-விடுதலை,2.7.17
ஞாயிறு, 2 ஜூலை, 2017
அர்ச்சகர்மீது பாலியல் வன்முறை நில அபகரிப்பு புகார் - வழக்கு
-விடுதலை,2.7.17
ஞாயிறு, 21 மே, 2017
கேரளாவில் பாலியல் வன்கலவி செய்ய முயன்ற சாமியாரின் பிறப்புறுப்பை துண்டித்த இளம்பெண்: முதல்வர் பாராட்டு
சனி, 20 மே, 2017
சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த சட்ட கல்லூரி மாணவி.. கேரளாவில் பரபரப்பு
http://tamil.oneindia.com/news/india/kerala-law-student-chops-off-godman-s-penis-cm-backs-her-283306.html For more updates Download Oneindia App. For Android click http://bit.ly/1indianewsapp . For iOS click http://bit.ly/iosoneindia
திங்கள், 3 ஏப்ரல், 2017
கூடுவாஞ்சேரி பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: காவல்துறையினரிடம் சிக்கிய சாமியார்
கூடுவாஞ்சேரி, ஏப். 3- கூடுவாஞ்சேரியில், பரிகாரத்திற்கு வந்த பெண்ணிடம், தவறாக நடக்க முயன்று, கொலை முயற்சியில் ஈடுபட்ட சாமியார், கைது செய்யப்பட்டான்.
கூடுவாஞ்சேரி, வள்ளி நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (34). பல்லாவரத்தில், தையலராக பணியாற்றுகிறார். இவர் மனைவி துர்கா தேவி (24). இவர்களுக்கு, 2 வயதில், மகன் உள்ளான். துர்கா தேவிக்கு, அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டுஉள்ளது. பலவித மருந் துகள் எடுத்தும், பிரச்சினை தீரவில்லை. நந்திவரம், ராணி அண்ணாநகரில் உள்ள அண் ணாமலை (48) என்ற சாமியா ரிடம், அருள்வாக்கு பெற்றால் குணமாகும் என, சிலர் கூறி யுள்ளனர்.
அதன்படி, ஜனவரியில், துர்கா தேவி, அவர் பாட்டியு டன் அண்ணாமலை சாமியாரு டன் சென்றுள்ளார். அப்போது, அண்ணாமலை, துர்கா தேவி யிடம், அத்துமீறியபாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளான். அதைத் தடுக்க முயன்ற துர்கா தேவியின் கழுத்தையும் நெரிக்க முயன்று உள்ளான்.
இதை யாரிடமும் கூறி னால், குழந்தையை முடமாக்கி விடுவேன் என, மிரட்டியுள் ளான். இதனால், பயந்த துர்கா தேவி, அங்கிருந்து தப்பி, பாட்டியுடன் வீடு திரும்பினார். இதுகுறித்து, அவர் யாரிடமும் கூறவில்லை. ஆனால், கடந்த சிலநாட்களாக, உடல் மற்றும் மனதளவில், துர்காதேவி அதி கமாக சோர்வுற்றுள்ளார். இரண்டு முறை தற்கொலை முயற்சியி லும் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த அவரது கண வர் சந்தோஷ் குமார், நேற்று முன்தினம், துர்காதேவியிடம் விசாரிக்கையில், சாமியார் அண்ணாமலையின் அட்டூழி யங்களை கூறியுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த சந்தோஷ் குமார் மற்றும் அப்பகுதிவாசி கள், சாமியாரைப் பிடித்து, கூடு வாஞ்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தோஷ் குமார் புகாரின் அடிப்படை யில், அண்ணாமலையிடம், கூடுவாஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார் விசா ரணை மேற்கொண்டார்.
விசாரணையில் தெரியவந்த தாவது: சாமியார் அண்ணா மலை, சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவன். சில ஆண்டுகளுக்கு முன், நந்திவரம் அரசுப் பள்ளி அருகே,டூவீலர் மெக்கானிக்காக பணி செய்து உள்ளான்.அதிக முடி வளர்த்து, கொண்டை போட்டு வலம் வந்த இவன், பார்ப்பதற்கு சாமியார் போல் தோற்றமளித்துள்ளான்.
இதையே சாதகமாக்கி, தொழிலாகவும் தொடங்கியுள் ளான்.நந்திவரம், ராணி அண் ணாநகரில், ஆசிரமம் போன்ற அமைப்பை உருவாக்கி, அங்கு, அருள்வாக்கு கூறி, பணம் சம் பாதித்துவந்துள்ளான். இந் நிலையில், துர்கா தேவியிடம் அத்துமீறியதால், சிக்கியுள் ளான். இது போல பலரிடம் அவன், தவறாக நடக்க முயன் றதாக காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளான்.
இவ்வாறு காவல்துறையினர் கூறினர். சாமியார் அண் ணாமலை மீது, கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவு களின் கீழ், வழக்குப்பதிவு செய்து, அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்த னர்.
-விடுதலை,3.4.17
வெள்ளி, 17 மார்ச், 2017
அருள் வாக்கு கூறுவதாக சாமியார் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
நாமக்கல், மார்ச் 17 நாமக் கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்தில் உதவியாளராக பணி யாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் நாமகிரிப்பேட்டை அரு கில் உள்ள அரியா கவுண்டம் பட்டி சண்டி கருப்புசாமி கோவி லில் பூசாரியாகவும் உள்ளார்.
இவர் மீது திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி கடந்த 13-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த 2013ஆ-ம் ஆண்டு முதல் எனது கணவர் அண்ணாதுரை உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தார். அருள்வாக்கு சாமியா ரும், முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளரின் உதவியாளருமான ராஜேந்திரனிடம் எங்களை சிலர் அழைத்து சென்றனர். அவர், யாரோ செய்வினை வைத்து உள்ளனர். நான் மந்தி ரித்து தரும் எண்ணையை உட லில் தடவி வந்தால் குணமாகி விடும் எனக் கூறி 4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டார். 6 மாதங்கள் கழித்து பவுர்ணமி பூஜை செய்ய வேண் டும் என்று கூறி ரூ. 80 ஆயிரம் பெற்றுக் கொண்டார். அந்த பூஜையில் மஞ்சள் நிற புட வைக் கட்டி கொண்டு கலந்து கொண்டேன்.
ஆனால் சாமியார் ராஜேந் திரன் எந்த எண்ணையும் தர வில்லை. தற்போது அங்குள்ள கோவில் முன்பு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் நோய் சரியாகி விடும் எனக்கூறி 5 லட்சம் பணம் கேட்டார். நான் பணம் கொடுக்க மறுத்தேன். அதற்கு அவர் நீ பவுர்ணமி பூஜையன்று உடை மாற்றும் போது எடுக்கப்பட்ட ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அதை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி னார். அரசு ஊழியராக இருக் கும் ராஜேந்திரன் குடும்ப பிரச்சினை காரணமாக வரும் பெண்களை மிரட்டி பணம் வசூலித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்த ஆசியா மரியம் உத்தர விட்டார். இதையடுத்து ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அருள் வாக்கு பெற வரும் பெண் களிடம் தவறாக நடந்து கொள் வதாக சாமியார் ராஜேந்திரன் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
-விடுதலை,17.3.17
வியாழன், 29 டிசம்பர், 2016
பாதிரிமார்களில் இரண்டு விழுக்காட்டினருக்குமேல் பாலியல் வன்முறை : ஃபோப் ஒப்புதல்!
ரோம், ஜூலை 15-_ பாதிரிமார்களில் ஏறக் குறைய இரண்டு விழுக் காட்டளவினர்மீது பாலி யல் வன்முறைக் குற்றச் சாட்டு உள்ளதாக போப் பிரான்சீஸ் தெரிவித் துள்ளார்.
இத்தாலி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மதக் குருமார்கள்மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு இருப்பதை, போப்பின் திருச்சபை இல்லத்திலேயே தொழுநோயாக உள்ளது என்றும் வருணித்துள்ளார்.
லா ரிபப்ளிகா நாளி தழின் நிறுவனரும், 90 வயதுள்ள நாத்திகருமான யூஜினோ ஸ்கால்ஃபரி பல முறை போப்புகளைக் கண்டித்து எழுதி வந்துள் ளார். யூஜினோவுடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாட லில் போப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது,என்னுடன் பணியாற்றுபவர்களில் என்னிடம் (சிறார்களிடம் பாலியல் வன்முறைக்கு எதிராக இருப்பதால்) மோதல் போக்கில் இருக் கிறார்கள். குறிப்பாக சர்ச்சுகளில் சிறார்கள் மீதான பாலியல் வன் முறைகளில் ஈடுபடுவோர் இரண்டு விழுக்காட் டளவில் உள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த புள்ளி விவரத்தகவல்கள் என்னை புதிய சிந்தனைகளுக்கான நடவடிக்கைகளில் தள்ள வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால், இந்தத் தகவல் புதைகுழியாகவே பார்க்கப்படுகிறது என்று போப் கூறினார்.
சர்ச்சுகள் குறித்த 2012 ஆண்டின் புள்ளி விவரங் களின்படி, கத்தோலிக்கக் கிறிஸ்துவ பாதிரிகள் 4,14,000 பேர் உலகம் முழுவதும் உள்ளனர்.
வாடிகன் தொடர்பா ளர் ஃபெடரிகோ லோம் பார்டி கூறும்போது, லா ரிபப்ளிகா நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல் களை முழுமையாக போப் கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை. சிறுவர்கள்மீதான பாலியல் வன்முறைகுறித்த புகாரில் கர்தினால்கள் இருப்பதாகக் கூறப்படுவ தற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. சிறுவர்களுக்கான வாசகர்களை கவர்வதற் காக அப்படி வெளியிட் டுள்ளது என்று கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக 26 பெண்கள் போப்பிடம் பாதிரிமார் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவும், மதப்பணி களில் ஈடுபடும் பெண் களும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,15.7.14
ஞாயிறு, 18 டிசம்பர், 2016
சிறுமி பாலியல் வன்கொடுமை கத்தோலிக்க பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.