திங்கள், 29 அக்டோபர், 2018

பாலியல் வன்முறை : பூசாரி கைது

சூரத், அக்.26 குஜராத்தில், தாயின் மருத்துவ செலவுக்காக, பண உதவி கேட்டு வந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்த பூசாரியை, காவல்துறையினர் கைது செய்தனர்.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சூரத் மாவட்டத்தில் உள்ள தபோலி என்ற இடத்தை சேர்ந்த கரண் ஸ்வரூப்தாஸ் பாபுபாய் சவானி, 24. இவர் சுவாமி நாராயண் கோவிலில், பூசாரியாக பணியாற்றி வந்தார். இதே பகுதியை சேர்ந்த, 20 வயது பெண், தன் தாயாரின் அறுவை சிகிச்சைக்காக, பண உதவி கேட்டு, பூசாரி கரண் ஸ்வரூப்தாஸை, சமீபத்தில் அணுகினார்.உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த கரண், அந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு, வேறு எங்கும் உதவி கிடைக்காததால், நேற்று முன் தினம், மீண்டும் பண உதவி கேட்டு, கரணை சந்தித்தார்.அப்போது, இரண்டாவது முறையாக, அந்த பெண்ணை, கரண் ஸ்வரூப்தாஸ், பாலியல் வன்முறை செய்தார். இது பற்றி, அந்த பெண்ணின் பெற்றோர், காவல்துறையினர் புகார் அளித்தனர்.இதையடுத்து, கரண் ஸ்வரூப்தாஸை, காவல்துறையினர் கைது செய்தனர்.

-  விடுதலை நாளேடு, 26.10.18

வெள்ளி, 19 அக்டோபர், 2018

சாமியார்கள் ராஜ்ஜியத்தில்.... உய்யலாலா? கொலை - பாலியல் வன்முறை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை



புதுடில்லி, அக்.17 அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங்ஜடின்.அய்.டி.அய்.டிப்ளமோபட்ட தாரியான இவர் அரியானாவில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளராகப் பணி யாற்றினார்.

திருமணமாகி மனைவி, 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமி யாரானார். அரியானாவில் கரோதா கிராமத் தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரி யானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மிக சேவை ஆற்றுவதாக கூறிக் கொண்டார்.

இவர் ஆன்மிகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினார். இதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து காவல்துறை ராம்பால் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2014- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப் பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியானது.

ஹசார் நீதிமன்றத்தில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசா ரிக்கப்பட்டு வந்தன. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்முறை வழக்கில் அவருக்கு ஹசார் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

சாமியார் ராம்பால் ஹசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

 - விடுதலை நாளேடு, 17.10.18

2 கொலை வழக்கு சாமியார் ராம்பால் குற்றவாளி என தீர்ப்பு

ஹிசார், அக்.13 அரியானா மாநில அரசில் பொறியாளராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி சாமியார் ஆனவர் ராம்பால் (வயது 63). பர்வாலா என்ற இடத்தில் அவரது ஆசிரமம் அமைந் துள்ளது. நவம்பர் 19, 2014 அன்று சாமியாரின்  ஆசிரமத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர் பாக ராம்பால் மற்றும் அவரது  ஆதரவா ளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. நவம்பர் 2018 இல் ஒரு பெண் அவரது ஆசிரமத்தில் இறந்து கிடந்தது தொடர்பாக ராம்பால் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது  இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த கொலைகள்  தொடர்பான  வழக் கில் சாமியார் ராம்பால்  கைது செய்யப்பட்டு   சிறையில் அடைக்கப்பட்டார். ராம்பால் கைதானதை தொடர்ந்து காவல் துறையினருக்கும், சாமியாரின் ஆதரவா ளர்களுக்கும் இடையே நடை பெற்ற மோதலில் ஒரு குழந்தை, 5 பெண்கள் என மொத்தம் 6 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக சாமியாரின் ஆதரவாளர்கள் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாமியார் செய்த கொலைகள் தொடர்பான வழக்கு  ஹிசார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த   வழக்குகளில்  சாமியார் குற்ற வாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் குறித்த தீர்ப்பு அக் டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் வழங்கப்படுகிறது.

முன்னதாக ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 27 பேரிடம்   நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது.

- விடுதலை நாளேடு, 13.10.18