செவ்வாய், 24 ஜூலை, 2018

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல கோவில் அர்ச்சகர்

கோவா, ஜூலை 22 கோவாவில்  மங்கேஷ்கர் கோவில் உள் ளது. அங்கு பணிபுரியும் கோவில் அர்ச்சகர் வழி பாட்டுக்கு வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட தாக பெறப்பட்ட பாலியல் புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை  அர்ச்சகர் கைது செய்யப் பட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், அந்த அர்ச்சகர்மீது 354ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த புகார் குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது என்றனர். அந்த அர்ச்சகர்மீது புகார் அளித்த இரண்டு பெண்களில் ஒருவர், அமெரிக்காவில் மருத்துவம் படித்து வருபவர். அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில், பரிகார பூஜையின் போது தன்னிடம் அந்த அர்ச்சகர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.

 

- விடுதலை நாளேடு, 22.7.18

மதக்கலவரத்துக்கு வித்திடும் சாமியார்!

அய்தராபாத்துக்குள் நுழைய


ஆறு மாதத்துக்கு  தடை : காவல்துறை அறிவிப்பு




அய்தராபாத், ஜூலை 16 அய்தராபாத் நகரில்   சிறீ பீடம் சுவாமி பரிபூர்னானந்தா   காவல் துறையினரால் கடந்த இரண்டு நாள்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அய் தராபாத் நகருக்குள் நுழைய அவருக்கு ஆறு மாதத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஆணையர் அஞ்ஜனி குமார்


தெலங்கானா மாநில சமூக விரோத மற்றும் இடையூறு தடுப்புச்சட்டம் 1980 இன்படி, அய்தராபாத் காவல்துறை ஆணையர் அஞ்ஜனி குமார் இந்த ஆணையை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன் னதாக சினிமா விமர்சகர் கேதி மகேஷ் ராமன், சீதை குறித்து விமர்சித்திருந்தார். அவர் விமர்சனம் இந்து மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக எழுந்த புகாரில், அய்தராபாத் நகருக்குள் அவர் செல்வதற்கு ஆறு மாத கால தடையை காவல்துறை விதித்திருந்தது.

காவல்துறை ஆணை


தற்பொழுது  சிறீ பீடம் சுவாமி பரி பூர்னானந்தாவுக்கு அதேபோன்று அய் தராபாத் நகருக்குள் நுழைய ஆறுமாத காலத்துக்கு காவல்துறை தடைவிதித்து காவல்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

ராமன், சீதைகுறித்து கேதி மகேஷ் வெளியிட்ட கருத்துக்கு எதிராக சிறீ பீடம் சுவாமி பரிபூர்னானந்தா தர்மிகா சைதன்ய யாத்திரை எனும் பெயரில் பயணம் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். அய்தராபாத் நகருக்கு வெளியே பொட்டுப்பால் பகுதியிலுள்ள சிவன் கோயிலிலிருந்து  யதாத்ரி வரை மூன்று நாள்கள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சாமியார் அறிவித்திருந்தார்.

மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத் ரேயா, சட்டமன்ற உறுப்பினர் சிந்தாலா ராமச்சந்திரா ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் சாமியாரின் பயணத்தில் கலந்துகொள்ள இருந்தார்கள். பாஜக, விசுவஇந்து பரி ஷத் உள்ளிட்ட பிற அமைப்புகளும் பங் கேற்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவ்வமைப்பினர்மீது காவல்துறை நட வடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

சாமியார்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து காவல்துறையினர் கூறுகையில், 2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்கிற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி, தெலங்கானா மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் கூட்டங்களை நடத்தி மோசமாக பேசிவந்தார் என்று கூறினார்கள். தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான போஷ் ஜூப்ளிஹில்ஸ் இல்லத்தில் தங்கியிருந்த சாமியார் கலவரத்தை தூண்டதிட்டமிடுவதாகஅவரைகாவல் துறையினர் இரண்டு நாள்களாக வீட்டுக் காவலில் சிறை வைத்தனர். மேலும், அவரை ஆந்திரப்பிரதேச மாநிலம் காக்கி நாடா பகுதியில் உள்ள ஆசிரமத்தில் கொண்டு போய்விடவும் காவல்துறை முடிவெடுத்தது.

- விடுதலை நாளேடு, 16.7.18

சனி, 21 ஜூலை, 2018

பாஜக ஆளும் அரியானாவில் 120 பெண்களிடம் பாலியல் கொடூரம்

சாமியார் அமர்புரி கைது

ஹிசார், ஜூலை 21 அரியானா மாநிலத்தில் பில்லு என்கிற சாமியார் அமர்புரி (வயது 60) என்பவர் தன்னிடம் பக்தியின் பெயரால் வந்த பெண்களில் 120 பேரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்தார். பாலியல் வன்முறைக் காட்சிப்பதிவை தன்னுடைய செல்பேசிமூலமாக பதிவு செய்து, அப்பெண்களை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். உள்ளூர் நீதிமன்ற உத்தரவின்பேரில் 5 நாள்கள் காவல்துறையினரின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சாமியாரின் செல்பேசியில் பெண்களிடம் பாலியல் வன்முறை காட்சிகள் 120 இருந்தன. சாமியாருக்கு நெருக்கமான உறவினர் செல்பேசியை காவல்துறையினரிடம் அளித்ததைத் தொடர்ந்து, சாமியாரின் மோசடிகள், பாலியல் வன்முறைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
காவல்துறையினர் சாமியார்மீது வழக்குப்பதிவு செய்தனர். சாமியார் அமர்புரியை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி னார்கள். கைது செய்யப்பட்ட சாமியார் மனைவியை இழந்தவர். நான்கு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
காவல்துறையினருக்கு பணத்தை தர மறுத்துவிட்டதாலேயே தம்மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக சாமியார் அமர்புரி கூறுகிறார்.
துறவு நிலை என்பதைக் கடந்து, சாமியார்கள் என்றாலே, பணம், ஆடம்பரம், உல்லாசம் என்று ஆகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக சாமியார்களின் பாலியல் வன்முறைகள், குற்ற செயல்கள்  நாடு முழுவதும் பெருகிவருகின்றன.
- விடுதலை நாளேடு, 21.7.18

திங்கள், 2 ஜூலை, 2018

பாதிரியார்களின் வன்புணர்ச்சி !

#பாவமன்னிப்பு_கேட்க_வந்தபெண்ணை
#கூட்டு_வன்புணர்ச்சி !
நடந்தது என்ன ??
*
(வன்புணர்சிக்குட்ப்பட்ட)அந்தப் பெண் அன்றைய தினம் பாவ மன்னிப்பு கேட்பதற்காக திருவனந்தபுரத்தில் அருகே உள்ள பந்தனம்திட்டா வருகிறார்..
*
அங்குள்ள சிரியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிற்குச் செல்கிறார்.இவர் இப்பிரிவைச் சேர்ந்தவர்!
*
திருமணத்திற்கு முன்பு தனக்கும் ஒரு சர்ச் ஃபாதருக்கும் தகாத உறவு இருந்தது , தற்போது எனக்கு திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
*
அன்று நடந்த பாவம்,என் மனதை வாட்டுவதால் ,பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று, பாவமன்னிப்புக்  கூண்டில் இருந்த பத்தனம்திட்டா சர்ச் ஃபாதரிடம் கூறுகிறார்.
*
அங்கிருந்த ஃபாதர் பாவ மன்னிப்பு கோரிய பெண்னின் முழுக் கதையும் கேட்டு கொண்ட பின்னர் , உன் பாவங்கள் மண்னிப்பட்டது. ஆனாலும், என்னோடு ஒத்துழைத்து அதை முழுமையாக போக்கி கொள் என்கிறார்.
*
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்து, மறுத்த பெண்ணிடம், ஒத்துழைப்பு தரவில்லை என்றால், இதையெல் லாம் அப்படியே உன் கணவரிடம் சொல்லி விடுவேன் எனக் கூறுகிறார்.பயத்தில் அப்பெண்னும் சம்மதிக்கிறார்.
*
தன் ஆசையை தீர்த்துக் கொண்ட பின்,  அப்பெண்னின் பயத்தை சாதகமாக்கி,
தன் சக பாதிரிகள் 6 பேருக்கும் படுக்கையை பங்கிட்டுக் கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
*
இப்படியாக 6 பாதிரிகள் மற்றும் அவர்களுடைய 2 நண்பர்கள் என 8 பேருக்கு விருந்தளிக்கப்படுகிறது அப்பெண்னின் கற்பு.
*
இறுதியாக ஒருவருக்கு ஒத்துழைப்பு தந்த பின்,உன்னை தொந்தரவு செய்ய மாட்டோம் என வாக்களிப்பட்டதால்,
*
மேலும் ஒரு பாதிரியார் 9வது நபராக டில்லியில் இருந்து அவசரமா கேரளா வந்துள்ளார்.
*
அந்த பாதிரியின் சொல்படி குறிப்பிட்ட லாட்ஜில் அப்பெண் வர வழைக்கப்பட்டுள்ளார்.
*
வேறு வழியின்றி அங்கு சென்ற அந்த பெண்ணிடம் எல்லாவற்றையும் முடித்து விட்டு, அந்த பெண்ணோட வங்கி அட்டையை வைத்தே, லாட்ஜ் வாடகை செலுத்தியுள்ளார்,சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட டெல்லி பாதிரியார்.
*
பணம் எடுத்த மெசேஜ் அந்த பெண்ணோட கணவன் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக சென்றுள்ளது.
*
அப் பெண்னின் கணவர் பணம் என்ன காரணத்திற்காக எடுக்கப்பட்டதென விசாரித்துள்ளார். சரியான பதிலை தராத மனைவியை அடித்து விசாரித்துள்ளார். விபரம் அறிந்ததும், காவல் துறை செல்லவில்லை அப்பெண்ணின் கணவர்.
*
ஏன் ?திருச்சபை புகழ் கெட்டுவிடுமாம்?அதனால் திருச்சபை பேராயரை சந்தித்து,ஆதாரங்களோடு புகார் செய்திருக்கிறார்!
*
ஒழுக்கம் தவறும் சில பாதிரிமார்களால், அனைத்து பாதிரிமார்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால்,  அந்த சர்ச்சின் நிர்வாகம்,பாவிகள் அனைவரையும் நீக்கியதுடன், மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்!
*
தன் திருமணத்திற்கு முன் தெரியாமல் செய்த ஒரு பாவத்தைப் போக்க சென்ற இடத்தில்,ஒன்பது பாவங்கள் அவரைத் தொற்றிக் கொண்டது.
*
தற்போது பரிதாபமாக நிற்கும் இந்தப் பெண்னின் பாவத்திற்கு , யார் பொறுப்பு?
*
தேவனால் எல்லாம் கைகூடும் போது,பாவத்தை,மனிதன் எப்படி மன்னிக்க முடியும்.
*
எல்லா மதங்களிலும் இத்தகைய அவலம் நடக்கிறது.மக்களே மதத்தை உதறித் தள்ளுங்கள்.மதம் ஒரு ஆணியும் புடுங்காது.
*
இந்துமத சாமியார்கள், பாவமன்னிப்பு வழங்கும் பாதிரியார்கள்,மௌலவிகள் எவரையும் நம்ப வேண்டாம்.
*
பக்தி இருந்தால் கடவுளை மட்டும் கும்பிடு!இல்லையேல் இதையும் விட்டுவிடு!
*
எல்லா மதங்களும் மக்களால் கைகழுவப்படும் காலம் விரைந்து வரட்டும்!
தோழர் பொன்னுசாமி தமிழன்.
-  கட்செவி பதிவு

ஞாயிறு, 1 ஜூலை, 2018

பாலியல் தொந்தரவு பிஷப்மீது புகார்

திருவனந்தபுரம், ஜூலை 1 கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கோட்டயம் காவல் நிலையத்தில் பிஷப் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாஸ் திரியை பணியிடமாற்றம் செய்த தால் தம்மை பழிவாங்கும் நோக்கில் கன்னியாஸ்திரி தம் மீது புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கு மாறும் கன்னியாஸ்திரி மீது பிஷப் ஒரு புகார் மனுவை அளித் துள்ளார்.

- விடுதலை நாளேடு, 1.7.18