செவ்வாய், 22 டிசம்பர், 2015

பாதிரியார்கள் திருமணம்: போப்பிடம் பெண்கள் விண்ணப்பம்


வாடிகன்,மே 21- வாடிகன் சிட்டியில் கத்தோலிக்க பாதிரி யார்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க வலி யுறுத்தி போப்புக்கு பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர். கத் தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. இந்த பழக்கம் சுமாராக ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் இத்தாலியை சேர்ந்த 26 பெண்கள் போப் பிரான்சி சுக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாங்கள் அனைவரும் கத்தோ லிக்க கிறிஸ்தவ மத பாதிரியார்களை காதலிக்கிறோம். அவர் களும் எங்களை மனமாற விரும்புகின்றனர். ஆனால், எங் களை திருமணம் செய்ய விடாமல் மத கோட்பாடு தடுக் கிறது. இதனால் நாங்கள் கடும் துயருக்கு ஆளாகி இருக் கிறோம். அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனவே, அவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள். உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். பல கஷ்டங்களில் தவிக்கும் அவர்களுக்கு மாற்றம் தாருங்கள். இதன் மூலம் அனைத்து தேவாலயங்களிலும் நல்லது நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். கடிதத்தில் தங்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை மட்டும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.  கடிதத்தில் பல தொலைபேசி எண்களையும் எழுதியுள்ளனர். இத்தகவலை வாடிகன் இணையதளம் வெளியிட்டுள்ளது.
-விடுதலை,21.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக