தார்கள்.

அதன்பின்னர், விசாரண செய்த பெண் அலுவலர் உள்ளிட்ட காவல்துறை அலு வலர்களைக் கொண்ட விசாரணைக் குழுவினர் ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியிலுள்ள இதே சாமியாரின் ஆசிர மத்துக்கும் சென்று விசாரணை நடத்தினர். சாமியாருக்கு எதிரான ஆதாரங்களைக் கைப்பற்ற சென்றார்கள். ஆனால், சாமி யார் அங்கிருந்தும் தலைமறைவாகி விட்டார். அதனால், தேடப்படும் குற்றவாளி கள் பட்டியலில் சாமியாரின் பெயரை காவல்துறையினர் வெளியிட்டனர். சாமியார் தாதி மண்டலை விட்டு வெளி யேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லி காவல்துறையினரின் விசாரணை தீவிரமாக இல்லை என்று குறிப்பிட்டு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் மனுதாரர் கூறுகையில், ஏராளமான அரசி யல்வாதிகள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் சானிதம் ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்கள். ஆகவே, முறையான விசாரணை நடைபெறுவதை காவல்துறையின் குற்றப்பிரிவால் உறுதிப் படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் டில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சாமியார்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு (11.6.2018) மூன்று மாதங்களுக்குப் பின்னர் காவல்துறையினர் சாமியார் மீதான பாலியல் வன்முறை வழக்கின் குற்றப்பத்திரி கையை அளித்தனர்.

டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோரைக்கொண்ட அமர்வில் நடை பெற்ற வழக்கு விசாரணையில், இவ்வழக் கின் புலனாய்வு விசாரணையை மனுதார ரின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய புலனாய்வுக்குழுவின் (சிபிஅய்) விசார ணைக்கு உத்தரவிடப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 5.11.18

பெண்களை பாலியல் வன்முறை செய்த சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

சென்னை நவ.11 பெண்களை பாலியல் வன்முறை செய்த வழக்கில் சிக்கிய சாமியாரை, தேடப்படும் குற்றவாளியாக, தமிழக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சென்னை, தியாகராயர் நகர் பசுல்லா சாலையை சேர்ந்தவன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி (வயது 46) சாமியார் என, அறிவித்து கொண்ட இவன், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவது மற்றும்  அதே பகுதியில், ஆசிரமும் நடத்தி வந்தான். அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்களையும் நடத்தினான். தன் வசீகர பேச்சால், பெண்களை மயக்குவதிலும் கில்லாடி.சதுர்வேதியின் சொற்பொழிவை கேட்க, 2002 அக்டோபரில், சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையைச் சேர்ந்த, தொழிலதிபர் ஒருவரின் மனைவியும், அவரது, 16 வயது மகளும், அடிக்கடி சென்றனர்.

அதை பயன்படுத்தி, இருவரையும், சதுர்வேதி, தன் பிடியில் கொண்டு வந்தான். இதனால், அவன் ஆட்டி வைக்கும் கைப் பாவையாக மாறினர். இருவரும், அவ்வப்போது, சதுர்வேதியின் ஆசிரமத்திலேயே தங்கினர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சாமியார் சதுர்வேதி, தாய் மற்றும் மகளை, பல முறை பாலியல் வன்முறை செய்துள்ளான்.அவர்களை பகடை காயாக பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள, தொழிலதிபர் வீட்டின் கீழ் தளத்தை, அறக்கட்டளைக்கு என, எழுதி வாங்கி உள்ளான். அந்த வீட்டில், தன் ஆசிரம உதவியாளர்களை குடியமர்த்தி, தொல்லை கொடுத்து உள்ளான்.

அவனது உண்மை முகம் தெரிய வந்ததும், தாயும், மகளும் விலகினர். அதனால், ஆத்திரம் அடைந்த சதுர்வேதி, தன் ஆசிரம உதவியாளர்கள் உதவியுடன், 2004 செப்., 17இல், ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்த, தொழிலதிபர் மனைவி மற்றும் மகளை, ஆந்திராவுக்கு கடத்திச் சென்று, பாலியல் சித்ரவதை செய்துள்ளான்.இதுகுறித்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், தொழிலதிபர் புகார் அளித்தார்.

மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து, 2004 நவ., 6இல், சதுர்வேதியை கைது செய்தனர். அவனது பிடியில் இருந்த, இருவரையும் மீட்டனர்.

இந்த வழக்கு, சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகாமல், 2016 நவ., 3இல் இருந்து, சதுர்வேதி தலைமறைவாகி உள்ளான். அவனை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளனர்.

அவன், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கும், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இருப்பினும், காவல்துறையை ஏமாற்றி விட்டு, அவன், நேபாளம் பறந்து விட்டதாக தெரிகிறது.

- விடுதலை நாளேடு, 11.11.18

ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஆயுள் தண்டனை பெற்ற இந்த சாமியார் யார்?



‘சாமியார் ராம்பால்’ பல பெண்களை பாலியல்வன் கொடுமை செய்ததாகவும், அதில் சில பெண்களை கொலை செய்ததா கவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த அரியானா, பஞ்சாப் உயர்நீதிமன்றம் சாமியாருக்கும் அவரது கூட்டாளிகள் 14 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அரியானா மாநிலம் இசார் மாவட் டத்தின் தலைநகரில் 300 ஏக்கர் நிலப் பரப்பில் பிரமாண்டமான கோட்டைகளைக் கட்டி ஆசிரமம் ஒன்றை நிர்மானித்து நடத்திவந்தவர் சாமியார் ராம்பால். இவரது ஆசிரமத்தின் பெயர் ‘சாத்லோக்’ அதாவது ஏழு உலகமும் அங்கு உள்ளதாக கூறி வந்தார். இந்த ஆசிரமத்திற்குள் ஒரு நாட் டையே உருவாக்கி அதற்கு ராணுவத்தை யும் உருவாக்கி இருந்தார். அங்கு செல்ப வர்கள் பொருட்கள் வாங்க சாமியார் உருவம் பொறித்த வில்லைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். இவருக்கு அரி யானா மற்றும் டில்லியில் உள்ள ஆட்சி யாளர்களில் முக்கியமானவர்கள் பக்தர் களாக இருந்தனர். இவருக்கும் அரியானா, சென்னை, டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் நாடு முழுவதும் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது.

2006-ஆம் ஆண்டு இவர் தங்களது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக இரண்டு பேர் புகார் அளித்தனர். முதலில் டில்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவர் தனது மனைவியை ராம்பால் கொன்றதாக புகார் அளித்தார். இரண்டாவது உ.பி.யில் உள்ள லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்ஹோரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் குற்றம்சாட்டினார். ஆனால் இந்தக் புகாரின் மீது அரியானா காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அரியானாவில் உள்ள ஜிந்த் என்ற இடத்தில் உள்ள விவசாய நிலத்தை இவர் அபகரித்துகொண்டதாக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப்போராட்டத்தை ஒடுக்க தனது அடியாட்களை ஏவிவிட்டார். அந்த அடியாட்களில் தாக்குதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விவகாரம் பெரிதான பிறகு 2014-ஆம் ஆண்டு நீதிமன்ற வற்புறுத்தலின் பேரில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து இவரைக் கைதுசெய்ய காவல்துறையினர் இவரது ஆசிரமத்திற் குள் நுழைய முற்பட்டனர். அப்போது ஆசிரமத்திற்கு உள்ளே இருந்து தாக்கு தல்கள் தொடர்ந்தது, இதனை அடுத்து துறை ராணுவம் வரவழைக்கப்பட்டது, 700-வீரர்களைக் கொண்டு துணை ராணு வம் ஆசிரமத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது, அங்கு துப்பாக்கிகளும் மற்றும் எரிவாயு சிலிண் டரை வெடிகுண்டுகளாக பயன்படுத்த தயார் நிலையில் இருந்த 100க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்தனர்.  சாமியாரின் ஆதரவாளர்கள் நடத்திய ஆயுதத்தாக்குதலில் ஒரு உதவி காவல் ஆய்வாளர்கள் 7 காவல்துறை யினர் மரணமடைந்தனர். அதன் பிறகு ஆசிரமத்தின் அனைத்து பகுதிகளும் சோதனையிடப்பட்டது, சாமியார் ராம்பா லின் இருப்பிடத்தில் பல ரகசிய அறைகள் மற்றும் ஆணுறைகள், கருத்தடை மாத்தி ரைகள் கைப்பற்றப்பட்டன. கூட்டத்தோடு கூட்டமாக வெளியேற முயன்ற சாமியார் ராம்பாலும் கைதுசெய்யப்பட்டார்.

இவர் மீது ஊர்மக்களை கொலை செய்தவழக்குடன் சேர்ந்து ஏற்கெனவே இரண்டு பெண்களைக் கொலைசெய்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப் பட்டது.

இதில் பெண்களைக் கொலைசெய்தது தொடர்பாக நடந்த வழக்கின் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 2 வழக்குகளில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்களும்  குற்றவாளி என நீதி மன்றம் தீர்ப்பு கூறிய நிலையில், தற்போது ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு பிரிவு 302, 343 மற்றும் 120பி கீழ் தண்டிக்கப்படு வதாக கூறி ஆயுள் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது.

சாதாரண விவசாயக்கூலியாக இருந்த சாமியார் ராம்பால் பிறகு வருமானவரித் துறை அலுவலத்தில் பணிபுரிந்து பிறகு தனது கனவில் கிருஷ்ணன் வந்து இனி உன்னுள் நான் இருக்கிறேன் என்று கூறிய தால் இவர் தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டாராம்.

- விடுதலை ஞாயிறு மலர், 20.10.18

சனி, 3 நவம்பர், 2018

செய்யூர்:  பேய் விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்கு  சாமியார் பாலியல் தொல்லை

சென்னை, நவ.2 பேய் பிடித்திருப்பதாகக் கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  சாமியார் தப்பியோடி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமத்தைச் சேரந்தவர் ஜெயசீலன். இவரது மகன் சிறீதர் (40). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தான் சாமியாராக மாறிவிட்டதாகச் சொல்லி  சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குறி சொல்லி  ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அவரிடம் குறி கேட்க தினமும் செய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வந்து சென்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு  மேகநாதனின் மனைவி கற்பக வள்ளி (34) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சாமியார்  தங்கள் வீட்டுக்கு அழைத்துச் வந்துள்ளனர். கற்பகவள்ளியை தனியறைக்கு சாமியார் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இவருக்கு வேப்பிலை அடித்தால் போதாது. இவர்மீது பேய் பிடித்திருக்கிறது. அதற்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என  கதவை பூட்டியதாக தெரிகிறது. பின்னர் கற்பகவள்ளிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

திடீரென அறையில் இருந்து கற்பகவள்ளி சத்தம் போட்டுக் கொண்டே கதவை திறந்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். இதனால் பயந்துபோன சாமியார் சிறீதர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  இது குறித்து கற்பகவள்ளி சொல்லி அழுதுள்ளார்.

தலைமறைவாக உள்ள சாமியார் தரப்பிலிருந்து இப்பிரச்சி னையைப் பெரிதாக்க வேண்டாம் என மிரட்டியதாகக் கூறப்படு கிறது. இதுகுறித்து செய்யூர் காவல் நிலையத்தில் கற்பகவள்ளி அளித்த  புகாரின்படி காவல்துறையினர் 244 ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சாமியாரை  தேடி வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 2.11.18

திங்கள், 29 அக்டோபர், 2018

பாலியல் வன்முறை : பூசாரி கைது

சூரத், அக்.26 குஜராத்தில், தாயின் மருத்துவ செலவுக்காக, பண உதவி கேட்டு வந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்த பூசாரியை, காவல்துறையினர் கைது செய்தனர்.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சூரத் மாவட்டத்தில் உள்ள தபோலி என்ற இடத்தை சேர்ந்த கரண் ஸ்வரூப்தாஸ் பாபுபாய் சவானி, 24. இவர் சுவாமி நாராயண் கோவிலில், பூசாரியாக பணியாற்றி வந்தார். இதே பகுதியை சேர்ந்த, 20 வயது பெண், தன் தாயாரின் அறுவை சிகிச்சைக்காக, பண உதவி கேட்டு, பூசாரி கரண் ஸ்வரூப்தாஸை, சமீபத்தில் அணுகினார்.உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த கரண், அந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு, வேறு எங்கும் உதவி கிடைக்காததால், நேற்று முன் தினம், மீண்டும் பண உதவி கேட்டு, கரணை சந்தித்தார்.அப்போது, இரண்டாவது முறையாக, அந்த பெண்ணை, கரண் ஸ்வரூப்தாஸ், பாலியல் வன்முறை செய்தார். இது பற்றி, அந்த பெண்ணின் பெற்றோர், காவல்துறையினர் புகார் அளித்தனர்.இதையடுத்து, கரண் ஸ்வரூப்தாஸை, காவல்துறையினர் கைது செய்தனர்.

-  விடுதலை நாளேடு, 26.10.18

வெள்ளி, 19 அக்டோபர், 2018

சாமியார்கள் ராஜ்ஜியத்தில்.... உய்யலாலா? கொலை - பாலியல் வன்முறை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை



புதுடில்லி, அக்.17 அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங்ஜடின்.அய்.டி.அய்.டிப்ளமோபட்ட தாரியான இவர் அரியானாவில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளராகப் பணி யாற்றினார்.

திருமணமாகி மனைவி, 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமி யாரானார். அரியானாவில் கரோதா கிராமத் தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரி யானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மிக சேவை ஆற்றுவதாக கூறிக் கொண்டார்.

இவர் ஆன்மிகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினார். இதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து காவல்துறை ராம்பால் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2014- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப் பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியானது.

ஹசார் நீதிமன்றத்தில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசா ரிக்கப்பட்டு வந்தன. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்முறை வழக்கில் அவருக்கு ஹசார் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

சாமியார் ராம்பால் ஹசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

 - விடுதலை நாளேடு, 17.10.18

2 கொலை வழக்கு சாமியார் ராம்பால் குற்றவாளி என தீர்ப்பு

ஹிசார், அக்.13 அரியானா மாநில அரசில் பொறியாளராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி சாமியார் ஆனவர் ராம்பால் (வயது 63). பர்வாலா என்ற இடத்தில் அவரது ஆசிரமம் அமைந் துள்ளது. நவம்பர் 19, 2014 அன்று சாமியாரின்  ஆசிரமத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர் பாக ராம்பால் மற்றும் அவரது  ஆதரவா ளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. நவம்பர் 2018 இல் ஒரு பெண் அவரது ஆசிரமத்தில் இறந்து கிடந்தது தொடர்பாக ராம்பால் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது  இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த கொலைகள்  தொடர்பான  வழக் கில் சாமியார் ராம்பால்  கைது செய்யப்பட்டு   சிறையில் அடைக்கப்பட்டார். ராம்பால் கைதானதை தொடர்ந்து காவல் துறையினருக்கும், சாமியாரின் ஆதரவா ளர்களுக்கும் இடையே நடை பெற்ற மோதலில் ஒரு குழந்தை, 5 பெண்கள் என மொத்தம் 6 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக சாமியாரின் ஆதரவாளர்கள் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாமியார் செய்த கொலைகள் தொடர்பான வழக்கு  ஹிசார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த   வழக்குகளில்  சாமியார் குற்ற வாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் குறித்த தீர்ப்பு அக் டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் வழங்கப்படுகிறது.

முன்னதாக ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 27 பேரிடம்   நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது.

- விடுதலை நாளேடு, 13.10.18

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

ஏமாறாதே! ஏமாற்றாதே!! பக்தி வேஷம் படுமோசம்!!!

 பெரம்பூரில் வசிப்பவர் 45 வயதான திருமதி. லதா ரமேஷ் என்பவர்; அவரது மகளுக்குப் பேச்சு வரவில்லை அல்லது திக்குவாய் என்ற குறையையோ போக்க, (மருத்துவர்களிடம் போகாமல்) மேடவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரியும் 26 வயது தினேஷ் என்ற பார்ப்பனரிடம் சென்று கடவுளருள் மூலம் குணப்படுத்த வேண்டிக் கொண்டார்.

வீட்டிலுள்ள அத்தனை நகைகளையும் ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி - "90 நாள் அம்மனிடம் தொடர்ந்து வேண்டி பூஜை, அபிஷேகம் - ஆராதனை செய்து வந்தால் அந்த வாய் பேசாத பெண் பேசுவாள்" என்று நம்பிக்கையூட்டினான் அந்த அர்ச்சகப் பார்ப்பனன் தினேஷ்.

90 நாள் கழித்து பாத்திரத்தைத் திறந்து பார்த்தால் 15 சவரன்கள் உள்ள நகைகள் வைத்த இடத்தில் - பாத்திரத்தில் வெறும் கற்களே இருந்தன.

பிறகுதான் நகைகளைப் பறிகொடுத்த இந்த லதா - வயிற்றிலும், வாயிலும்  அடித்துக் கொண்டு, போலீசில் புகார் கொடுத்துள்ளார்!

இந்த அர்ச்சகப் பார்ப்பனரான தினேஷ் - முதல் முறை - இப்படி பக்தி வேஷத்தில் 'சுவாகா' செய்யவில்லை. இவன் இதற்கு முன்பே - சரியான மோசடி மன்னனாம்! பள்ளிக்கரணையில் 60  வயதான வேணுகோபால் என்பவரையும், இப்படி ஏமாற்றியுள்ளதாக போலீஸ் ரிக்கார்டு கூறுகிறது; அவரிடம் 5 சவரன் நகையை வாங்கி, "உனது கெட்ட தோஷங்கள் நீங்க" என்று அவரிடம் மோசடிசெய்துள்ளான்!

காவல்துறையின் ஆவணங்கள் இவன் - இந்த அர்ச்சகப் பார்ப்பான் கை தேர்ந்த "மிஸ்டர் 420" என்கின்றன; 2017ஆம் ஆண்டிலேயே புழல் சிறைக்குச் சென்றவனாம்!

பிறகு மீண்டும் இவனுக்கு கோயில் அர்ச்சகர் வேலை எப்படிக் கிடைத்தது? யார் மூலம் இவன் கோயில் அர்ச்சகர் ஆனான்? இதுபற்றி எவரும் விசாரிப்பதில்லையா?

இவனும் எஸ்.வி.சேகர், எச். இராஜா போல 'ஜம்'மென்று காலரைத் தூக்கி விட்டு எடப்பாடி அரசின் போலீஸ், பற்றிப் பேசி 'அம்மனின் ஏஜெண்ட்டாக' வலம் வருகிறான் போலும்!

எவ்வளவு பஞ்சமா பாதகம் செய்தாலும் பார்ப்பனர்கள் தப்பித்து விடுகிறார்கள் - இது இன்று நேற்றிலிருந்து அல்ல!

திருவிளையாடற் புராண காலத்திலிருந்தே நாம் பார்த்து, கேட்டு, படித்து வரும் வாடிக்கையான - வழமையானவைதான்!

அன்னையைப் புணர்ந்து தாதை குரவன் ஆம் அந்தணாளன் தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடு அளித்தது என்றால் பின்னை நீர் இழி நோய் குட்டம் பெரு வயிறு ஈளை வெப்பு என்று இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை. என்பதுதான் அந்த திருவிளையாடல் பாடல் - (மாபாதகம் தீர்த்தபடலம் - பாடல் 1573)

மதுரையில் தாயைப்புணர்ந்து, தட்டிக் கேட்ட  அவன் தந்தையைக் கொலை செய்த பார்ப்பனக் கொடூரனுக்கு சிவபெருமான் - சொக்கனோ - மக்கனோ ஏதோ ஒரு வடிவில் தோன்றி, "நீ பொற்றாமரைக் குளத்தில் (மீனாட்சியம்மன் கோயில் குளம்) மூன்று முறை மூழ்கி எழுந்தால் முக்தி நிச்சயம்" என்றாராம்!

அட பக்தி மூடநம்பிக்கைக்கு பலியான பரிதாபத்திற்குரிய பக்தர்களே, கேடி, கள்வன், பஞ்சமா பாதகன் என்றாலும் பார்ப்பனருக்குத்தான் பிராயச் சித்தம் - கழுவாய் - வருவாய் - மோட்சத்தில் 'ரிசர்வேஷன்' - உங்களுக்குப் பிச்சை பட்டை சோறு தானா?

"பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும்"

என்றாரே தந்தை பெரியார் - அது சரிதானே?

***


முழு நிலவு முந்நாள் என்றால் அதில் ஊடகங்களில், சில தொலைக்காட்சிகளில் - நிலவில் சாய்பாபா உருவம் தெரிகிறதாம்! இப்படி ஒரு திடீர் புருடா! உடனே பார்த்ததாக இரண்டு பேர்! என்னய்யா கொடுமை! அவனவன் கையில் செல்போன் - ஆன்லைன் என்ற யுகத்தில் கூடவா இப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

முன்பு நமது குழந்தை பருவத்தில் நிலாவில் "அவ்வைக் கிழவி பாட்டி பாக்கு இடிக்கிறாள், வடை சுடுகிறாள்" என்று பாட்டிகள் கதை சொல்லி சோறு ஊட்டியது உண்டு! இப்போதும் இப்படியா?

***


தொலைக்காட்சியில் மற்றொரு அருவருப்புக் காட்சியை ஒரு  நாள் கண்டேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் என்ற "அறிவின் வேந்தர்" ஒருவர் - வேட்டி மட்டும் கட்டி, சட்டையில்லாமல் கோயிலில் பக்திப் பரவசத்துடன் "டான்ஸ்" ஆடுகிறார்! பாஸ்கர் என்பது அவரது திருநாமமாம்! இவருக்கு "பக்தி ரத்னா" பட்டத்தை - கொடுக்கலாமே! இவருக்குப் பதவி  கொடுத்த மேதைகள் யாரோ! வெட்கம்! மகா வெட்கம்!! - இல்லையா?

-  விடுதலை நாளேடு,27.9.18