வெள்ளி, 13 நவம்பர், 2015

பூசாரிகளின் யோக்கியதை!


இந்துமத அறக்கட்ட ளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் ஆண்டு நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக் கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.
நாங்கள் தேசத்தின் பல்வேறு  பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது.
அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதிவிலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.
பொருளறியாத புலம்பலே மந்திரம்!
அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது.
தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலை யில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை.
சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?
ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழி பாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படுகிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
தெய் வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.
மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார். தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.
=விடுதலை,2.10.15

மதபோதகர் கைது

வேலூர், அக்.16 மாணவியுடன், 'உல்லாச மாக' இருந்து விட்டு, திருமணத்துக்கு மறுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைதானார்.வேலுர் மாவட்டம், திருப்பத்துர் அடுத்த ஜலகாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பெண், அருகில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, அப்துல்லாபுரத் தைச் சேர்ந்த தீபக்குமார், 47, ஜலகாம்பாறை அருகே உள்ள, மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில், மதபோ தகராக இருந்து வரு கிறார்.தேவாலயத்துக்கு, அடிக்கடி மாணவி சென்ற போது, மதபோதகருடன் பழகி உள்ளார். இதை யடுத்து, அவர், பல இடங் களுக்கு, மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலை யில், ஆகஸ்ட் மாதம், மாணவியை, சென்னைக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள் வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் மதபோதகர், 'உல்லாசமாக' இருந்த தாகத் தெரிகிறது. இதன் பின், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அவரை, மாணவி வலியு றுத்தியதற்கு, மறுப்பு தெரிவித்து உள்ளார்.
அத்துடன், 'சம்ப வத்தை வெளியே தெரிவித் தால், கொலை செய்து விடுவேன்' எனவும், மத போதகர் மிரட்டி உள் ளார். இதுகுறித்து, திருப் பத்துர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், மாணவி புகார் கொடுத் தார். வழக்கு பதிந்த காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு, மத போதகர் தீபக்குமாரை கைது செய்தனர்.
-விடுதலை,16.10.15

பெண் நரபலி : மந்திரவாதி கைது


மடிகேரி, அக்.16 கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி புறநகர் பகுதியில் 21 வயது மந்திரவாதி ஒருவர் பில்லி சூனியம் வைத்தல், எடுத் தல் போன்ற மாந்த்ரீ கங்கள் செய்து வந்தார்.
18 வயதிலேயே தன்னி டம் அபூர்வ சக்தி இருப் பதாகவும், தன்னை மந்தி ரவாதி என்றும் கூறிக் கொண்டார். தனது பெயரை துர்க்கா தத்தா காளிதாஸ் என்று வைத் துக் கொண்டார். அமா வாசை போன்ற விசேஷ நாட்களில் சாமியாடிக் கொண்டே குறி சொல் வார். இதனால் பிரபலமா னார். ஏராளமான கிராம மக்கள் அவரிடம் வந்து தங்கள் குறைகளைச் சொல்லி நிவர்த்தி கேட்டு சென்றனர்.
மேலும் அந்தப் பகுதி யில் புதையல் இருப்ப தாகவும் அதை நரபலி கொடுத்தால் கைப்பற்ற லாம் என்றும் மந்திரவாதி கூறி வந்தார்.
இந்த நிலையில் மடி கேரி அருகில் உள்ள இப்னி வேலவாடி கிரா மத்தைச் சேர்ந்த ஆஷா என்ற பெண் நீண்ட நாட் களாக நோய் வாய்ப்பட்டு கிடந்தார். அவரது தீராத நோயை தீர்த்து வைப்ப தாக கூறி மந்திரவாதி தன்னை சந்திக்க வருமாறு கூறினார். இதற்கு அவரது கணவரும், மகன்களும் சம்மதித்தனர்.
அமாவாசை தினத் தன்று தனது வீட்டுக்கு ஆஷாவை வரவழைத்தார். பூஜை அறையில் உட்கார வைத்து பூஜைகள் செய் தார். நடனமாடியவாறே ஏதேதோ மந்திரங்கள் சொன்னார். திடீர் என்று அவர் பூஜை அறையில் இருந்து அரிவாளை எடுத் துக் கொண்டு சாமியா டியவாறு இருந்தார்.
திடீர் என்று யாரும் எதிர்பாராத வகையில் ஆஷாவை அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டிக் கொன்று ரத்தத்தை எடுத்து நரபலி கொடுத் தார். மந்திரவாதி என்ப தால் கிராம மக்கள் அதை தடுக்க முன்வரவில்லை.
இந்த பயங்கர சம்பவம் பற்றி 2 நாள் கழித்து காவல்துறைக்கு தெரிய வந்தது. உடனே காவல் துறை அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று மந்திர வாதியை கைது செய்தனர். நரபலி கொடுக்க உதவிய தாக அவரது உதவியா ளர்கள் தாரணி, பவன், கவன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
4 பேரும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர். பெண் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையுண்ட ஆஷா வின் கணவர் நானய்யா பெங்களூரில் செக்யூரிட்டி காவலாளியாக பணிபுரி கிறார். ஒரு மகன் ஹரிஷ் பெங்களூரில் பணிபுரி கிறார். மற்றொரு மகன் சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.டெக் படித்து வரு கிறார்.
தாயின் உடல் நலம் குணமாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மந்திரவாதியை சந்திக்க மகன்கள் சம்மதித்தனர். ஆனால் மந்திரவாதி கொடூரமாக செயல்பட்டு நரபலி கொடுத்து விட் டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-விடுதலை,16.10.15

புதன், 11 நவம்பர், 2015

ரஜ்னீஷ் சாமியாரின் அந்தரங்க வாழ்க்கை


கால-மான பின் அவ-ரது மதிப்பு உண-ரப்-பட்-டா-லும், வாழும் காலத்-தில் ஒரு சர்ச்-சைக்கு-ரிய சாமி-யா-ரா-கவே கரு-தப்-பட்-ட-வர், ஓஷோ ரஜ்-னீஷ். அதி-ர-டி-கள் நிறைந்த ரஜ்-னீ-ஷின் வாழ்-வில் அவ-ரது நிழ-லாக இருந்-த-வர் மா ஆனந்-த-ஷீலா.
ரஜ்-னீ-ஷின் முதல் உத-வி-யா-ள-ராக, காத-லி-யாக, ஆசி-ர-மத்-தின் தலைமை நிர்-வா-கி-யாக இருந்த ஆனந்-த-ஷீலா, ரஜ்-னீ-ஷின் அந்-த-ரங்கங்கள் அனைத்-தும் அறிந்-த-வர்.
ரஜ்-னீ-ஷுக்கு இணை-யாக அதி-ரடித் திருப்-பங்கள் நிறைந்-தது இவ-ரது வாழ்க்கை.
ஒரு நொடி-யில் சட்-டென்று தீர்-மா-னித்து ரஜ்-னீ-ஷி-டம் சர-ண-டைந்த ஆனந்-த-ஷீலா, அவ-ரது ஆசி-ர-மத்-தின் உச்ச நப-ராக உயர்ந்-தார்.
ரஜ்-னீஷ் மறை-வுக்குப் பிறகு பல கோடி ரூபாய் பணத்-துடன் ஆசி-ரமத்-தில் இருந்து ஓடிப்-போய்-விட்-ட-தாகக் குற்-றஞ்-சாட்-டப்-பட்ட இவர், 39 மாதங்க-ளைச் சிறை-யி-லும் கழித்-தார்.
தற்-போது சுவிட்-சர்-லாந்-தில் ஒரு முதி-யோர் இல்-லத்தை அமை-தியாக நடத்-திவரும் ஆனந்-தஷீலா, ரஜ்-னீஷ் பற்-றிய உள்-வட்ட ரக-சியங்களை தனது புதிய புத்-தகத்-தில் வெளிப்-ப-டுத்-தி-யி-ருக்கி-றார்.
அவரைக் கொல்-லா-தீர்கள் என்ற அந்த நூலில் இருந்து சில துளி-கள்...
  • மும்-பை-யில் எனது நெருங்-கிய உற-வி-னர் வீட்-டுக்கு எதி-ரே-தான் ரஜ்-னீஷ் அப்-போது வசித்-தார். அத-னால் அப்-பா-யின்ட்-மென்ட் ஏதும் பெறா-மல் நாங்-கள் அவரை நேரே சந்-திக்கச் சென்-றோம். அதா-வது, நானும் என் அப்-பா-வும். அது என் வாழ்க்-கை-யில் மிக முக்கி-ய-மான தரு-ணம். அது-தான் எங்-கள் முதல் சந்-திப்பு.
பக-வா-னின் (ரஜ்-னீஷ்) செய-லா-ளர் மா லட்சுமி, பக-வா-னின் அனு-மதி பெற்று எங்-களை உள்ளே அனு-ம-தித்-தார்.
ஒரு அறை-யில் வச-தி-யான நீண்ட கைப்-பிடி நாற்-கா-லி-யில் கால்-களை குறுக்காகப் போட்-ட-படி ரஜ்-னீஷ் அமர்ந்-தி-ருந்-தார். அவ-ரைத் தவிர அறை-யில் வேறு யாரும் இல்லை. நான் அறைக்குள் நுழைந்-த-தும் என்-னைப் பார்த்-துப் பிர-கா-ச-மா-கப் புன்-ன-கைத்-தார், வாஞ்-சை-யோடு கைகளை விரித்-தார். அவ-ரது கரங்க-ளுக்குள் நான் அப்-ப-டியே போய் விழுந்-தேன். அவ-ரது நெஞ்-சோடு என்னை இறுக அணைத்துக் கொண்-டார். பர-வ-சத்-தில், எல்-லாம் அப்-ப-டியே உறைந்-து-விட்-டது போலி-ருந்-தது எனக்கு. இனி இவர்-தான், இவரை விட்டு விலகி என்-னால் வாழ   முடி-யாது என்று நான் அந்தக் கணத்-தில் முடிவு செய்-தேன்.
ஷீலா... நீ நாளை மதி-யம் 2.30-க்கு என்னை வந்து பார் என்-றார் பக-வான். அன்று இர-வு-தான் என் வாழ்க்-கை-யில் மிக நீண்ட இரவு. மறு-நாள், நான் மிக மிகப் பொறு-மை-யி-ழந்து காத்-தி-ருந்த அந்த நேரம் வந்-தது. பக-வா-னி-டம் ஓடிச் சென்-றேன். அவர் முந்-தைய தினத்தை விட மிக அழ-காக இருந்-தார்.
நான் அவ-ரி-டம், என்-னால் சாப்-பிட முடி-ய-வில்லை, தூங்க முடி-ய-வில்லை, பைத்-தி-யம் பிடித்-தது போலி-ருக்கி-றது என்-றேன்.
அவர் சிரித்-த-படி, ஷீலா... இது ரொம்ப சிம்-பி-ளான விஷ-யம். நீ என்னை மிக-வும் நேசிக்கி-றாய். நானும் உன்னை ரொம்-ப-வும் நேசிக்கி-றேன் என்-றார்.

றீ ஆசிரமத்தில் ஆரம்-பத்-தில் இட-நெ-ருக்க-டி-யா-லும், கட்-டுப்-பா-டற்ற பழக்க- வ-ழக்கங்க-ளா-லும் அசுத்-த-மும் வியா-தி-களும் பர-வின. பாலு-ணர்வைக் கட்-டுப்ப-டுத்-து-வ-தற்கு எதி-ராக எப்-போ-தும் பக-வான் பேசி வந்-தார். எனவே ஆசி-ர-ம-வா-சி-கள் தங்-களின் பாலி-யல் இச்-சை-களை சர்வ சுதந்-தி-ர-மாக வெளிப்-ப-டுத்-தி-னர்.
அதன் விளை-வாக, ஆசி-ர-மத்-தில் பால்-வினை நோய்-கள் ஒரு பெரும் பிரச்-சி-னை-யா-கின. பாலி-யல் நோய்த் தொற்-று-க-ளைத் தடுப்-பது கடி-ன-மான விஷ-ய-மா-னது.
சில ஆசி-ர-ம-வா-சி-கள், ஒரு மாதத்-தில் மட்-டும் 90 வெவ்-வேறு வித-மான செக்ஸ் தொடர்-பு-களில் ஈடு-பட்-ட-னர். எப்-போ-தும் ஆசி-ர-மம் பர-ப-ரப்-பாக இருக்கும் வேளை-யில் அவர்க-ளுக்கு செக்ஸுக்கு எப்-படி நேர-மும், சக்தி-யும் கிடைக்கி-றது என்று எனக்கு வியப்-பாக இருந்-தது. அது குறித்து ஒரு-வ-ரி-டம் நான் கேட்-க-வும் செய்-தேன்.
அதற்கு அவர் சிரித்-தபடி, தான் ஒவ்-வொரு நாளும் மூன்று முறை செக்ஸ் உறவு வைத்-துக்-கொள்-வ-தாகக் கூறி-னார். காலைச் சிற்-றுண்-டிக்கு முன்பு ஒன்று, மதிய உண-வுக்குப் பின் ஒன்று, இரவு உண-வுக்குப் பின் ஒன்று, என்-றார்.
நான் அவ-ரி-டம், ஆக, ஒவ்-வொரு உண-வின்-போ-தும் நீங்-கள் ஓர் இனிப்பு சாப்-பி-டு-கி-றீர்கள்? என்று நகைச்-சு-வை-யாக சொன்-னேன்.
ஒட்-டு-மொத்த மோச-மான சுகா-தார நிலை கார-ண-மா-க-வும், அலர்ஜி, ஆஸ்-துமா,
முது-கு-வலி போன்-ற-வற்-றா-லும் பக-வா-னும் அப்-போது பாதிக்கப்-பட்-டார். அவ-ரது ஆரோக்கி-யத்தைக் காக்க நாங்-கள் மிக-வும் கஷ்-டப்-பட்-டோம். பக-வா-னுக்கு வாச-னைத் திர-வி-யங்கள், பெர்-பி-யூம்கள் அலர்ஜி என்-ப-தால், பக்தர்களை மோப்-பம் பிடிப்-ப-தற்கு ஆட்-கள் நிய-மிக்கப்-பட்-ட-னர். அவர்கள் மோப்-பம் பிடித்து, வாச-னைத் திர-வியங்க-ளைப் பூசிய பக்தர்களை பக-வானை நெருங்கா-மல் தடுத்-து-வி-டு-வார்கள்.
  • பக-வான் வியா-பார நுணுக்கங்க-ளும் அறிந்-த-வர். அவர் தான் வழங்-கும் விஷ-யங்கள், அவற்-றுக்கான மதிப்பு, அவற்றை சந்-தைப்-ப-டுத்-து-தல் எல்-லா-வற்-றை-யும் அறிந்-தி-ருந்-தார். ஆசி-ரம செல-வு-கள் அனைத்-தை-யும் சமா-ளிப்-ப-தற்கான வரு-வாய் தாரா-ள-மாக வர வேண்-டும் என்று அவர் நினைத்-தார். ஆரம்-ப-கட்-ட-மாக, அவ-ரது சொற்-பொ-ழி-வு-களுக்கு நுழை-வுக்கட்-ட-ணம் விதிக்கப்-பட்-டது. ஆசி-ர-மத்-தில் இருந்த தெர-பிஸ்ட்கள் அதைப் பின்-பற்-றி-னர். பல்-வேறு தெரபி- களு-டன், பபே முறை-யில் உணவு வழங்கப்-படும். அதற்குக் கட்-டணம். ஆசி-ரமத்-துக்கு வரு-வோர் தாங்-கள் விரும்-பும் தெர-பியை பணம் கட்-டிப் பெற-லாம். ஆசி-ரமத்-தின் வேறு பல சேவை-களுக்கும் கட்-ட-ணம் விதிக்கப்-பட, பணம் தண்-ணீ-ரைப் போல கொட்ட ஆரம்-பித்-தது.
பாலு-றவு வேட்-கை-தான் மனி-த-னின் கஷ்-டங்க-ளுக்கு எல்-லாம் கார-ணம், அவன் அதை முழு-மை-யாக அனு-ப-வித்து அதி-லி-ருந்து மீண்-டு-வர வேண்-டும் என்-பது பக-வா-னின் கருத்து.
எனவே, ஆசி-ர-மத்-தில் வழங்கப்-பட்ட அனைத்து தெர-பி-களி-லும் பாலி-யல் பிர-தான அம்-ச-மாக இருந்-தது. அடக்கி வைக்கப்-படும் பாலு-ணர்வு  பாலி-யல் வக்கி-ரத்-தில் இருந்து விடு-தலை பெற வேண்-டும் என்-பதே நோக்க-மாக இருந்-தது. எனவே எந்தக் கட்-டுப்-பா-டு-மின்றி செக்ஸ் ஏற்-கப்-பட்-டது.
செக்ஸைப் பொறுத்-தவரை ஆசி-ரமத்-தில் தடுக்கப்-பட்-டது எது-வும் இல்லை, இது-தான் ஒழுக்கம் என்று எது-வும் வரை-ய-றுக்கப்-ப-ட-வில்லை. நாங்-கள் அனை-வ-ரும் பொறாமை, தன்-னு-ரிமை உணர்வு இல்-லா-மல் இருக்க வேண்-டும் என்று பக-வான் விரும்-பி-னார். நாங்-கள் எங்-களின் செக்ஸ் விருப்-பங்களை அடுத்-தவரின் ஒப்-புதலோடு வெளிப்-படுத்-தலாம் என்று அவர் கூறி-னார். இந்த விஷ-யத்-தில் நீதி-நெறி உணர்வு, குற்ற உணர்-வைத் தாண்-டிச் செல்ல வேண்-டும் என்று பகவான் சொன்னார். இதன் மூலம் ஞானம் பெறப்-போ-கி-றோம் என்ற அதீத உற்-சா-கத்-தில் பல-ரும் குழு-வாக செக்ஸ் செயல்-பா-டு-களில் ஈடு-ப-டத் தொடங்-கி-னர். ஆனால் யாரும், எப்-போ-தும் எவ-ரை-யும் எதற்கா-க-வும் நிர்ப்-பந்-திக்க-வில்லை.
  • நாங்-கள் புனே-யில் இருந்-த-போது, பக-வா-னுக்கு மிக அந்-த-ரங்க-மாக விவேகா என்ற பெண் இருந்-தாள். அவள் தன்னை பக-வா-னின் மனைவி என்று கூறிக்-கொண்-டாள். பக-வா-னுக்கு நெருக்க-மாக இருந்த மற்ற பெண்-கள் மீது பொறாமை கொண்ட விவேகா, பக-வா-னி-டம் அது-கு-றித்-துச் சண்-டை-யிட்-டும் வந்-தாள்.
இந்-நி-லை-யில், பக-வா-னு-ட-னான உற-வில் அவள் கர்ப்-ப-மா-னாள். அத்-த-க-வலை வெளி-யிட்டு பக-வா-னின் பெயரை நாற-டிப்-பேன் என்று அவள் மிரட்-டினாள். நல்-லவே-ளை-யாக, பக-வா-னின் பக்தர்க-ளி,ல் ஒரு-வ-ரான மகப்-பேறு மருத்-து-வர் ஒரு-வ-ரின் உத-வி-யால் விவே-கா-வின் கரு கலைக்கப்-பட்-டது.
அதன்-பி-ற-கும் விவேகா உட-னான பக-வா-னின் பிரச்-சினை முற்றி, இவ-ளுக்கு உடனே இங்-கிலாந்-துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்-பிடு. இனி இவ ஒரு நொடி கூட இங்கே இருக்கக் கூடாது என்று என்-னி-டம் சப்-த-மிட்-டார் பக-வான். நானும் சரி என்-றேன். பின்-னர், அப்பெண்ணைக் கடை-சி-யாக ஒரு-முறை மன்-னித்து, தன்-னு-டன் இருக்க அனு-ம-திப்-ப-தாகக் கூறி-னார் பக-வான்.
அப்-போ-து-தான், பக-வா-னுக்கும் சாதா-ரண மனி-தர்க-ளுக்குரிய உணர்-வு-கள் உண்டு, ஞானம் பெற்ற அவ-ரா-லும் பெண் பிடி-யில் இருந்து மீள முடி-ய-வில்லை என்-பதை நான் உணர்ந்-தேன். றீ ஒரு-கட்-டத்-தில், எல்-லாம் சீராக நடை-பெ-றத் தொடங்-கின. குறிப்-பிட்ட கால இடை-வெ-ளி-களில் நூல்-கள் வெளி-யி-டப்-பட்-டன, விழாக்கள் நடத்-தப்-பட்-டன, ஐரோப்-பிய நாடு-களில் பக-வா-னின் மையங்கள் அரு-மை-யாக இயங்கிக் கொண்-டி-ருந்-தன. பக்தர்க-ளிடம் இருந்து காணிக்-கை-களைப் பெறு-வதற்-குப் -புதிய புதிய வழி-களும் கண்-டு-பி-டிக்கப்-பட்டுக் கொண்-டி-ருந்-தன. பக-வான் சொன்-ன-படி எல்-லாம் ஒழுங்காக, சீராக நடை- பெற்-றுக்-கொண்-டி-ருந்-தன.
பக-வான் இவற்-றால் உற்-சா-கமோ, மகிழ்ச்-சியோ அடை-ய- வில்லை. மாறாக அவ-ருக்கு போர-டித்-தது. அந்த அலுப்-பில் திடீ-ரென்று அவர் ஒரு-நாள் என்-னி-டம், ஒரே மாதத்-தில் 33 ரோல்ஸ் -_ ராய்ஸ் ஆடம்-பர கார்-களை வாங்-கும்-படி கூறி-னார். அப்-போது ஏற்-கெ-னவே ஆசி-ரமத்-தில் 90 புத்-தம்- பு-திய ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் இருந்-தன. மேலும் புதிய 33 ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் வாங்க வேண்-டும் என்-றால் பல-கோடி ரூபாய் தேவை. என்ன செய்-வது என்று புரி-யா-மல், அவ-ரி-டம் மெது-வாக விஷ-யத்-தைச் சொன்-னேன். மறு-நாள் அவர் என்-னிடம் ஒரு பட்-டியலைக் கொடுத்-தார். அதில், ஐம்-பது, அறு-பது பெயர்கள் இருந்-தன. எல்-லோ-ருமே பெரும் பணக்கா-ரர்கள். அவர்களை அழைக்கச் சொன்ன பக-வான், 21 பேர் ஞானம் பெற்-ற-தாக அறி-வித்-தார். அவர்கள் ஆசி-ர-மத்-தின் உள்-வட்-டத்-தில் இணைந்-த-னர். அவர்க-ளால் ரோல்ஸ் _ ராய்ஸ் கார்-கள் வாங்-கு-வ-தற்கான பணப் பிரச்-சி-னை-யும் தீர்ந்-தது.
-விடுதலை ஞா.ம.,9.2.13

வெள்ளி, 6 நவம்பர், 2015

மாரியம்மன் கோயிலில் சோரம் புரிந்த அர்ச்சகனின் அடாத செயல்


திருச்சிராப்பள்ளி பீமநகரிலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு அர்ச்சகரான ஒரு பட்டர் சென்ற 11.9.1929 புதன்கிழமையன்று இரவு சுமார் 9 மணிக்கு மாரியம்மன் தரிசனத்துக்கென வந் திருந்த ஒரு பெண்ணை பலாத்காரப்படுத்தி அம்மன் சந்நிதி யிலே ஒரு இருட்டு நிறைந்த இடத்தில் சோரம் புரிந்து கொண்டிருந்தான்.
அச்சமயம் கோயிலுக்கு அம்மன் தரிசனத்துக்கென வேறு சிலர் வரவும், இவர்களிருவரும் மடப்பள்ளிக்குள் ஓடி ஒளிந்தனர்.
இவர்கள் ஒளிவதைக் கண்டு சந்தேகமுற்று தரிசனத்துக்கு வந்திருந்தவர்கள் இவர்களைப் பிடித்து விசாரிக்கையில் தனது அறியாமையினால் செய்த குற்றத் திற்காக மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டதின் பேரில் அப் பட்டனிடமிருந்த கோயில் சாவி சாமான்கள் முதலான வைகளைக் பிடுங்கிக்கொண்டு அவனைத் துரத்திவிட்டனர்.
இந்தப் பார்ப்பனன் இதற்கு முன்னும் பல அடாத செயகைகளை செய்து வந்ததைக் குறித்து பல பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் தர்மகர்த்தாவிடம் முறையிட்டுக் கொண்டும் அவர் இதைக் கவனிக்காமல் அசட்டையாயிருந்து விட்டாராம்.
(குடிஅரசு, 1929)
குறிப்பு: காஞ்சிபுரம் தேவநாதனுடைய அண் ணன்கள் அத்திம்பேர்கள் அந்தக் காலத்திலிருந்தே கோயில்களில் இந்தத் திருத் தொண்டை புரிவதற் கென்றே இருந்தார்கள் போலும், கடவுளின் பெய ராலும், பக்தியின் பயத்தாலும் இப்படி எத்தனை பெண்கள் இவன் போன்றவர்களால் சீரழிக்கப்
பட்டனரோ!


கடவுள் கருணை உள்ளவரா?
ஆசிரியர்: கடவுள் இல்லாமல் உயிரைப் படைக்க முடியுமா?
மாணவன்: முடியும் சார்!
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: இன்னைக்கு எங்க மாட்டை ஆஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டுப் போயிருந் தேன்.
ஆசிரியர்: மாட்டுக்கு என்ன?
மாணவன்: வாலிலே புண், அதிலிருந்து ஒரு நூறு புழு இருக்கும் சார்!
ஆசிரியர்: அந்தப் புழுவையும் கடவுள்தான் படைத்தார்.
மாணவன்: அப்படின்னா, கடவுள் கருணை உள்ளவருன்னு சொன்னீங்களே, அது அசல் பொய்யா சார்?
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: பாவம், வாயில்லா ஜீவனாகிய ஒரு மாட்டு புண்ணுல போய் புழுவைப் படைப்பவர் கருணை உள்ளவரா சார்?
ஆசிரியர்: ?  ?  ?
-விடுதலை,30.10.15

ஞாயிறு, 1 நவம்பர், 2015

மத போதகரின் மன்மத லீலை



கன்னியாகுமரி, அக்.20 கன்னியாகுமரி அருகே விடுதியில் இளம் பெண்களுடன் லீலையில் ஈடு பட்ட கிறிஸ்தவ மத போதகர் கைது.  இது தான் மத போதகரின் இலட்சணமா? கன்னியாகுமரி காவல் நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு விடுதியில் மயிலாடி காமராஜர் புதூரை சார்ந்த  கிறிஸ்தவ மத போதகர்  பெண்களுடன் லீலையில் ஈடுபட்டு கொண் டிருந்தார்.  உடனடியாக அவரை காவல் துறை யினர் கைது செய்தனர்.இது தான் கிறிஸ்தவ மத போதகரின் இலட்சணமா? மதம் என்ற பெயரில் பெண்களை மயக்கி இது போன்ற லீலையில் ஈடுபடலாமா?
இந்து மதத்தில் நித்தியானந்தா போன்று கிறிஸ் தவ மதத்திலும் இவரைப் போன்ற பாதிரியார் பலர் உள்ளனர்.
-விடுதலை,20.10.15

  போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோனின் காமலீலை: கையும் களவுமாக லாட்ஜில் பெண்களுடன் பொலீஸாரிடம் பிடிபட்டது!


போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோனின் காமலீலை: கையும் களவுமாக லாட்ஜில் பெண்களுடன் பொலீஸாரிடம் பிடிபட்டது!
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - பாதிரி மற்றும் பெண்கள் பிடிபட்டனர்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள் பிடிபட்டனர்
கன்னியாகுமரியில் சமீபகாலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. குறிப்பாக கிருத்துவ மிஷனரிகள் அவற்றில் அதிகமாக ஈடுபட்டுள்ளதும் செய்திகள் மூலம் வெளியாகியுள்ளன. பெண்கள், வயது வந்த சிறுமிகள்-சிறுவர்கள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். “பிடோபைல்” – சிறார் கற்பழிப்பு, பாலியன் வன்புணர்ச்சி என்று விசயங்கள் வந்தாலும், அவற்றில் கிருத்துவர்களின் பங்கு இருப்பதனால் விசயங்கள் மறைக்கப்படுகின்றன. கேரளாவுக்கு அறுகில் இருப்பதனால், அங்கு குற்றம் செய்தவர்கள் இங்கு வந்து தங்குவதும், இங்குள்ளவர்கள் அங்கு சென்று மறைவாக வாழ்வதும் நடந்து வருகின்றது. போலீஸ் விசாரணைகளில் அத்தகைய நிலை வெளிவருகிறது. ஆனால், இவற்றினால் பாதிக்கப்படுவது பெண்கள் தாம். பெண்களின் மீதான வன்முறை தடுக்கப்பட வேண்டும் என்று சில நிறிவனங்கள் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தினாலும்[1], பிரச்சினையைத் தீர்ப்பதாக இல்லை. டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும், சிறுபான்மையினரின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்றெல்லாம் பேசினாலும்[2], இத்தகைய குற்றங்களைப் பற்றி மூச்சு விடுவதில்லை. விபச்சாரம் நடப்பதும், கைது நடவடிக்கையும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன[3].
லீபுரம் சர்ச், கன்னியாகுமரி
லீபுரம் சர்ச், கன்னியாகுமரி
லீபுரம் சர்ச், கன்னியாகுமரி
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது
செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி
செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி
கன்னியாகுமரி விபச்சாரத்தில் உள்ளூர்வாசிகளின் பங்கு: சுற்றுலா ஸ்தலம் என்றதால் விபச்சாரம் நடக்கிறது என்றாலும், உள்ளூர்வாசிகளின் பங்கும் வெளிப்படத்தான் செய்கிறது[4]. முறைகள் மாறினாலும்[5], விசயம் மாறாமல் தான் இருந்து வந்துள்ளன[6]. இங்கு சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்று பிரித்துப் பார்க்கவும் முடியாது. ஏனெனில், இங்கு கிருத்துவர்கள் தாம் அதிகமாக உள்ளனர். இதில் படித்தர்கள்-படிக்காதவர்கள்[7] என்ற வேறுபாடும் இல்லாமல் கலாச்சாரச் சீரழிவு நடந்து வருகின்றது[8]. இங்கு கிருத்துவர்களையோ, கிருத்துவமதத்தையோ குறைகூறுவதாக எண்ன வேண்டாம், ஆனால், அவர்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுவதாலும், அவர்கள் மதரீதியில் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்று பறைச் சாற்றிக் கொள்வதினாலும், அவர்களில் பலர் ஏன் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பது தான் கேள்வி. இந்நிலையில் தான் லீபுரம் போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் காமலீலை வருகிறது.
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - ஒரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – ஒரு பெண்
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - இன்னொரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – இன்னொரு பெண்
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - பெண்கள் வெளியே வருதல்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – பெண்கள் வெளியே வருதல்.
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - பாதிரி மற்றும் பெண்கள்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – பாதிரி மற்றும் பெண்கள்.
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.
செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி லாட்ஜில் உல்லாசம்
செலின் ஜெப சுவீஸ் ஆரோன் கைது- கன்னியாகுமரி லாட்ஜில் உல்லாசம்
ஒழுக்கம் இல்லாத மதபோதகரும், அவரது கூடா ஒழுக்கமும், கணவன்வி உறவு பாதிப்பும்: கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதகரிடம் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மனு கொடுத்தார்[9]. கன்னியாகுமரியில் விபசார வழக்கில் சிக்கியதால் போதகரின் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் தற்காலிக போதகர் லீபுரம் சபைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். தற்காலிகமாக எனும்போதே, சர்ச் இப்பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தேரிகிறது. சிறிது காலத்தில், இவ்விசயம் மறக்கப்பட்டுவிடும், மறுபடியும் அதே ஆள் தனது வேலைக்கு வந்துவிடுவார் அல்லது வேறொரு இடத்தில் அதை செய்ய ஆரம்பிப்பார். போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், என்ற இவருக்கும், ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த அந்த பெண்ணின் கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்[10]. இதுவே வேடிக்கையாக இருக்கிறது. மனைவிக்கும் மதபோதகருக்கும் தொடர்பு என்றால், அம்மதபோதகரின் ஒழுக்கம் சரியில்லை, அம்மதத்திலும் ஒழுக்கம் (இந்த கள்ள உறவைப் பொறுத்தவரையில்) இல்லை என்றாகிறது. கிருத்துவமதத்தில், அடுத்தவன் மனைவியை பார், அவளுடன் கள்ள உறவு வைத்துக் கொள் என்று போதிப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் தான் சந்தேகங்கள் எழுகின்றன. இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போதகர் செலினையும், அந்த பெண்ணையும் எச்சரித்து அனுப்பினர். இருவரும் ஒன்றாக சந்திக்க கூடாது என எழுதியும் வாங்கினர்[11]. அதன் பின்னரும் போதகர் தொடர்ந்து தனது கள்ளக்காதலியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது[12].
கன்னியாகுமரி - எழுப்புதல் கூட்டம் - கைது - மூன்றாவது பெண்
கன்னியாகுமரி – எழுப்புதல் கூட்டம் – கைது – மூன்றாவது பெண்
போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் தனியாக மூன்று பெண்களுடன் என்ன செய்து கொண்டிருந்தார்?: கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகக்கூறி போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன், லாட்ஜ் உரிமையாளர் ஜேம்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். தொடர்ந்து குற்றம் செய்தாலும், ஜாமீனில் விடப்பாட்டார் என்றால், அதற்காக முறைப்படி, வக்கில் வந்துள்ளார், ஆவன செய்துள்ளாற் என்று தெரிகிறது. அப்படியென்றால், ஆரோன் எல்லாவற்றிற்கும் தயாகத்தான் இருக்கிறான் என்று தெரிகிறது. வெளியாகியுள்ள வீடியோவைப் பார்க்கும் போது, மேலும் விசயங்கள் வெளிப்படுகின்றன. ஆரோன் போலிஸாருக்கு பயந்ததாகத் தெரியவில்லை. உள்ளேயிருந்து மூன்று பெண்கள் வெளிவருகின்றனர். அவர்களில் ஒரு பெண் தான், கண்ணீர் விட்டு அழுகிறார். மற்ற இருவர்களும் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். போலீஸாரின் கேள்விகளுக்கும் தைரியமாக பதில் சொல்கின்றனர். ஒருவருடன் மூன்று பெண்கள் ஏன் ஒரே அறையில் இருக்க வேண்டும், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்விகள் எழலாம். ஆனால், கையும்-களவுவுனமாக மாட்டிக் கொண்டதால், உண்மை வெளிவந்தே ஆகவேண்டும்.
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.-படம்
கன்னியாகுமரியில் லாட்ஜில் உல்லாசம்-மதபோதகர் உள்பட 2 பேர் கைது.-படம்
பெண்களில் ஒருவரின் கணவர் நாகர்கோவில் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த மனு[13]: அவர்களுடன் இருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டனர். அந்த பெண்களில் ஒருவரின் கணவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு 2ஆண் குழந்தைகளும்ஒரு பெண் குழந்தையும் உண்டுநான்சலவைத் தொழில் செய்து வருகிறேன்எங்கள் ஊரில் செலின்ஜெபசுவீஸ் ஆரோன் என்பவர் மதபோதகராக ஈத்தாமொழி தர்மபுரம்பகுதியில் பணியாற்றினார்அவர் எனது மனைவியிடம் ஆசைவார்த்தைகளைச் சொல்லி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார்இதுதொடர்பாக கடந்த மாதம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டிடம் எனது மனைவி மற்றும் போதகர் மீது புகார்கொடுத்தேன்அதனை கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையபோலீசார் விசாரித்தனர்அப்போது இருவருக்கும் கள்ளத்தனமானதொடர்பு கிடையாது என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றனர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில்கன்னியாகுமரி பகுதியில் ஜேம்ஸ் என்பவரின் லாட்ஜில்அரைகுறை ஆடையுடன் இருந்த போதகரை போலீசார் கைதுசெய்தனர்அவருடன் இருந்த எனது மனைவியையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்பின்னர் அவர்களைகோர்ட்டுக்கு கொண்டு செல்லாமல் நேற்று அதிகாலை ஜாமீனில்விட்டுவிட்டனர்[14]எனவே அவர்கள் 2 பேர் மீது நடவடிக்கைஎடுக்கவும்அவர்கள் மீது மேல் விசாரணை செய்ய கன்னியாகுமரிபோலீசாருக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. கர்த்தர் இவர்களுக்கு சாந்தத்தையும், அமைதியையும் கொடுப்பாராக!
© வேதபிரகாஷ்
18-10-2015


வியாழன், 3 செப்டம்பர், 2015

பாலியல் புகாரில் மதபோதகர் கைது


கோத்தகிரி, செப்.1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மத போதகர், கைது செய்யப்பட்டார்.
திருச்சி, லால்குடி பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ், 40, சில ஆண்டு களுக்கு முன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் தங்கி, மதபோதனை செய்து வந்தார்.இரு ஆண்டுகளுக்கு முன், கோத்தகிரி வெஸ்ட்புரூக் குண்டாடா பிரிவு பகுதியில் வசிப்பவரின், 15 வயது மகளை தத்தெடுத்து, மேட்டுப்பாளை யம் அழைத்து சென்று, அரசு மேல் நிலைப் பள்ளியில் படிக்க வைத் துள்ளார்.
மாணவியின் தந்தை, மகளை பார்க்க சென்ற போது, 'இரு ஆண்டு களில், பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்ததும்; விஷயம் வெளியில் தெரிந்தால், கொன்று விடுவதாக மிரட்டியதும்' தெரியவந்தது. மாண வியின் தந்தை, கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலை யில், காவல் துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஊட்டி அரசு மருத்துவமனையில், மாணவிக்கு நடத்திய பரிசோதனையில், மத போத கர், பாலியல் தொந்தரவு கொடுத் தது உறுதியானது. இதையடுத்து, காவல் துறையினர் அருள்தாசை கைது செய்தனர்.
-விடுதலை,1.9.15