புதன், 22 மார்ச், 2023

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் ஒரு வழக்கு

 

பெங்களூரு அக்15 கருநாடகா சித்ரதுர்கா முருக மடத்தில் படிக்கும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச் சாட்டில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சிறீ காவலில் வைக்கப் பட்டுள்ளார்.  கருநாடக மாநி லம் சித்ரதுர்கா முருக மடத்தின் விடுதியில் படிக்கும் இரண்டு  சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்ததாக மடாதி பதி சிவமூர்த்தி முருக சிறீ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையில் சரணடைந்த சிவமூர்த்தி முருகா, செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட் டுள்ளார். முருகசிறீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதி கரித்து வரும் நிலையில், தற் போது மடத்தில் சமையல் பணி யாளராக இருந்த பெண் ஒருவர் புதிதாக புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்வு அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. அந்த பெண், தனது மகள்களில் ஒருவரை காவல் நிலையத்திற்கு  13.10.2022 அன்று அழைத்துச் சென்று, தனது இரண்டு மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார்.

இது தவிர, மேலும் இரண்டு சிறுமிகள் உள்பட மொத்தம் நான்கு சிறுமிகள் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளான தாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலியல் துன் புறுத்தல் குற்றச்சாட்டில், சிறை யில் உள்ள சிவமூர்த்தி முருக சிறீ மீது மைசூர் நசராபாத் காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் கூடுதலாக, முருக மடத் தில் பணிபுரியும் ஊழியரின் குழந் தைகளை பாலியல் ரீதியாக துன் புறுத்திய வழக்கில் முருக மடத்தின் சீடர்கள் உட்பட 7 பேர் மீதும் எப்அய்ஆர் பதிவு செய் யப்பட்டுள்ளது. விடுதி வார்டன், சீடர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடை பெறுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஞாயிறு, 5 மார்ச், 2023

பகவான் கிருஷ்ணனை போல நான் நடந்து கொண்டேன் - அதில் என்ன தப்பு?" என்று கூறிய பாலியல் வன்கொடுமை குற்றவாளி சாமியார் ஆசாராமிற்கு ஆயுள் தண்டனை


 அகமதாபாத், பிப்.1 தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில்,  குஜராத் சாமியார் ஆசாராமிற்க்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

குஜராத் மாநிலம், அகமதா பாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசா ராம் பாபு. இவருக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் உள்ளது. இவரது ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வரும்  பெண் சீடர்களிடம் சாமியார்  அத்துமீறி வந்துள்ளார்.  இது தொடர்பான புகாரின் பேரில்,  கடந்த 2013ஆ-ம் ஆண்டு, ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டன விதித்து  2018-ஆம் ஆண்டு நீதிமன் றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரது ஆசிரம மேனாள் சிஷ்யை ஒருவர், அவர்மீது , அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அவரது மனுவில், தான்,  தனது 17 வயதில் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிர மத்தில் 2001 முதல் 2006 வரை  இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம்  பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு  குஜராத்தின் காந்தி நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிந்த நிலையில், நேற்று (31.1.2023) தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் சாமியார் குற்றவாளி என கூறிய நீதிமன்றம், அவரது  மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகள் என கூறிக் கொண்ட 4 பெண்கள் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் களை விடுதலை செய்ததுடன்,  குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.