திங்கள், 18 ஜூன், 2018

பெண் சீடரை பாலியல் வன்முறை செய்த வழக்கு பா.ஜ.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயாவுக்கு கைது ஆணை உ.பி. நீதிமன்றம் உத்தரவு

ஷாஜகான்பூர், மே 26 பெண் சீடரை பாலியல் வன்முறை செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின் மயானந்தாவுக்கு பிணையில் வெளிவரக் கூடிய கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாஜ.வைச் சேர்ந்த முன் னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா.உத்தரப்பிர தேசத்தை சேர்ந்த இவர், ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் மீது இவரது பெண் சீடர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

அதில், சுவாமி சின்மயா னந்தா என்னை ஆசிரமத்தில் பாலியல் வன்முறை செய் தார்.இதில்கர்ப்பமானஎன்னை கருக்கலைப்பு செய்ய மிரட்டி னார் என கூறியுள்ளார்.  இந்த வழக்கில் காவல்துறை தன்னை கைது செய்யக் கூடாது என  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சின்மயானந்தா தடை பெற்றி ருந்தார். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில அரசு சின்மயானந்தா மீதான பாலியல் வன்முறை வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு  பாதிக்கப்பட்ட பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. 

அப்போது அரசின் மனுவை நிராகரித்த நீதிபதி, சின்மயானந்தா மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது ஆணையை பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு விசா ரணைஜூலை12ஆம்தேதி நடைபெறும்போது,சின் மயானந்தாவை ஆஜர்படுத்த வேண்டும்  என நீதிபதி உத்தர விட்டார்.
- விடுதலை நாளேடு, 26.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக