புதன், 22 மார்ச், 2023

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் ஒரு வழக்கு

 

பெங்களூரு அக்15 கருநாடகா சித்ரதுர்கா முருக மடத்தில் படிக்கும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச் சாட்டில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சிறீ காவலில் வைக்கப் பட்டுள்ளார்.  கருநாடக மாநி லம் சித்ரதுர்கா முருக மடத்தின் விடுதியில் படிக்கும் இரண்டு  சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்ததாக மடாதி பதி சிவமூர்த்தி முருக சிறீ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையில் சரணடைந்த சிவமூர்த்தி முருகா, செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட் டுள்ளார். முருகசிறீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதி கரித்து வரும் நிலையில், தற் போது மடத்தில் சமையல் பணி யாளராக இருந்த பெண் ஒருவர் புதிதாக புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்வு அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. அந்த பெண், தனது மகள்களில் ஒருவரை காவல் நிலையத்திற்கு  13.10.2022 அன்று அழைத்துச் சென்று, தனது இரண்டு மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார்.

இது தவிர, மேலும் இரண்டு சிறுமிகள் உள்பட மொத்தம் நான்கு சிறுமிகள் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளான தாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலியல் துன் புறுத்தல் குற்றச்சாட்டில், சிறை யில் உள்ள சிவமூர்த்தி முருக சிறீ மீது மைசூர் நசராபாத் காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் கூடுதலாக, முருக மடத் தில் பணிபுரியும் ஊழியரின் குழந் தைகளை பாலியல் ரீதியாக துன் புறுத்திய வழக்கில் முருக மடத்தின் சீடர்கள் உட்பட 7 பேர் மீதும் எப்அய்ஆர் பதிவு செய் யப்பட்டுள்ளது. விடுதி வார்டன், சீடர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடை பெறுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக