செவ்வாய், 23 ஜனவரி, 2018

மந்திரவாதி கைது

புனே, ஜன.20  குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பெண்ணை பாலியல் வன்முறை செய்த மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சத்தாராவை சேர்ந்த 37 வயது பெண் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த பெண் ணுக்கு தீராத நோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்தநிலையில் மந்திரவாதி ஹைதர் அலி என்பவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானார். அவர் அந்த பெண்ணுக்கு இருக்கும் நோயை குணப்படுத்துவதாக கூறி, அவரின் வீட்டிற்கு அடிக் கடி வந்து சென்றார்.

சம்பவத்தன்று வழக்கம் போல பெண்ணின் வீட்டிற்கு வந்த ஹைதர் அலி, தான் வாங்கி வந்திருந்த குளிர்பானத் தில் மயக்க மருந்தை கலந்து அந்த பெண்ணிற்கு குடிக்க கொடுத்தார். அதைக் குடித்த பெண் மயங்கினார். இந்த  வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஹைதர் அலி, அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்து அந்த காட்சி களை தனது செல்போனில் படம்பிடித்து உள்ளார்.

இந்தநிலையில் மந்திரவாதி ஹைதர் அலி அந்த ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பெண்ணிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகளையும் பறித்து உள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண், சம்பவம் குறித்து அங்குள்ள காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை பாலியல் வன் முறை செய்ததுடன், நகைகளை யும் பறித்த மந்திரவாதி ஹைதர் அலியை கைது செய் தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோ தனைக்கு அனுப்பி உள்ளனர்.

- விடுதலை நாளேடு, 20.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக