பெல்காம், மே 26 கருநாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமன் கோவில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.
இவர், 17 வயது சிறுமி ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன்,லிப்ட் தருகிறேன் என கூறி அவரை காரில் அழைத்துக்கொண்டு ராய்ச்சூரில் விடுதிக்குச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தொடர்ந்து, பாகல்கோட்டில் உள்ள விடுதிக்குக் கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.
பின்பு பெலகாவியில் பேருந்து நிலையம் ஒன்றில் அந்தச் சிறுமியை இறக்கிவிட்டார்.
வீட்டுக்குச் சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து பூசாரிக்கு எதிராக பாகல்கோட்டில் உள்ள நவநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.