செவ்வாய், 3 மார்ச், 2020

காவிகளின் "கிருஷ்ணலீலா!" பெண்ணைக் கடத்தி மடாதிபதி ஓட்டம்

பெண்ணைக் கடத்தி மடாதிபதி ஓட்டம்

கோலார், பிப். 29-  சிவராத்திரி நாளில் கோயிலுக்கு வந்த 20 வயது இளம் பெண்ணுடன் 45 வயது மடாதிபதி ஓடிப் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் மாவட்டம் கோலார் தாலுகாவில் உள்ள எவுலியாகிராமத்தில் பழைமையான பீமலிங் கேஷ்வரசாமி சேவாஷ்வரம மடம் உள்ளது.  இதில் தத்தாத்ரேயா  சவதூதா (வயது 45) என்பவர் மடா திபதியாக  இருந்து வரு கிறார். மடத்தில் முழுக்க முழுக்க சைவ நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

சேவாஷ் வரமத்திற்கு எவுலியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமில் லாமல், அதை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிரா மத்தினரும் வந்து தங்கள் குடும்ப கஷ்டங்களை மடா திபதியிடம் கூறி ஆலோ சனை பெற்று வந்தனராம்.

இம்மடத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் சிவ ராத்திரி விழா என்று கூறி காலை தொடங்கி நள்ளி ரவு வரை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. தினமும் நூற்றுக்கணக்கான பக் தர்கள் வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி முதல் மடாதிபதி தத்தாத்ரேயா சவதூதாவை மடத்தில் காணவில்லை . அவர் எங்கு சென்றார் என்று புரியாமல் அனைவரும் தவித்து வந்தனர். சேவாஷ்ரமத்தில் உள்ள மூலவருக்கு மடத்தில் இருக்கும் சீடர்களே பூஜை செய்து வருகிறார்களாம்.

இதனிடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரும் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போய் இருந்தார். அவரையும் குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் 20 வயது இளம்பெண்ணுடன் 45 வயது மடாதிபதி ஓடிப் போனதாக கிராமத்தினருக் குத் தகவல் கிடைத்தது. இது குறித்து கோலார் ஊரக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனிடையில் அவர்கள் இருவரும் ரகசியமாகத் திரு மணம் செய்து கொண்டுள்ள தகவல் கிராமத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. மடாதிபதி மற்றும் அவருடன் சென் றுள்ளதாக கூறப்படும் இளம் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் எவுலியா கிராமம் மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள கிரா மங்களிலும் பரபரப்பை ஏற் படுத்தி, சாமியாரின் காமக் கொடூரத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

 - விடுதலை நாளேடு, 29.2.20

1 கருத்து:

  1. சாமியார் என்றாலே... பூசை... அர்த்த சம பூசை... அப்பறம் அஜால் குஜால்.... பூசை ....நடக்கத்தானே வேண்டும் .. தெரிந்ததுதானே போறாங்க முட்டாள்கள்

    பதிலளிநீக்கு