வெள்ளி, 11 டிசம்பர், 2015

சிறுமிகளை பாலியல் வன்முறை செய்து தலைமறைவான பாதிரியார் பிரேசிலில் கைது


ரியோ டி ஜெனிரோ, மார்ச் 2 அமெரிக்காவின் மின்னியபொலிஸ் அருகே உள்ள ஃபின்லேசன் பகுதி யில் கிறிஸ்துவ மத தொண் டூழியம் செய்யவரும் இளம் பெண்களுக்கான கன்னி யாஸ்திரி முகாமை நடத்தி வந்த பாதிரியாரான விக்டர் அர்டன் பெர்ணார்ட் (53) என்பவர் அந்த முகாமில் பயிற்சிக்காக வந்த ஒரு சிறுமியை 13 வயதில் இருந்து சுமார் 10 ஆண்டு கள் வரை பலவந்தப்படுத்தி பாலியல் வன்முறை செய்த தாக புகார்கள் எழுந்தன.
இதேபோல், தன்னையும் அவர் 12 வயது முதல் 20 வயது வரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத் தியதாக அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண்ணும் தெரிவித்தார்.  அவரால் பாதிக்கப் பட்ட மேலும் பல பெண் கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கத் தயங்கி வந்த நிலையில் விக்டர் அர்டன் பெர்ணார்ட் கடந்த 2010ஆ-ம் ஆண்டு திடீரென தலைமறை வானார்.
அவர் பிடிபட் டால் அதிகபட்சமாக 30 ஆண்டு சிறை தண்டனை உறுதி என்ற நிலையில் அமெரிக்க காவல்துறை யினர் அவரை வலைவீசி தேடிவந்தனர்.
அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கிய குற்ற வாளியாகவும் அறிவிக்கப் பட்டிருந்த அவரை பிரே சில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 2100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ப்ரை யாடா பிப்பா கடற்கரை பகுதியில் உள்ள ஒரு பங் களாவில் நேற்று பிரேசில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவருடன் சுமார் 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்த கணி னிகள், செல்பேசிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. விரைவில் அமெரிக்க காவல்துறையினரிடம் அவர்கள் ஒப்படைக்கப் படுவார்கள் என தெரி கின்றது.
-விடுதலை,2.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக