செவ்வாய், 22 டிசம்பர், 2015

பாதிரியாரின் காமப் பசிக்கு மாணவி இரை!


திருவனந்தபுரம், ஜூலை 28_ கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோவிலில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.
இலவச கணினிப் பயிற்சி
இந்தக் கோவிலின் சார்பில் ஒரு இலவச கணினிப் பயிற்சி நிறுவன மும் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த நிறுவனத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் இலவச மாக கணினி பயிற்சி பெற்று வந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியும் கணினி பயிற்சி பெற்று வந்தார். அந்த மாணவியிடம் பாதி ரியார் ஜோமோன் அன் பாக பழகினாராம். மேலும் அவரது படிப் பிற்கும் பல உதவிகளை செய்து வந்தாராம்.
இந்த நிலையில் அவர் ஆசைவார்த்தைகளை கூறி அந்த மாணவியை பாலியல் வன்முறை செய்துள்ளார். மேலும் அதை தனது செல்பேசி யில் படம் பிடித்து வைத்து கொண்டு மிரட்டி அந்த மாண வியை தொடர்ந்து தனது ஆசைக்கு பலியாக்கி வந்துள்ளார்.
காவல் துறை கண்காணிப்பாளரிடம்...
நாளடைவில் அந்தப் பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது. தனது ஆசைக்கு இணங்காவிட் டால் அந்த மாணவியின் ஆபாச படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டத் தொடங்கினார். இதனால் பயந்துபோன அந்த மாணவி இடுக்கி காவல் துறை கண்காணிப்பாள ரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி எடுத் துக்கூறி கதறி அழுதார்.
அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி அந்தப் பாதிரியாரைக் கைது செய்தனர். அவரது செல்பேசியை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாசப் படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந் தது தெரிய வந்தது.
மேலும் அந்தப் பாதிரி யாரின் கணினியிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய் யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் பாதிரி யார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க் கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையி னர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் பாதிரி யாருக்கு எதிராக  பெண் கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துப் போராட்டங்களிலும் இறங்கியுள்ளனர்.
-விடுதலை,18.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக