ஞாயிறு, 1 ஜூலை, 2018

பாலியல் தொந்தரவு பிஷப்மீது புகார்

திருவனந்தபுரம், ஜூலை 1 கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கோட்டயம் காவல் நிலையத்தில் பிஷப் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாஸ் திரியை பணியிடமாற்றம் செய்த தால் தம்மை பழிவாங்கும் நோக்கில் கன்னியாஸ்திரி தம் மீது புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கு மாறும் கன்னியாஸ்திரி மீது பிஷப் ஒரு புகார் மனுவை அளித் துள்ளார்.

- விடுதலை நாளேடு, 1.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக