சனி, 22 செப்டம்பர், 2018

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல்


03:00 pm Sep 22, 2018 | dotcom@dinakaran.com(Editor)





கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிஷப் பிரான்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிராங்கோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

...........

பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய பேராயர் பிராங்கோ கைது

கொச்சி, செப்.22  கன்னியாஸ்திரி பாலியல் வன்முறை வழக்கில், கேரள காவல்துறையினர் விசாரிக்கப்பட்டு வந்த, பேராயர் பிராங்கோ, 54, நேற்று கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில், பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ, 2014 - 2016இல், கேரள மாநிலம் கோட்டயத்தில் பணியாற்றினார்.அப்போது, அங்கிருந்த கன்னியாஸ்திரியை மிரட்டி, 13 முறை பாலியல் வன்முறை செய்ததாக, காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கேரள காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரிக்கின்றனர். இதையடுத்து, பேராயர் பொறுப்பிலிருந்து, பிராங்கோ விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், காவல்துறையினரின் தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானதை அடுத்து, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

 - விடுதலை நாளேடு, 22.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக