செவ்வாய், 10 ஏப்ரல், 2018

அட ஆரியப் பதர்களே!

- மின்சாரம்




தேவநாதன் நினைவில் இருக் கிறதா? அந்தத் தேவநாதனாகிய இந் திரன் என்ன செய்தான்? கவுதம முனி வரின் மனைவி அகல்கையைக் கவுமத முனிவர் போல் உருவெடுத்து திருட் டுத்தனமாக உடலுறவு கொண்டான் என்பது புராணம். தன் மனைவியைக் கெடுத்த அந்தத் தேவநாதனுக்கு சாபமிட்டார் கவுதம முனிவர்.

என்ன சாபம் தெரியுமா? எதற்காக ஆசைப்பட்டு இப்படி ஒரு கயவாளித் தனத்தில் ஈடுபட்டாயோ - அடே இந்திரா! உன் உடல் முழுவதும் பெண் குறியாகக் கடவது என்று சாபமிட்டான். வெட்கங்கெட்ட பார்ப்பனர்கள் அதனை ஆயிரம் கண்ணுடையவன் இந்திரன் என்று கண்ணாடி போட்டு மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள்.

இப்பொழுது இன்னொரு தேவ நாதன் - அவன்தான் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சீவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் - காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகன் - 35 வயதுள்ள காளை.

என்ன செய்தது இந்தக் காளை? கோயிலுக்கு வரும் குமரிப் பெண்கள் மீது காமக் கணை வீசி மன்மதத் தாகத் தைத் தீர்த்துக் கொண்டான்.

ஆம்! கோயில் கர்ப்பக் கிரகத்துக் குள் கர்ப்பத்தை உண்டாக்கக்கூடிய காரியத்தில் ஈடுபட்டான்.

எத்தகைய வீணன் இவன்? அந்த ஆபாசத்தை யெல்லாம் கைப்பேசி யில் படம் எடுத்து இரசித்து, இரசித்து, மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் அதனைக் காட்டிக் காட்டி மிரட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் தன் சல்லா பத்தை நடத்தினான் என்றால் இந்த வெட்கக்கேட்டை என்ன சொல்வது!

அங்கே ஒரு கடவுள் இருப்பதாகச் சொல்லுகிறார்களே அது குத்துக் கல்லாக அங்கே அடித்து வைக்கப் பட்டுள்ளதே - அதற்குத்தான் சர்வ சக்தியும் வாய்ந்ததாக வாய் நீளம் காட்டுகிறார்களே - அந்தக் கடவுள் ஏன் அந்தக் கேவலத்தைத் தடுத்து நிறுத்தவில்லை?

துக்ளக் கண்டித்ததா - தினமணி திட்டி எழுதியதா - தினமலர் பதுங் கியது ஏன்? வாரந்தோறும் ஆன்மிக இதழ்களை வெளியிடுவோர் அடங் கிக் கிடந்தது ஏன்? ஏன்?

ஆனால் ஒன்று அந்த தேவநாதன் நீதிமன்றம் வந்தபோது பெண்கள் நன்றாக மொத்தினார்கள். இதில் இன் னொரு கொடுமை என்ன தெரியுமா? இந்த வழக்கில் பிணை பெற்ற அவன் கருநாடகம் சென்று அங்கு சில கோயில்களில் அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தான் என்பது - எவ்வளவுக் கேவலம்! மனுநீதி, ஒரு குலத்துக்கொரு நீதி என்பதும் இது தானே! 9 ஆண்டுகளாக இவன் மீதான வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இதில் சேர்த்துக் கொள் ளலாம்.

பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம் பந்தமில்லை என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன் னது மெய்யா? இல்லையா?

அது நடந்தது 2009ஆம் ஆண்டில் என்றால் - இப்பொழுது ஒரு காமக் கழிசடைக் கூத்து திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்திருக் கிறதே!

அதுவும் ஆண்டாளைப் பற்றிக் கவிப்பேரரசு - வைரமுத்து ஏதோ சொல்லி விட்டாராம்.

கவிப்பேரரசு அவர்கள் தனது சொந்தக் கருத்தைக் கூடக் கூற வில்லை. இன்னொரு ஆய்வாளர் எழுதியதை எடுத்துக்காட்டி ஓர் ஆய்வாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதைக்கூடப் புரிந்து கொள்ளா மல்.... அடேயப்பா கவிப்பேரரசை எவ்வளவுக் கேவலமாக இந்தப் பார்ப்பனக் கூட்டம் - ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா சக்திகள் கீழ்த்தரமாகக் குடும்ப பெண்களையெல்லாம் இழுத்து ஏசியது - நிர்வாணக் கூத்தாடியது!

ஜீயராக இருக்கக் கூடியவர் சோடா பாட்டில் வீசுவோம் என்று பேட்டை ரவுடியாகப் பேசினாரே!

இந்தப் பேர்வழிகள் எல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள்! அந்த ஆண்டாள் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் அக்கோயில் அர்ச்சகன் பக்தி நாராயண் என்ற பட்டாச்சாரிப் பார்ப்பான் பெண் பக்தைகளிடம் பாலியல் லீலைகள் ஆடித்தீர்த்திருக் கிறானே!

வெட்கமில்லையா? அந்த ஊரில் இருக்கக்கூடிய சாட்சாத் அந்த ஜீயர் நாக்கைப் பிடுங்கிக் கொண்டாரா? குருமூர்த்திகள் தான் குடுமிகளை அறுத்து கொண்டனரா?

சங்பரிவார்களின் சப்த நாடியும் அடங்கிப் போனது ஏன்? ஆண்டாள் கோயிலில் இந்த ஆரியக் குஞ்சு நடத்திய அந்தப்புற ஆபாசங்கள் அக் கோயிலில் இருந்த சிசிடிவி கேமரா வில் பதிவானவற்றை அவசர அவசர மாக இந்தச் சிண்டுகள் அழித்தது ஏன்?

மூன்றாவதாக தேவநாதன் பாலி யல் வேட்டையாடிய அதே காஞ்சி புரத்தில் இன்னுமொரு விடயம் இப் போது அம்பலத்திற்கு வந்துவிட்டது.

காஞ்சி சுப்ரமணிய சுவாமி கோயி லில் இருந்த கச்சியப்பன் வெண்கலச் சிலை காணவில்லையாம். அதை அபேஸ் செய்தவன் யார் தெரியுமா?

அந்தக் கோயில் அர்ச்சகப் பார்ப் பான் கார்த்திக் என்பவன்தான் அந்தப் பக்காத் திருடன். என்ன செய்தா னாம்? கச்சியப்பன் சிலையை கோயி லின் பக்கத்தில் உள்ள கோயில் திரு குளத்தில் வீசி எறிந்து விட்டானாம். அவனைக் கவனிக்க வேண்டிய முறையில் காவல்துறை விசாரித்த போது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் குடிபோதையில் அவ்வாறு செய்து விட்டானாம்.

எப்படி இருக்கிறது? எப்படிப்பட்ட வன் எல்லாம் அர்ச்சகனாக இருக் கிறான்? அர்ச்சகர் ஆவதற்கு ஒரே தகுதி. அவன் பார்ப்பானாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தானா?

அர்ச்சகர் ஆவதற்கு முறையாகப் பயிற்சி கொடுத்து தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்கள் - இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு அரசு சட்டம் செய்தால், அது ஆகமத்துக்கு விரோதம் என்று ஆகாயம் இடிந்து விழுந்தது போல் அவிழ்த்துப் போட்டு ஆடி ஆர்ப் பரிக்கும் பார்ப்பனர்கள் இந்தப் பார்ப் பன அர்ச்சகர்களின் அயோக்கியத் தனமான லீலைகளுக்கும் ஒழுக்கக் கேட்டுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஏன் கப்-சிப்?

சங்கராச்சாரியார் வாய்த் திறக் காதது ஏன்? ஜீயர்கள் சுருண்டு கிடப் பது ஏன்?



சங்கராச்சாரியார் எப்படிக் கண்டு பிடிப்பார்கள்! லோகக் குருவே மடத் துக்கு வரும் பெண்களைக் கையைப் பிடித்து இழுத்தவர் தானே! (உபயம்: எழுத்தாளர் அனுராதா ரமணன்).

கேட்டால் அவர்கள் ஒன்று சொல் லலாம், எங்களுடைய படைப்புக் கடவுளான பிர்மாவே தான் பெற்ற மகள் சரஸ்வதியை மனைவியாக்கிக் கொண்டவன். எங்களுடைய முழு முதற் கட வுளாகிய சிவனோ தாருகாவனத்து ரிஷிப்பத்தினிகளின் கற்பைச் சூறை யாடி சிசுனத்தை இழந்தவன்.

காம லீலைகள் செய்வதற்கென்றே ஒரு கடவுள் எங்களிடம் இருக்கிறான் - அவன்தான் கிருஷ்ணபரமாத்மா. அவனும் சாதாரணமானவன் அல்ல. எங்களின் காத்தல் கடவுளான மகா விஷ்ணுவின் அவதாரம். 60 ஆயிரம் கோபியர்களோடு கொஞ்சிக் குலாவி யவன்.

குளிக்கும் பெண்களின் உடை களைத் திருடிச் சென்று, அவர்கள் நிர்வாணமாகக் கரையில் வந்து கைகூப்பிக் கும்பிட்டால்தான் உடை களை கொடுப்பேன் என்று கூறி இர சித்தவன் அல்லவா எங்கள் கிருஷ்ண பரமாத்மா!

எங்கள் கடவுள்கள் எல்லாமே இப் படி இருக்கும்போது - அதே கடவுள் களின் அருகிலேயே இருந்து அர்ச் சனை செய்யும் எங்களையொத்த ஆசாமிகள் இப்படியெல்லாம் நடந்து கொள்வதில் என்ன தவறு என்று சொன்னாலும் சொல்லுவார்கள் - அப்படித்தானே!

- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18

புதன், 28 மார்ச், 2018

கோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்!



பக்தர்கள் தாயாக மதிக்கும் ஆண்டாள் குடி கொண்டுள்ள சிறீவில்லிபுத்தூர் கோவில் கருவறையில் நடந்த காமலீலைதான் சமீபத்தில் ரகசியமாக நடந்த கூட்டத்தின் சப்ஜெக்ட்.

பூணூல் போட்டுக்கிட்டு என்ன வேலை பண்ணிருக்கான்? அவனை சும்மா விடக்கூடாது. ஒரு கையையாச்சும் வெட்டினால்தான் அடுத்து எந்த பொம்பள மேலயும் கைவைக்க மாட்டான் என்று ஆவேசம் காட்டியபோது, சொந்த பந்தங்கள், இவளுக்கு புருஷன், புள்ளகுட்டின்னு ஒரு குடும்பம் இருக்கு. அவனை ஏதாச்சும் பண்ணிட்டா, இவ அசிங்கப்பட்டு தெருவுல நிற்கணும். தேவையா இது? பிரச்சனைய இத்தோடு விட்ருங்க என்று வேகத்தை தணித்துவிட்டனர்.

இந்தக் கசமுசா விவகாரம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, பல லட்சங்களை இறைத்திருக்கிறார்கள். சிறீவில்லிபுத்தூரில் சமூக ஆர்வலர் ஒருவர் கொதித்துப்போய்ச் சொன்ன இந்த விவகாரத்தை உறுதி செய்த அரசியல் பிரமுகரான தேரடி மாரியப்பன், சாமியை நம்பாதவன்கூட கோவிலை மதிப்பான். வாழ்க்கை , வசதின்னு எல்லாத்தையும் இவங்களுக்கு அள்ளிக் கொடுக்கிற அந்தக் கோவில்லயே தப்பு பண்ணுறத எப்படி பொறுத்துக்க முடியும்? என்றார் குமுறலுடன்.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்கள் சிலரோடு உல்லாசமாக இருந்து, அதை தன் செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்து ரசித்து வந்த அர்ச்சகர் தேவநாதன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே வழக்கில் சிக்கினார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், சிறீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில், தேவநாதன் பாணியிலேயே லீலைகள் புரிந்திருக்கிறார் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார். பக்தியை முன்னிறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ராமராஜ்ஜிய ரத யாத்திரை, தமிழகத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்த வேளையில், இந்த விவகாரம் அம்பலமாகிவிடக் கூடாது என்று ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்கள். அனைத் தையும் மீறி, கோவில் கருவறை ரகசியங்களுக்குள் நாம் ஊடுருவினோம்.

பலான வீடியோவில் பத்ரி

சிறீவில்லிபுத்தூரில் சிறீ ஆண்டாள் கோவில், வடபத்ரசாயி கோவில், தென் திருப்பதி என்றழைக்கப் படும் திருவண்ணாமலை - சிறீநிவாச பெருமாள் கோவில் ஆகிய மூன்று வைணவ கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பண்ணையார் பட்டர் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரம்பரை பரம்பரையாக, முறைமை வைத்து, மூலவர் இருக்கும் கருவறையில் தீபாராதனை காட்டி, பூஜைகள் செய்து, பக்தர்களிடம் தட்டுக் காணிக்கை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் பட்டாச்சாரியர் பத்ரி நாராயணன்.

சிறீவில்லிபுத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், திருவண்ணாமலையில் உள்ள மலைக்கோவிலான சிறீநிவாச பெருமாள் கோவிலில், பிரகாரம், உண்டியல் காணிக்கை செலுத்துமிடம், நகை அறை மற்றும் கருவறை ஆகிய 4 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறீஆண்டாள் கோவில் உட்பட சிறீநிவாச பெருமாள் கோவிலிலும் பட்டாச் சாரியராக இருந்து வருகிறார் பத்ரி. இவர் தான், சிறீநிவாச பெருமாள் கோவில் கருவறைக்குள் பெண் பக்தைகளை அழைத்துச் சென்று, பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.



ஆண்டாள் கோவில் அருகிலுள்ள பத்ரியின் வீட்டுக்குச் சென்றோம். பத்ரி ஊரிலேயே இல்லை என்றார்கள் எரிச்சலுடன். அவரது கைபேசி எண்ணுக்கு டயல் செய்தோம்; குறுந்தகவல் அனுப் பினோம். ரெஸ் பான்ஸ் இல்லை. பத்ரிக்கு எதிரான வீடியோ ஆதாரங் களைக் கையில் வைத்துக்கொண்டு, பணம் பறிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டதால், பத்ரி தலைமறைவாகி விட்டார் என்று தகவல் சொன் னார்கள் ஆண்டாள் கோவில் வட்டாரத்தில்.

சிறீஆண்டாள் கோவில் அலுவலகத்தில் செயல் அலுவலர் நாகராஜனை சந்தித்தோம். இது அஃபிசியல் மேட்டர். வெளியில் சொல்ல முடியாது என்று முதலில் தயங்கியவர், பிறகு இது வெளியில் தெரிந்தால் கோவிலுக்குத்தான் கெட்டபெயர். யார், யாரோ அவனை மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார்கள். அதனால்தான், மூன்று நாட்கள் வரை அவன் செய்த குற்றம் வெளியில் தெரியவில்லை. தக்கார் ரவிச் சந்திரன் வரைக்கும் தகவல் போனது. தக்கார் சொன் னதன் பேரில், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தோம். பத்ரியைக் கூப்பிட்டு சத்தம் போட்டோம். அவனிடம் கருவறையில் ஒரு பெண்ணிடம்? என்று விசாரித்த போது பிரசாதம் கொடுத்தேன்... என்று மழுப்பினான். அவனை அடிக்காத குறைதான். மற்றபடி, உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியேற்றிவிட்டோம். பத்ரி கோவில் ஊழியரும் கிடையாது: அரசு ஊழியரும் கிடையாது. பூர்வீகமாக முறை வைத்து பூஜை பண்ணுபவர். ஆனாலும், கோவில் கருவறையில் இழிவான செயலில் ஈடுபட்டவரை கோவிலில் வைத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அவனும் ஊரைவிட்டே ஓடிட்டான், என்றார்.

மிரட்டிய பின்னணி சி.சி.டி.வி. கேமரா இருந்தும், சிறீநிவாச பெருமாள் கோவிலுக்கு தனியாக வரும் பெண் பக்தைகளை நிதானமாக நோட்டம் விட்டு, கருவறைக்குள் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் பத்ரி. கோவிலுக்கு வரும் மூன்று பெண் பக்தைகளிடம் பத்ரி தொடர்பு வைத்திருந்தது , நட்பு வட்டத்தில் உள்ள ஒரு வனுக்குத் தெரிந்து விட, நீ மட்டுமே அனுபவித்தால் எப்படி? கருவறைக்குள் நானும் வருவேன்; உன் வலையில் சிக்கிய பெண்களை எனக்கும் கொடு. இல்லையென்றால், உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டியிருக் கிறான். பரிகாரம் பண்ணுவதாகச் சொல்லி 5 பக்தர்களிடம் கல்லா கட்டி, செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருபவன் என்பதால், கை நிறைய பணத்தைக் கொடுத்து நண்பனைச் சரிக்கட்ட முயற்சித்திருக்கிறான் பத்ரி. அவனோ பத்ரியிடம் முரண்டு பிடித்திருக்கிறான். தனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை என்ற கோபத்தில் ஒருகட்டத்தில் கருவறையில் பத்ரி ஒரு பெண்ணுடன் இருந்த இரண்டரை மணி நேர சி.சி.டி.வி. ஃபுட்டேஜை கைப்பற்றி, பிளாக்மெயில் செய்திருக் கிறான். இதே ரீதியிலான பிளாக் மெயிலில் வேறு சிலரும் ஈடுபட, விவகாரம் கோவில் நிர்வாகம் வரை போய், விசாரணை நடந்து, பத்ரியை வெளியேற்றிவிட்டனர்.

சிறீ ஆண்டாள் கோவில் நிர்வாகமே அந்த சிசிடிவி பதிவை முற்றிலுமாக அழித்து, பத்ரியின் குற்றச் செயலை மறைத்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து புகார் எதுவும் வராததால், சட்ட நடவடிக்கை குறித்த அச்சமின்றி, ஜாலியாக எங்கெங்கோ சுற்றித் திரிகிறானாம் பத்ரி.

தனியாக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் ஜாக்கிரதை! என, தமிழ்நாட்டில் போர்டு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று, நம்மிடம் சீரியஸாகப் பேசினார், பத்ரி விவகாரத்தை நன்கறிந்த உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர்!

- சி. என். இராமகிருஷ்ணன்

நன்றி:  நக்கீரன் -மார்ச் 27-29

- விடுதலை நாளேடு, 28.3.18

வெள்ளி, 23 மார்ச், 2018

தோஷம் நீக்குவதாகக் கூறி பணம் மோசடி செய்த சாமியார் கைது



விருகம்பாக்கம்,மார்ச்23தோஷம் நீக்குவதாகக் கூறி, பொதுமக்களி டம் பணம் மோசடி செய்த  சாமியாரை, காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, விருகம்பாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர், ரகுராஜ், 76. இவரது மனைவி மங்களம், 70.

இவர்களது வீட்டிற்கு, 15 ஆம் தேதி வந்த, நான்கு பேர், தங்களை பிரபல சாமியார் மற் றும் சீடர்கள் என, அறிமுகம் செய்து கொண்டனர். பின், 'இந்த வீட்டில் வசிப் போருக்கு தோஷம் உள்ளது. அதற்கான நிவர்த்தி பூஜை செய்தால், தோஷம் நீங்கி, நீண்ட ஆயுள் கிடைக்கும்' என, கூறியுள்ளனர்.

'தோஷம் நீக்கும் பரிகார பூஜைக்கு, 95 ஆயிரம் ரூபாய் செலவாகும். பூஜை பொருட்கள் வாங்க, 5,000 ரூபாய் முன் பணம் தர வேண்டும்' என்றும், அவர்கள்தெரிவித்தனர்.இதை நம்பிய ரகுராஜ், அந்த கும்பலிடம், 5,000 ரூபாய் கொடுத்தார். அவர்களும், பூஜை பொருட்கள் வாங்கி வருவதாகக் கூறிச் சென்றனர். ஆனால், வெகு நேரமாகியும் அவர்கள் திரும்பவில்லை. இதையடுத்து, வந்தவர்களால் ஏமாற்றப்பட்டதை ரகுராஜ் உணர்ந்துள்ளார்.

கேமரா பதிவு ஆய்வு

இது குறித்த புகாரின்படி, வழக்கு பதிந்த விருகம்பாக்கம் காவல்துறையினர், அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய் தனர். இதில்,சாமியார் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் பயன்படுத் திய காரின் பதிவு எண் மூலம் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விருகம் பாக்கம்நடேசன்நகரில்,காவல் துறையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டபோது, அவ் வழியே வந்த காரை மடக்கி விசாரித்தனர். அதில், அந்த கார், சாமி யார் கும்பல் பயன்படுத்திய கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், காரில்வந்தஇருவரையும், காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றனர்.அவர் களிடம் விசாரித்ததில், திருவண் ணாமலை மாவட்டம், போளூ ரைச் சேர்ந்த பிரகாஷ், 52, மற்றும் கார் ஓட்டுனர், ராஜேந்திரன், 36, என்பது தெரியவந்தது. மேலும், சாமியார் போல் தாடி வளர்த்துள்ள பிரகாஷ், ருத்திராட்சை மாலை மற்றும் காவி உடை அணிந்து, தனியாக வசிக்கும் முதியோரிடம், தோஷ பரிகாரம் செய்வதாக பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர், காரை பறிமுதல் செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள  சாமியாரின் கூட்டாளி களான, திருக்கோவிலூரைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் முருகன் ஆகியோரை, தேடி வருகின்றனர்.
- விடுதலை நாளேடு, 23.3.18

திங்கள், 5 பிப்ரவரி, 2018

அம்பலத்துக்கு வருகிறது சாமியார்களின் திருவிளையாடல்கள்




தன்னைத் தானே சாமியார் என்று அறிவித்துக்கொண்டவரான வீரேந்திர தேவ் தீக்சித்  (வயது 70) பக்தர்களிடமிருந்து பணம், நிலம் உள்ளிட்ட பொருள்களை பக்தியின் பெயரால் அபகரித்து வந்தார்.

மேலும், ஆசிரமத்தில் சேவை என்கிற பெயரில் பக்தர்களின் மகள்களையும் ஆசி ரமத்தில் முடக்கியுள்ளார். அதன்பின்னர் அப்பெண்களை அவர்களின் பெற்றோர் காண விரும்பினாலும் அனுமதி மறுக்கப் பட்டது.

ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் பலரும் தங்கள் மகள்களை மீட்கக்கோரி வழக்குரைஞர் ஷலப் குப்தாவிடம் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மகள்களை மீட்கப்போராடிவரும் பெற்றோர்

அப்பெண்களின் பெற்றோர்   தங்களின் மகள்களை மீட்பதற்காக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு உதவிட யாரு மில்லாத  நிலையில், வழக்குரைஞருக்கு எழுதியுள்ள கடிதங்களில்,

Òஎன் மகள் எங்கே அடைக்கப்பட்டிருக் கிறார் என்று கூட எங்களுக்குத் தெரிய வில்லை. என் மகளை சந்திப்பதற்கு அனுமதிக்கவில்லை. ஆசிரமத்தில் ஆபாச மான நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக கேள்விப்படுகிறோம்.

மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே எங்கள் மகளை சந்திக்கும்போது, அவள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆசிரமத் திலேயே தொடர்ந்து இருக்கப்போவதாகவும் கூறிவிடுகிறாள் ஆனால், அங்கே மிகவும் அச்சத்துடனும, பலவீனமாகவும் இருக் கிறாள். ஆசிரமத்தில் உள்ளவர்களின் அழுத்தம் காரணமாகவே அவள் அப்படி சொல்கிறார்கள் என்றே எண்ணுகிறோம். எப்படியாவது எங்கள் மகளை மீட்டுக் கொடுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்ÕÕ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சமூக அதிகாரங்களுக்கான தொண்டு நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் குப்தா அளித்த புகாரின்பேரில், டில்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாமியார் வீரேந்திர தேவ் தீக்சித் ஆசிரமங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண் டனர். அதனையடுத்தே பெற்றோர் தரப்பி லிருந்து தங்களின் மகள்களை மீட்கக்கோரி டில்லி காவல்துறையினருக்கும், வழக்குரைஞர் குப்தாவுக்கும் மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

40ஆண்டு கால சாமியாரின் மோசடிகள்

கடந்த 40 ஆண்டுகளாக சாமியார் தீக்சித்தின் Ôபுனிதமற்றÕ சாம்ராஜ்யத்தின் உள்ளே நடைபெற்றுவரும் அக்கிரமங்கள் குறித்து Ôபக்தர்கள்Õ பலரும் வெளியிட்டு வரு கின்றனர்.

கோரக்பூர் வனிதா எனும் சீடர் கூறியதாவது:

“ஆசிரமத்தில் சீடர்களாக சேர்க்கப்படு பவர்கள் முதலில் அவர்களின் உறவுகளிட மிருந்து பிரிக்கப்படுகின்றனர். வாழ்விணை யர்களிடமிருந்து முற்றிலுமாக எவ்விதத் தொடர்பும் கொள்ள முடியாத அளவுக்கு பிரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மிகவும் குறைவான அளவே உணவு அளிக்கப் படுகிறது. சமூக உறவுகளிலிருந்து அறவே துண்டிக்கப்பட்டு, பொது நிகழ்வுகளில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டுவிடுவார்கள்’’ என்கிறார்.

பக்தர்களின் பெயரால் பெண்கள் ஆசிரமத்தில் சென்று சேருவது எப்படி?

75 வயதான சாமியார் வீரேந்திராவின்  பக்தி மற்றும் பாலியல் சதி வலையில் சிக்கியவர்களில் பலரும் பிரம்ம குமாரிகள் ஆவர். ஆசிரமத்தின் முகவர்களாக செயல்பட்டு வந்தவர்கள் அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, நடுத்தர வகுப்புகளைச் சார்ந்தவர்களை சத் சங்கத்தின் பெயரில் அல்லது கீதை வழி என்று கூறிக்கொண்டு   Ôமாதாக்கள்Õ என்றும், Ôபையாக்கள்Õ எனும் பெயரில் ஆசிரமங்களில் அடைக்கப்பட்டனர்.

பிரம்ம குமாரிகள்

லேகி கிருபளானி நிறுவிய பிரம்ம குமாரிகள் அமைப்பினர் வீரேந்திராவின் சீடர்களாக மாற்றப்பட்டனர். வீரேந்திர தீக்சித் சீடர்களுக்கு ஏழு நாள்கள் உபதேசம் செய்வாராம். ஆனால், பலரும் பின்னரே அவர் ஒரு மோசடிக்காரர் என்பதை உணர்ந்தனர்.

சாமியாரிடம் மகளைப் பறிகொடுத்த காவல்துறை உதவியாளர்

சாமியாரின் சீடராகவே இருந்தவரான காவல்துறை உதவி ஆய்வாளர் கே.கார்க் கூறுகையில், “அவரை நாங்கள் கடவுளாக கருதினோம். சீடர்களாக வருபவர்களை மூளைச்சலவை செய்து, அவர்களிடமிருந்து பணம், சொத்துகள் மற்றும் அவர்களின் மகள்களையும் மகிழ்வுடனே அளிக்க செய்துவிடுகிறார்கள்’’ என்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய 16 வயது மகளை ஆசிரமத்துக்கு அனுப்பிவைக்குமாறு காவல்துறை உதவி ஆய்வாளர் கார்க்கிடம் சாமியார்  வீரேந்திர தீக்சித் கூறியபோது, ஆன்மிகத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொள்வாள் என்று நம்பி அனுப்பினோம்.   2003ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காம்பிள் எனும் சிறு நகரில் உள்ளஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டாள். அதன்பிறகு 2004, 2005 என அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக வாரந்தோறும் தியானம் செய்வதற்காக ஆசிரமத்துக்கு நாங்கள்  சென்றபோதிலும் அவளைப் பார்க்கவே முடியவில்லை.  இரண்டு முறை மட்டுமே தொலைபேசி மூலமாகமட்டுமே எங்களால் எங்கள் மகளிடம் பேச முடிந்தது’’ என்றார்.

காவல்துறையினராலேயே பெண்களை மீட்க முடியவில்லை

கே.கார்க் ஒரு காவல்துறையில் பயிற்சி களைப் பெற்று, உதவியாளராக இருந்த போதிலும், அவரால் சாமியாரிடமிருந்து தன் மகளை இதுநாள் வரையிலும் மீட்க முடிய வில்லை. அவர் மகள் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டும் இன்னமும் மீட்க முடியவில்லை.

சாமியார் வீரேந்திர தேவ் தீக்சித்தின் எளிமையான தோற்றத்தைக் கண்ட மக்கள் ஏமாறுகின்றனர். அவரின் சீடர்களோ அவரை கடவுள் என்றே கூறுகின்றனர். 2020ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று அவர் கூறுவதை நம்புகிறார்கள். அவர்கள் நன்றாக வாழ வேண்டுமென்பதற்காக நன்கொடை களை வழங்குவதன்மூலம் தங்களையே சாமியாரிடம் ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.

கடவுளைத் தேடினோம்

சாத்தானைத்தான் கண்டோம்

ஆசிரமத்தின் சேவை ஊழியராக (சேவாதர்) இருந்து வருகின்ற பெண் பாண்டா சவீதா. அவரிடமிருந்த பெருமதிப்புமிக்க  சொத்துகள், ரூ.10 லட்சத்தை சாமியாரிடம் கொடுத்தது மட்டுமல்லாமல், 2007ஆம் ஆண்டில் தன் மகளையும் தீக்சித்திடம் ஒப்படைத்துள்ளார். 2015ஆம் ஆண்டில் தன் மகளுடன் ஆசிரமத்தைவிட்டு தப்பினார்.

அவர் கூறும்போது, “நாங்கள் கடவுளைத் தேடி சென்றோம். ஆனால் சாத்தானைத்தான் கண்டோம்’’ என்கிறார்.

14 வயது சிறுமிகள் பாதிப்பு

ஆன்மிகக் கல்வி போதனை என்கிற பெயரில், 14 வயது பெண்களை குடும்பத் தினரிடமிருந்து அபகரித்துள்ளார். முதலில் குழந்தைகளை குடும்பத்தினரிடமிருந்து பிரித்து, குடும்பத்தினரை எளிதில் சந்திக்க முடியாதபடி செய்து விடுகிறார்கள்.

டில்லி ஆசிரமத்தில் காவல்துறையினரின் சோதனையின்போது, ஏராளமான சிறைச் சாலைக் கொட்டடிகள் போன்று சிறு சிறு அறைகள் ஆசிரமத்துக்குள் இருந்தன. ஆசிரமம் முழுவதும் கண்காணிப்பு கேம ராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரமத் துக்குள் உள்ள எவர் ஒருவரும் அவர் களுக்குள்ளாகவே எளிதில் சந்தித்துபேசிவிட முடியாத அளவுக்கு கெடுபிடிகள்.

குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள முடியாத கெடுபிடிகள்

ஆசிரமத்தில் உள்ள பெண்களின் குடும்பத்தார் சந்திக்க வேண்டுமானால் பெற்றோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கும் அவர்கள் நான்கு மணி நேரம் காத்திருக்கவேண்டும். பெரிய அறையில்தான் சந்திக்க விரும்புபவர்கள் நிறைய பேர் முன்னிலையில்தான் சந்தித்துக்கொள்ள வேண்டும். மகளிடம் அந்தரங்கமாக அவளின் தாயால்கூட பேச முடியாது. ஆசிரமத்தில் உள்ள தங்களின் மகள்களைக் காண விரும்புவோர் ஆசிரமம் உள்ள டில்லியிலே தங்க நேரிடும். தெலங் கானா மாநிலத்திலிருந்து வரும் பெற்றோர் தங்கள் மகளைக் காணவேண்டும் என்று விரும்பினால்,  அவர்கள் டில்லியிலேயே தங்கிவிட வேண்டியதுதான். காரணம், இரண்டு ஆண்டுகளில் தொடர் முயற்சியின்பேரில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே சந்திப்பதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்

ஆராய்ச்சியாளர்

அமெரிக்காவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவரான தங்களின் மகள் ஆசிரமத்தில் இருந்தார்.  ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுகுனு பகுதியைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளை சந்திப்பதற்கு அனுமதி கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்   அவர்கள் தங்கள் மகளைச் சந்திப்பதற்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், தங்கள் மகள் 2015ஆம் ஆண்டில் ஜூலை மாதத்திலேயே  திடீரென காணாமற்போனாள்.

ரோகினி ஆசிரமத்தில் சோதனையில்

50 பெண்கள் மீட்பு

சமூக அதிகாரத்துக்கான அறக்கட்ட ளையின் முயற்சியால் சாமியார்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.   19.12.2017 அன்று ரோகினி ஆசிரமத்தில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டது. சோதனையின்போது ஆசிரமத்தி லிருந்து 50 பெண்கள் மீட்கப்பட்டனர்.

பெண்களில் வயதானவர்களை ஆசிர மத்தைவிட்டு வெளியேறவிடாமல்,  சேவை ஊழியர் பணி (சேவாதர்) அளிக்கப்படுகிறது. பேகன்கள், மாதாக்கள் எனப்படும்  ஆசிர மத்தின் அறைகளில் அடைக்கப்பட்டு இருப்பார்கள்.  அவர்களை வயதான பெண்கள் எவரும் சந்திக்க முடியாது.

ஆசிரமத்தில் இளம் பெண்கள் Ôபேகன் களாகÕ அடைக்கப்பட்டிருப்பார்கள். சவீதாவின் மகளும் பேகனாகவே அடைக்கப்பட்டி ருந்தார். அதிகாலை 2 மணியிலிருந்து அதிகாலை 2.30 மணி வரை  தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுகின்ற சாமியாரின் உபதேசங்களை கவனிக்க வேண்டும். அடுத்த இரண்டு மணி நேரங்களாக சாமியாரின் படத்தையே உற்றுநோக்கி தியானம் செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த அதிகாலை நேரத்திலேயே குளித்து, அதிகாலை 4 மணிக்கு தயாராக வேண்டும். நாள்முழுவதும் சாமியாரின் உபதேசங்களை (முரளி-போதனை) கேட்கவேண்டும். பெற்றோருடன் போக விரும்பும் பெண்கள் சபிக்கப்படுவார்கள் என்று போதனையின்போது சாமியார் அச்சுறுத்துவாராம்.

பிரம்ம குமாரிகள் நிறுவனர் லேக் ராஜ் கிருபளானிக்கு சிவன் ஞானத்தை அளித்த தாகக் கூறியே அவருடைய போதனைகளை ÔமுரளிÕ என்று குறிப்பிடப்படுவதைப்போல், சாமியார் வீரேந்திர தேவ் தீக்சித் உபதே சங்களையும் ÔமுரளிÕ என்றே ஆசிரமத்தில் கூறிவருகின்றனர்.

பெண்களுடன் இரவுப்பொழுதில்

Ôகுப்த பிரசாதமாம்Õ

ஆசிரமத்துக்கு சாமியார் வரும்போ தெல்லாம் 8 முதல் 10 பேரை தேர்வு செய்து இரவு நேரத்தில் Ôகுப்த பிரசாதம்Õ அளிப்பாராம். காவல்துறை உதவி ஆய்வாளர் கே.கர்க், சவீதா ஆகியோர் கூறியதன்படி சாமியார் பாலியல் தொல்லைகளை பெண் சீடர்களுக்கு அளித்து வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

16,108 ராணிகளாம்

சவீதா கூறுகையில், வீரேந்திரா தேவ் தீக்சித் தன்னை கிருஷ்ணன் என்று கூறிக்கொள்வதால், Ôகுப்த பிரசாதம்Õ அளிப் பதற்காக தேர்வு செய்யப்படும் பெண்கள் ÔராணிÕ என்று அழைக்கப்படுகின்றனர். கிருஷ்ணனைப்போலவே சாமியாருக்கு 16,108 ராணிகள் உள்ளனர். ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட பெண்களின் மாதவிலக்கு பதிவுகள் பராமரிக்கப்படுகின்றன’’ என்றார்.

ஆசிரமத்தில் உள்ள பெண்கள் எழுதி வைத்த புகார்களாக தாள்கள் கண்டெடுக்கப் பட்டன. அவற்றில், அப்பெண்களின் உறவி னர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள் ளது. மோசமாக நடத்துவது, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ளன.

வழக்குரைஞர் குப்தா கூறுகையில், “பெண்கள் எழுதிய கடிதங்கள், புகார்களில் கூறப்பட்டவர்களின் பெயர்கள் அனைத்தும் பார்வையாளர் பதிவேட்டில் அனுமதிக்கப் பட்ட ஆண்களின் பெயர்களாகவே உள்ளன. இது சந்தேகத்துக்கிடமானதாக உள்ளது’’ என்றார்.

சாமியார்களை கடவுளாக கருதும் நோய்

பெண்கள் ஏராளமானவர்கள் சாமியார் தீக்சித்தை  கடவுள் என்று நம்புவது அதிர்ச்சிகரமானதுமல்ல புதியதுமல்ல. ஏற்கெனவே, சாமியார்களாக உள்ள ஆசாராம், ராம் ரகீம், ராம்பால் ஆகியோருக்கும் சீடர்களாக, பக்தர்களாக ஏராளமானவர்கள் இருந்துள்ளனர்.

சமூகவியலாளர் சிவ விஸ்வநாதன் கூறுகையில், வாழ்க்கைமுறைகள்குறித்த மக்களின் தேடுதல்களால்தான், சாமியார்களை கடவுள் என்று கருதுகின்ற தன்மையானது அதிகரித்து வருகிறது. முன்பு அரசியல் வாதிகள்  மக்களை கவர்ந்தார்கள். இப்போது  மதத்தை மய்யப்படுத்தியுள்ளனர். குரு என்பவர் அனைத்தையும் செய்யும் வலிமை பொருந்தியவர் என்று கருதுவதால் இது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன என்றார்.

சாமியாரின் ஆசிரமங்கள்

1976-77இல் அத்யாத் மிக் விஷ்வவித்யாலயா அல்லது ஆன்மிக பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
பன்னாட்டளவில் 25ஆயிரம் பக்தர்கள் உள்ளனர்.

இந்தியா, நேபாளத்தில் 160 ஆசிரமங்கள்

ஆசிரமத்தில் 60 முதல் 70 விழுக்காட்டளவில் பெண்களே உள்ளனர். மாதாக்கள், பேகன்கள் நிலைகளிலிருந்து சிவசக்தியாக உயர்த்துவதாகக் உறுதி கூறப்பட்டது.

- விடுதலை ஞாயிறு மலர், 27.1.18

வியாழன், 1 பிப்ரவரி, 2018

சிறீவில்லிபுத்தூர் ‘ஜீயரின்' ரவுடித்தனப் பேச்சு

ஆண்டாளைப்பற்றிப் பேசினால் சோடா பாட்டில் வீசுவோம்; கல்லெறிவோம்!

சிறீவில்லிபுத்தூர் ‘ஜீயரின்' ரவுடித்தனப் பேச்சு



விருதுநகர், ஜன 27 கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எதிரான கண்டன கூட்டத்தில், எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்,கல் எறியத்தெரியும், என சிறீ வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியுள்ளார்.

‘தினமணி' நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியொன்றில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து உரையாற்றினார். அதில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவரின் கட்டுரையை மேற்கோள் காட்டி பேசினார். அந்த உரையில், வைரமுத்து ஆண் டாள் குறித்து தரமற்ற வார்த்தைகளில் பேசியதாக கூறி, வைரமுத்துவிற்கு எதிராக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக, ஜீயர் சடகோப ராமானுஜர், வைரமுத்து சிறீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்.

இந்நிலையில், வைரமுத்துவுக்கு எதிராக ஆண் டாள் கோவிலில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் மீண்டும் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது, ‘‘குளத்தூர் பகுதியில் ஆண்டாள் குறித்து 3 ஆம் தேதி ஒருவன் பேசப் போறானாம்; ஏற்கெனவே ஒருத்தன் (வைரமுத்து) ராஜபாளையத்தில் பேசிவிட்டுச் சென்று விட்டான். அதற்கான பலனை அனுபவிக்கிறான். இப்போது குளத்தூரில் பேசப்போகிறானாம்.

சோடா பாட்டில் வீசுவோம்!

குளத்தூரில் மட்டுமல்ல, உலகின் எந்த இடத்திலும் ஆண்டாளைப்பற்றிப் பேசக்கூடாது; எந்த ஒரு இந்துக்கடவுள் குறித்தும் பேசக்கூடாது. இனி யாரும் கடவுள் குறித்து ரோட்டில் மேடை போட்டுப் பேசக் கூடாது. அப்படிப் பேசினால் நாம் அங்கே போகணும். இத்தனை நாள் சாமியார் எல்லாம் சும்மா உட் கார்ந்திருந்தோம். இனிமேல் நாங்களும் கல்லெறிய முடியும், கண்ணாடி உடைப்போம், சோடா பாட்டில் எறிவோம்.

குடியரசு தினம், குடிப்பதற்குத்தான் இருக்கிறது. இன்று 26 ஆம் தேதி, குடியரசு தினம். ஆனால், டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கின்றன'' என்றார்.

அப்போது, அருகிலிருந்தவர்கள் உற்சாகமாக சிரித்தனர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது..

ஜீயரின் இந்த ரவுடித்தனப் பேச்சுக்காக பூணூல் அறுப்புப் போன்ற எண்ணம் இயக்கத் திற்கு அப்பாற்பட்டவர்களிடம் எழுந்தால் என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டியுள்ளது. வன்முறை இருகூர் உள்ள ஆயுதம் அல்லவா!
- விடுதலை நாளேடு, 27.1.18