வெள்ளி, 28 செப்டம்பர், 2018

ஏமாறாதே! ஏமாற்றாதே!! பக்தி வேஷம் படுமோசம்!!!

 பெரம்பூரில் வசிப்பவர் 45 வயதான திருமதி. லதா ரமேஷ் என்பவர்; அவரது மகளுக்குப் பேச்சு வரவில்லை அல்லது திக்குவாய் என்ற குறையையோ போக்க, (மருத்துவர்களிடம் போகாமல்) மேடவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரியும் 26 வயது தினேஷ் என்ற பார்ப்பனரிடம் சென்று கடவுளருள் மூலம் குணப்படுத்த வேண்டிக் கொண்டார்.

வீட்டிலுள்ள அத்தனை நகைகளையும் ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி - "90 நாள் அம்மனிடம் தொடர்ந்து வேண்டி பூஜை, அபிஷேகம் - ஆராதனை செய்து வந்தால் அந்த வாய் பேசாத பெண் பேசுவாள்" என்று நம்பிக்கையூட்டினான் அந்த அர்ச்சகப் பார்ப்பனன் தினேஷ்.

90 நாள் கழித்து பாத்திரத்தைத் திறந்து பார்த்தால் 15 சவரன்கள் உள்ள நகைகள் வைத்த இடத்தில் - பாத்திரத்தில் வெறும் கற்களே இருந்தன.

பிறகுதான் நகைகளைப் பறிகொடுத்த இந்த லதா - வயிற்றிலும், வாயிலும்  அடித்துக் கொண்டு, போலீசில் புகார் கொடுத்துள்ளார்!

இந்த அர்ச்சகப் பார்ப்பனரான தினேஷ் - முதல் முறை - இப்படி பக்தி வேஷத்தில் 'சுவாகா' செய்யவில்லை. இவன் இதற்கு முன்பே - சரியான மோசடி மன்னனாம்! பள்ளிக்கரணையில் 60  வயதான வேணுகோபால் என்பவரையும், இப்படி ஏமாற்றியுள்ளதாக போலீஸ் ரிக்கார்டு கூறுகிறது; அவரிடம் 5 சவரன் நகையை வாங்கி, "உனது கெட்ட தோஷங்கள் நீங்க" என்று அவரிடம் மோசடிசெய்துள்ளான்!

காவல்துறையின் ஆவணங்கள் இவன் - இந்த அர்ச்சகப் பார்ப்பான் கை தேர்ந்த "மிஸ்டர் 420" என்கின்றன; 2017ஆம் ஆண்டிலேயே புழல் சிறைக்குச் சென்றவனாம்!

பிறகு மீண்டும் இவனுக்கு கோயில் அர்ச்சகர் வேலை எப்படிக் கிடைத்தது? யார் மூலம் இவன் கோயில் அர்ச்சகர் ஆனான்? இதுபற்றி எவரும் விசாரிப்பதில்லையா?

இவனும் எஸ்.வி.சேகர், எச். இராஜா போல 'ஜம்'மென்று காலரைத் தூக்கி விட்டு எடப்பாடி அரசின் போலீஸ், பற்றிப் பேசி 'அம்மனின் ஏஜெண்ட்டாக' வலம் வருகிறான் போலும்!

எவ்வளவு பஞ்சமா பாதகம் செய்தாலும் பார்ப்பனர்கள் தப்பித்து விடுகிறார்கள் - இது இன்று நேற்றிலிருந்து அல்ல!

திருவிளையாடற் புராண காலத்திலிருந்தே நாம் பார்த்து, கேட்டு, படித்து வரும் வாடிக்கையான - வழமையானவைதான்!

அன்னையைப் புணர்ந்து தாதை குரவன் ஆம் அந்தணாளன் தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடு அளித்தது என்றால் பின்னை நீர் இழி நோய் குட்டம் பெரு வயிறு ஈளை வெப்பு என்று இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை. என்பதுதான் அந்த திருவிளையாடல் பாடல் - (மாபாதகம் தீர்த்தபடலம் - பாடல் 1573)

மதுரையில் தாயைப்புணர்ந்து, தட்டிக் கேட்ட  அவன் தந்தையைக் கொலை செய்த பார்ப்பனக் கொடூரனுக்கு சிவபெருமான் - சொக்கனோ - மக்கனோ ஏதோ ஒரு வடிவில் தோன்றி, "நீ பொற்றாமரைக் குளத்தில் (மீனாட்சியம்மன் கோயில் குளம்) மூன்று முறை மூழ்கி எழுந்தால் முக்தி நிச்சயம்" என்றாராம்!

அட பக்தி மூடநம்பிக்கைக்கு பலியான பரிதாபத்திற்குரிய பக்தர்களே, கேடி, கள்வன், பஞ்சமா பாதகன் என்றாலும் பார்ப்பனருக்குத்தான் பிராயச் சித்தம் - கழுவாய் - வருவாய் - மோட்சத்தில் 'ரிசர்வேஷன்' - உங்களுக்குப் பிச்சை பட்டை சோறு தானா?

"பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும்"

என்றாரே தந்தை பெரியார் - அது சரிதானே?

***


முழு நிலவு முந்நாள் என்றால் அதில் ஊடகங்களில், சில தொலைக்காட்சிகளில் - நிலவில் சாய்பாபா உருவம் தெரிகிறதாம்! இப்படி ஒரு திடீர் புருடா! உடனே பார்த்ததாக இரண்டு பேர்! என்னய்யா கொடுமை! அவனவன் கையில் செல்போன் - ஆன்லைன் என்ற யுகத்தில் கூடவா இப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

முன்பு நமது குழந்தை பருவத்தில் நிலாவில் "அவ்வைக் கிழவி பாட்டி பாக்கு இடிக்கிறாள், வடை சுடுகிறாள்" என்று பாட்டிகள் கதை சொல்லி சோறு ஊட்டியது உண்டு! இப்போதும் இப்படியா?

***


தொலைக்காட்சியில் மற்றொரு அருவருப்புக் காட்சியை ஒரு  நாள் கண்டேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் என்ற "அறிவின் வேந்தர்" ஒருவர் - வேட்டி மட்டும் கட்டி, சட்டையில்லாமல் கோயிலில் பக்திப் பரவசத்துடன் "டான்ஸ்" ஆடுகிறார்! பாஸ்கர் என்பது அவரது திருநாமமாம்! இவருக்கு "பக்தி ரத்னா" பட்டத்தை - கொடுக்கலாமே! இவருக்குப் பதவி  கொடுத்த மேதைகள் யாரோ! வெட்கம்! மகா வெட்கம்!! - இல்லையா?

-  விடுதலை நாளேடு,27.9.18

தோசம் கழிப்பதாக கூறி பெண் கழுத்தறுத்து கொலை! சிக்கினான் சாமியார்

புதுச்சேரி, செப்.22 நகைக்கு ஆசைப்பட்டு, தோசம் கழிப்பதாக கூறி, இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த  சாமியார், காவல்துறையினரிடம் சிக்கினான்.

புதுச்சேரி மாநிலம், கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அசோக்; கட்டட தொழிலாளி. இவரது மனைவி சிந்துஜா, வயது 25. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் காலை, கரிக்கலாம்பாக்கம் தெப்பக்குளம் காளி கோவில் அருகே, கழுத்து அறுபட்ட நிலையில், சிந்துஜா கொலை செய்யப்பட்டு கிடந்தார். நரபலியா என்ற சந்தேகத்தில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தராசு, 46, என்ற  சாமியார், அசோக் குடும்பத்தில் தோசங்கள் இருப்பதாகவும், அதை கழித்தால் தான் குடும்பம் செழிக்கும், திருமணம் நடக்காமல் உள்ள அசோக் தங்கை திலகத்திற்கு திருமணம் நடக்கும் என கூறி, அவ்வப்போது பரிகாரம் செய்து, பணம் பறித்துள்ளான்.அசோக்கிற்கு தெரி யாமல், சிந்துஜாவிடம் கணவர் உயிருக்கு ஆபத்து என கூறி, அதற்கு உண்டான பூஜைகள் செய்தால், அவரை காப்பாற்றி விடலாம் எனவும் கூறியுள்ளான். இதற்காக, நகைகளுடன், காளி கோவிலுக்கு வருமாறும் கூறியுள்ளார்.மூடநம்பிக்கையில் மூழ்கிய சிந்துஜா,  சாமியாரின் பேச்சை நம்பி, 20ஆம் தேதி இரவு, 8:30 மணியளவில் குளித்து, கணவரின் தங்கையின் திருமணத்திற்கு எடுத்து வைத்திருந்த நகைகளுடன், காளி கோவிலுக்கு சென்றுள்ளார்.

காளி கோவிலில் சாமி கும்பிட்ட சிந்துஜாவை, அருகே இருந்த புளியமரத்தடிக்கு கோவிந்தராசு அழைத்து சென்று, மரத்தடியின் கீழ், சாக்கின் மீது கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர வைத்துள்ளான். அவரது புடவையாலேயே இரு கைகளையும் கட்டியுள்ளான்.இறந்து போன மாமனாரை நினைத்து, ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுமாறு தெரிவித்தவன், கண் இமைக்கும் நேரத்தில், மறைத்து வைத்திருந்த கத்தியால், சிந்துஜாவின் கழுத்தை அறுத்து, கீழே சாய்த்து, மடியில் வைத்திருந்த நகைகளுடன், தலைமறைவாகி விட்டான்.போலி சாமியார் கோவிந்தராசுவை காவல்துறையினர் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

- விடுதலை நாளேடு, 22.9.18

சனி, 22 செப்டம்பர், 2018

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல்


03:00 pm Sep 22, 2018 | dotcom@dinakaran.com(Editor)





கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிஷப் பிரான்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிராங்கோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

...........

பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய பேராயர் பிராங்கோ கைது

கொச்சி, செப்.22  கன்னியாஸ்திரி பாலியல் வன்முறை வழக்கில், கேரள காவல்துறையினர் விசாரிக்கப்பட்டு வந்த, பேராயர் பிராங்கோ, 54, நேற்று கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில், பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ, 2014 - 2016இல், கேரள மாநிலம் கோட்டயத்தில் பணியாற்றினார்.அப்போது, அங்கிருந்த கன்னியாஸ்திரியை மிரட்டி, 13 முறை பாலியல் வன்முறை செய்ததாக, காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கேரள காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரிக்கின்றனர். இதையடுத்து, பேராயர் பொறுப்பிலிருந்து, பிராங்கோ விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், காவல்துறையினரின் தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானதை அடுத்து, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

 - விடுதலை நாளேடு, 22.9.18

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

அசாம் மாநிலத்தில் விஷ்ணுவின் அவதாரமாம் ‘முத்த’ சாமியார் கைது



மக்களிடையே ஏற்படுகின்ற  திருமண பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்துவித பிரச்சினைகளையும் தீர்க்கின்ற சக்தி தனக்கு இருப்பதாகக் கூறிக்கொண்டு, ராம்பிரகாஷ் சவுகான் என்ற சாமியார், மூடநம்பிக்கை களால் தன்னை நாடி வருகின்ற பக்தர்களில் பெண் பக்தைகளுக்கு முத்தம் கொடுப்பாராம். அதன்பின்னர் ஏமாறுகின்ற பெண்களை வஞ்சித்து வந்துள்ளார்.


போரால்டப் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக அவர் கோயில் கட்டியுள்ளதாகவும், ‘முத்த சாமியார்’ என்ற பெயருடன், தன்னை நாடிவரும் பக்தர்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ராம்பிரகாஷ் சவுகான் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.


பக்தர்களில் பெண்களை கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாராம். முத்தங்கள் கொடுப் பாராம். அப்படியே மெய்மறந்த நிலையில் சாமியாராக அந்த பக்தர்களின் குறைகளை கேட்டு, தீர்ப்பதாகக் கூறுவாராம்.


மத்திய அசாம் மோரிகான் மாவட்டத்தில் போரல்டப் கிராமத்தில் தன்னை சக்தியுள்ள சாமியார் என்று பரப்பிவிட்டு, உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறிக் கொண்டு, குறிப்பாக திருமணப் பிரச் சினைகள், பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு பக்தர்களிட மிருந்து ஏராளமான அளவில் பொருளை அபகரித்துள்ளார்.


மோரிகான் காவல்துறை தலைமை அலுவலர் ஜே.போரா கூறியதாவது:


“சாமியார் ராம்பிரகாஷ் சவுகான் பெண் களை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு அது ஒரு சிகிச்சை முறை என்று கூறிக்கொண்டு, பக்தர்களை சுரண்டி வந்துள்ளார். குறிப்பாக பெண்களை ஏமாற்றியுள்ளார். ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, சாமியார் ராம்பிரகாஷ் சவுகானைக் கைது செய்துள்ளோம்’’ என்றார்.


ராம்பிரகாஷ் சவுகான் விஷ்ணுவிட மிருந்து சக்தியைப் பெற்றான் என்றும், பெண்களை முத்தமிட்டால் அவர்கள் குண மடைகிறார்கள் என்றும் தன் மகன்குறித்து கூறிவந்த அவன் தாயையும் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.


அசாம் மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவுக்கு கல்வி பெற்ற மாவட்டமாக மோரேகான் உள்ளது.


கவுகாத்தி நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள மாயாங் எனும் கிராமமே மூடநம்பிக்கையால் மக்களை ஏமாற்றி வருகின்ற சாமியார்களை, மந்திரவாதிகளைக் கொண்டுள்ள கிராமமாக உள்ளது. ஓஜா அல்லது பெஜ் என்று குணப்படுத்தல் என்கிற பெயரால் போலியான சிகிச்சை சாமியார்களால் அளிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் தங்களை விஷ்ணுவின் அவதாரம் என்றே கூறிக்கொள் கின்றனர்.


அசாமில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறிக்கொண்ட ராம்பிரகாஷ் சவுகான் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டான்.


சாமியார்கள் கைது செய்யப்படும் தருணம் இது. ஜெகத்குரு என்று பார்ப்பனர் போற்றிய சங்கராச்சாரியாரே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட வில்லையா?

- விடுதலை ஞாயிறு மலர், 1.9.18

புதன், 12 செப்டம்பர், 2018

பாலியல் சர்ச்சை; பதவி துறந்தார் பிஷப்

ஆஸ்திரேலியாவில் ரோமன் கத்தோ லிக்க ஆர்ச் பிஷப்புகளில் முக்கியமானவர் பிலிப் வில்சன். அவர் 2 சிறுவர்களிடம் தகாத உறவை வைத்திருந்ததாகவும், சிறுவர்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவரை குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணை நிலுவை யில் உள்ளது. இதனால், பதவி விலக பிலிப் வில்சன் மறுத்து வந்தார்.


ஆர்ச் பிஷப் பிலிப் வில்சன் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆஸ்திரேலியாவில் வலுத்தது. இந்த விவகாரத்தில் போப் தலையிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கடந்த 19ஆம் தேதி வலியுறுத் தினார். இதனால், ஆர்ச் பிஷப் பதவியில் இருந்து பிலிப் வில்சன் எந்த நேரத்திலும் நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து தனது பதவி விலகல் கடி தத்தை போப்புக்கு பிலிப் வில்சன் அனுப்பி வைத்தார். இந்நிலையில், போப் பிரான்சிஸ் நேற்று வெளியிட்ட ஒருவரி அறிக்கையில், “ஆர்ச் பிஷப் பிலிப் வில்சன் பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

(தினமலர் வேலூர் பதிப்பு: 28.7.2018)

- விடுதலை ஞா.ம., 25.8.18

புதன், 5 செப்டம்பர், 2018

கோவிலுக்கு வந்த மாணவியிடம் பாலியல் தொல்லை: அர்ச்சகர் கைது

சென்னை, செப்.5 சென்னை மண்ணடியில் கோயிலுக்கு வந்த மாணவியிடம் அர்ச்சகர் பாலியல் தொல்லைக் கொடுத்ததால் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

சென்னை முத்தியால் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ஒருவர்  (வயது 15)  அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். சுஜாதாவுக்கு கட வுள் பக்தி அதிகமாம். வாரத்தில் பெரும்பாலான நாள்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு வருவாராம்.

மாணவி கோவிலுக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள அர்ச்சகர் நடராஜ் பூஜை செய்து பிரசாதம் வழங்குவது வழக்கமாம். அர்ச்சகர் என்ற மரியாதையுடன்சுஜாதா அவரு டன் பழகி வந்தார். அடிக்கடி பார்த்து பழகியதால் சாதார ணமாக பழகி வந்துள்ளார்.

சுஜாதாவிடம் அன்பாக பழகி அவரது மதிப்பைப் பெற்ற நடராஜுக்கு தவறான எண்ணம்உருவாகியது. இதையடுத்து சுஜாதாவை வழியில் சந்திப்பது போல் நடித்து சாதாரணமாக பேசுவது போல் நடித்து, கோவிலுக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன் றிற்கு அழைத்துச் சென்று பேசி யுள்ளார்.

பழகியவர்தானே என்று சென்ற சுஜாதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. தனியான இடம் என்றவுடன் பாலியல் வன்முறையில்ஈடுபடமுயன் றுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த சுஜாதா அவரிடமிருந்து தப்பி தனது வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்ததைக் கூறி யுள்ளார்.

அர்ச்சகரின் நடத்தை குறித்து மாணவியின் பெற்றோர்துறை முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த காவல்துறையினர் அர்ச்சகர் நடராஜன்மீது தவறு உள்ளது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அர்ச்சகர் நட ராஜனை காவல்துறையினர்

-  விடுதலை நாளேடு, 5.9.18

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

அர்ச்சகப் பார்ப்பானின் ஆபாச நடவடிக்கை

பெண்களுக்கு பாலியல் தொல்லை : கோவில் அர்ச்சகர் நீதிமன்றத்தில் சரண்


பனாஜி, ஆக.23  பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறை வாக இருந்த கோவில் அர்ச்சகர், கோவா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கோவா மாநிலத்தில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. வடக்கு கோவா மாவட்டம், மங்கேஷி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், தனஞ்ஜய் பாவே, 51, அர்ச்சகராக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, இரண்டு பெண்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது, அர்ச்சகர் பாவே, தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, கோவில் நிர்வாகி களிடமும், காவல்துறையினரிடமும், இரு பெண்களும் புகார் செய்தனர்.

இதையடுத்து, அர்ச்சகர் பணியில் இருந்து, தனஞ்ஜய் பாவே நீக்கப்பட்டார். காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்த னர். இதையறிந்த பாவே, தலைமறைவானார். கோவா நீதிமன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில், அர்ச்சகர் பாவே தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து, கோவா முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று, தனஞ்ஜய் பாவே சரண் அடைந்தார். காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 23.8.18