சனி, 10 ஜனவரி, 2026

சபரிமலை அய்யப்பன் கோயிலில் மோசடிகள் தொடர்கிறது! கோயில் அர்ச்சகர் கைது!

திருவனந்தபுரம், ஜன.10 சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள சபரி மலை அய்யப்பன் கோயில் கருவறையின் கதவுகள் மற்றும் பீடத்துடன்கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. அதன் பிறகு 4.5 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வரு கிறது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரி கண்டரரு ராஜீ வரு நேற்று (9.1.2026) கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கூறும் போது, “முன்னாள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரியை, தேவசம் போர்டிடம் தந்திரி கண்டரரு ராஜீவரு அறிமுகம் செய்திருக்கிறார். அவரது அறிவுரைப்படியே துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னிகிருஷ்ணனிடம் ஒப்ப டைக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக ராஜீ வருவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தங்கம் திருட்டு வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை கைது செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 10.1.26

செவ்வாய், 3 ஜூன், 2025

சிறுமியைச் சீரழித்த ராமன் கோவில் பூசாரி கைது!


விடுதலை நாளேடு



பெல்காம், மே 26 கருநாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமன் கோவில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.

இவர், 17 வயது சிறுமி ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன்,லிப்ட் தருகிறேன் என கூறி அவரை காரில் அழைத்துக்கொண்டு ராய்ச்சூரில் விடுதிக்குச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடர்ந்து, பாகல்கோட்டில் உள்ள விடுதிக்குக் கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.

பின்பு பெலகாவியில் பேருந்து நிலையம் ஒன்றில் அந்தச் சிறுமியை இறக்கிவிட்டார்.

வீட்டுக்குச் சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து பூசாரிக்கு எதிராக பாகல்கோட்டில் உள்ள நவநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ உள்பட  பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

பிடித்தது முற்றிப்போன ‘‘மூடநம்பிக்கைப் பேயே!’’



 மன நோயால் பாதிக்கப்பட்ட மாணவியை பேய் பிடித்தவர் என்று கூறி தலையில்

77 குண்டூசிகளைத் திணித்த சாமியார்: அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் அதிர்ச்சி!

* கருஞ்சட்டை *

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ரேஷ்மா (வயது 19). இவர் தலை யில் கடுமையான வலி என்று கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார். முதலில் அவருக்கு தலைவலி தொடர்பான மாத்திரைகளை தந்து அனுப்பி விட்டனர்.

இருப்பினும் அவருக்கு வலி நிற்காததால் அவரது தலையை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது, தலை முழுவதும் சிறிய சிறிய குண்டூசிகள் இருந்தன.


இதனை அடுத்து அவரை பாலங்கீர் நகர அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அனைத்து ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றினர்.
இது தொடர்பாக விசாரித்தபோது

சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு மனநிலை பாதித்தது, அவருக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறி அங்குள்ள சாமியார் ஒருவரிடம் அழைத்துச் சென்றனர். அவரோ மந்திரிக்கப்பட்ட ஊசியை தலையில் குத்தினால் பேய் ஓடிவிடும் என்று கூறி முதலில் ஒரு ஊசியைத் தலையில் குத்தி உள்ளார்.

பின்னர் தொடர்ந்து அவரிடமே ரேஷ்மாவை அழைத்துச்செல்ல அவரே தொடர்ந்து 77 ஊசிகள் வரை தலையில் குத்தி வெளியில் தெரியாமல் திணித்துள்ளார். நான்கு ஆண்டுகளாக கொடுமையான வேதனைகளை அனுபவித்து வந்த ரேஷ்மா மருத்துவ விஞ்ஞானத்தால் தற்போது நலமாக உள்ளார்.

ஊசியைக்குத்தியதால் தலையில் உள்ள திசுக்கள் சேதமடைந்துள்ளன. இருப்பினும் மண்டை ஓட்டிற்குப் பாதிப்பு இல்லை. இன்னும் சில காலம் மருத்துவ சிகிச்சையில் இருக்க மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மருத்துவமனை அளித்த புகாரின் அடிப்படையில் தலையில் ஊசியைக் குத்திய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 24 ஜூலை, 2024

இவர்கள்தான் சாமியார்கள்! 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை

Published June 28, 2024,விடுதலை நாளேடு

 ராமாபுரம், ஜூன் 28- சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தேபாது 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் சைதுசெய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த பள்ளிக் கரணை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 17 மற்றும் 14 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இருவரும் தந்தையுடன் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அப்போது 2 பேரும் வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், கோத் தாரி நகரில் உள்ள அவர்களது சித்தப்பா வீட்டில் தங்கி வந்தனர்.

அவரது சித்தப்பா வீட்டில் அடிக்கடி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சாமியாரான அரீஷ் (வயது 38), விஜி என்ற ஜெயக்குமார் (30), சூளைமேடு பகுதியை சேர்ந்த சதீஷ் (41) ஆகிய 3 பேரும் சேர்ந்து செய்து வந்தனர்.
அப்போது இவர்கள் 3 பேரும் சேர்ந்து, பூஜை செய்ய வேண்டும் என கூறி 14 வயது சிறுவனை தனியாக அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்தனர். மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் சிறுவனை மிரட்டினர்.

இந்தநிலையில் கடந்த சில நாள்sகளுக்கு முன்பு சிறுவர்கள் இருவரும் தாயாரை பார்க்க பள்ளிக்கரணைக்கு சென்றனர். அப்போது 14 வயது மகனின் உடலில் இருந்த காயங்களை பார்த்த அவரது தாயார், அதுபற்றி கேட்டபோதுதான், சிறுவன் சித்தப்பா வீட்டில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கூறினார்.
அதிர்ச்சி அடைந்த சிறுவ னின் தாயார், இதுபற்றி வளசர வாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சாமியார் அரீஷ் மற்றும் விஜி, சதீஷ் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சனி, 1 ஜூன், 2024

பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது


கோவையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சென்னையில் தங்கி பிரபல சேனலில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், சமீபத்தில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த 2021 ஆம் ஆண்டு மண்ண டியில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது கோவில் அர்ச்சக ரான கார்த்திக் முனுசாமி என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து எனது வீட்டுக்கு வந்த அவர், ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலில் வன்கொடுமை செய்தார். நான் மயக்கம் தெளிந்து பார்தத போது, எனது காலில் விழுந்த அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வந்த காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது அவரின் சித்தப்பா காளிதாஸ் என்னை மிரட்டினார்.

இதற்கிடையே நான் கர்ப்பமடைந்த காலத்தில் என்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார் அந்த தொகுப்பாளினி.

இதனையடுத்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறை யினர் காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, அவரது சித்தப்பா காளிதாஸ் உட்பட அய்ந்து பேர் மீது கருக்கலைத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமி திடீரென தலைமறைவானார். இதனால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் முனுசாமி கொடைக்கானலில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கொடைக்கானல் சென்ற காவலர் அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 14 மார்ச், 2024

மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி 75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம்


மூடநம்பிக்கையின் உச்சம்

விடுதலை நாளேடு

 மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி

75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம்
கிராம மக்கள் மீது காவல்துறை வழக்கு

மும்பை,மார்ச் 8- பில்லி, சூனியம் வைப்ப தாக சந்தேகப்பட்டு ஒரு வரை கோவில் திருவிழாவில் ஒரு கும்பல் கட்டாயப் படுத்தி நெருப்பில் தள்ளி விட்ட கொடூரம் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலம் தானே மாவட் டத்தில் உள்ள கேர்வலே கிராமத்தில் லட்சுமண் என்ற 75 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் மாந்திரீக வேலையில் ஈடு பட்டு பில்லி, சூனியம் வைப்பதாக கிராமத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகப் பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இதில் தீ மிதிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி!

அப்போது திடீரென கிராமத்தைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் லட்சுமண் வீட்டுக்கு வந்த னர். அவர்கள் தீ மிதி நடக்கும் பகுதிக்கு அவரை அடித்து இழுத்துச் சென்றனர். மாந்திரீக வேலையில் ஈடுபடும் உனக்கு இதுதான் தண்டனை எனக்கூறி, அந்த முதியவரை மிரட்டி, நெருப்பில் இறங்கி நடன மாட வேண்டும் என்று கட் டாயப்படுத்தினர். இதற்கு அவர் தயக் கம் காட்டவே, அந்த கும்பல் முதியவரின் கையை பிடித்து உள்ளே இறக்கி விட்டனர். மேலும் அவர்கள் முதிய வரை வெளியே வர விடாமல் உள்ளே நிற்க வைத்து சித்திரவதை செய்தனர். நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் காட் சிகளை கிராம மக்களும் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
நெருப்பின் வெப்பம் தாங்க முடி யாமல் முதியவர் நெருப்புக் குழியில் அங்கும், இங்கும் ஓடினார். சிறிது நேரத் துக்கு பின்னரே கும்பல், முதியவரை நெருப்பில் இருந்து வெளியே வர அனுமதித்தனர்.

இதற்கிடையே அந்த கும்பலின் கொடூர செயலால் முதியவரின் கால் உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற் பட்டது. இந்த நிகழ்வு குறித்து முதியவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மூடநம்பிக்கை ஒழிப் புச் சட்டம், காயம் ஏற்படுத்துதல் உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கும் பலைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

முதியவரை கிராமத்தினர் கட் டாயப் படுத்தி நெருப்பில் இறங்க வைத்த காட்சிப் பதிவுகள் தற்போது சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சனி, 9 மார்ச், 2024

பக்தி படுத்தும் பாடு சிறுமி பாலியல் வன்கொடுமை:மடாதிபதி கைது

 


விடுதலை நாளேடு

பெங்களூரு மார்ச் 9 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மடாதிபதியை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளரும் காவல்துறையினரிடம் சிக்கினார்.

கருநாடகத்தின் துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில் ஹங்க ரனஹள்னி வித்யாசவுடேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள இந்த கோவிலுக்குச் சொந்தமான மடத் தின் மடாதிபதியாக பாலமஞ்சுநாதா சுவாமி என்பவர் இருக்கிறார். அவருக்கு உடலில் தோல் நோய் ஏற்பட்டது.

இதுபற்றி அவர் தனது மேனாள் உதவியாளர் அபிஷேக் என்பவரிடம் கூறியுள்ளார். அவர், டாக்டர் என கூறி ஒரு இளம்பெண்ணை மடாதிபதிக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஆனால், அந்த இளம்பெண்ணிடம் நேரடியாக தனது உடலில் உள்ள பிரச் சினைகளைக் காண்பிக்க மறுத்த மடாதி பதி, அந்த இளம் பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தன்னுடைய உடலில் உள்ள தோல் நோய் தொடர்பான ஒளிப் படங்களை அனுப்பினார். பின்னர் காட்சிப் பதிவு அழைப்பு மூலம் பேசி உடல் பிரச்சினைகளை காண்பித்தார்.
அதை அந்த இளம்பெண், மடாதி பதியின் மேனாள் உதவியாளர் அபி ஷேக் உள்ளிட்டோர் சேர்ந்து கைப்பேசி யில் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அதை வைத்து மடாதிபதியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
இதுபற்றி மடாதிபதி தனது தற் போதைய உதவியாளர் அபிலாஷ் என்பவர் மூலம், சைபர் கிரைம் காவல் துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் அபிஷேக், பெங்க ளூருவைச் சேர்ந்த அந்த இளம்பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய் தனர். இந்த நிகழ்வு கடந்த மாதம் நடந்தது.

இந்த நிலையில், அபி ஷேக்கை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். அதில் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, தனது மடத்தில் 18 வயது நிரம்பாத சிறுமி யைத் தொடர்ந்து பாலியல் வன் கொடுமை செய்து வருவதாகக் கூறி னார்.
அதையடுத்து கடந்த 7 ஆம் தேதி இரவு காவல்துறையினர் மடத்தில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவ ணங்களைக் கைப்பற்றினர். மேலும் மடாதிபதி பால மஞ்சுநாதாசுவாமி, சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த தும் தெரியவந்தது. அதையடுத்து காவல் துறையினர் பால மஞ்சுநாதா சுவாமி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் அபிலாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் மீது ஹூலியூர் துர்கா காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வியாழன், 25 ஜனவரி, 2024

பெண் சாமியார் என்று வேடங்கட்டி பணத்தைக் குவித்தவர்களுக்கிடையே மோதல்!


செவ்வாய், 28 நவம்பர், 2023

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

சாமியார்கள்... ஜாக்கிரதை!

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

கோவை, ஏப். 19- கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் ஒன்றை கொடுத் தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திரும ணத்துக்கு பின் நானும், எனது கணவரும் அய்தராபாத்தில் வசித்து வந்தோம். திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நாங்கள் கோவில், கோவிலாக சென்று வந்தோம். அப்போது மத்தியப் பிரதேசத்தில் ஆசிரமம் நடத்தி வரும் ஒரு சாமியார் பற்றி எனது கணவர் அறிந்தார். அவரை சந்தித்து எங்க ளுக்கு குழந்தை இல்லாத விவ ரத்தை தெரிவித்துள்ளார். அந்த சாமியார் சொன்னபடி எனது கணவர் வீட்டுக்கு வந்து இரவு நேரங்களில் பூஜைகளை நடத் தினார்.

ஆக்ரோஷமாக இருந்த அந்த பூஜைகளை பார்த்து நான் அச்சம் கொண்டேன். சாமியார் இப்படித் தான் பூஜைகளை செய்யச் சொன் னார் என்று கூறி எனது கணவர் தெரிவித்து என்னை சமாளித்தார். இந்தநிலையில் சாமியார் பெங் களூர் வந்திருந்தார்.

அவரை பார்க்க எனது கணவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கு தனி அறைக்கு வரச்சொன்ன சாமியார், அவருடைய ஆசைக்கு என்னை இணங்குமாறு கூறினார். அப்போது தான் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என தெரிவித்தார். நான் மறுப்பு தெரிவித்து வெளியே வந்து விட்டேன்.

இதுபற்றி கணவரிடம் தெரிவித்தேன். அவரோ எந்தவித கோபமும் கொள்ளாமல் சாமியார் சொல்படி நடந்து கொள் என தெரிவித்தார். எனது கணவரின் தோழி ஒருவரும் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு சாமியார் சொல்வதை கேட்கும்படி கூறினார். ஆனால் யார் சொல்லை யும் நான் கேட்கவில்லை.

அதன்பிறகு நான் எனது பெற் றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். சில மாதங்கள் கழித்து அய்தரா பாத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றேன். ஆனால் கணவர் என்னை வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டார். சாமி யார் உன்னுடன் வாழக் கூடாது என கூறி இருப்பதாக தெரிவித்து என்னுடன் பேச மறுத்தார்.

அந்த சமயம் சாமியார் என்னை தொடர்பு கொண்டு எனது ஆசைக்கு இணங்கினால் தான் உன் கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்வேன் என்று மிரட் டினார். ஆசைக்கு இணங்காததால் அந்த சாமியார் எனது வாழ்க் கையே அழித்து விட்டார்.

எனவே அந்த சாமியார், எனது கணவர், கணவரின் தோழி ஆகி யோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் கிழக்கு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விவரம் தெரியவந்தது.

மேலும் புகார் மனுவில் அந்த பெண் கூறியுள்ள விவரங்கள் உண்மை தானா என்பது பற்றி விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை யினர் தெரிவித்தனர்.

குழந்தைப் பேறு வேண்டி வந்தவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : சாமியார் கைது

சாமியார்கள்! ஜாக்கிரதை

குழந்தைப் பேறு வேண்டி வந்தவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : சாமியார் கைது

சேலம், நவ. 23 - குழந்தை பேறுக்காக பரிகாரம் தேடி வந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் கோவில் பூசாரி. அவரை கைது செய்த காவல்துறை, அவரது கூட்டாளியை யும் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சேடப்பட்டி பகு தியை சேர்ந்த 38 வயதாகும் பசவராஜ் என்பவருடைய மனைவி செல்வி. இவருக்கு 28 வயது ஆகிறது. பசவராஜ் பெங்களூருவில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். பசவராஜ் மற்றும் செல்வி இணையருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. இதுவரை இவர்க ளுக்கு குழந்தைகள் இல்லை.

குழந்தை பேறுக்காக கடந்த ஓர் ஆண்டாக செல்வி பல்வேறு இடங் களில் மருத்துவம் மற்றும் பரிகாரம் செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த 15ஆம் தேதி காலை செல்வி திடீரென காணாமல் போனார். மனைவியை காணவில்லை என தாரமங்கலம் காவல் துறையில் பசவராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சேலம் தாரமங்கலம் காவல்துறையினர் செல்வியை தேடி வந்தனர். இந்தநிலையில், திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம் மன் கோவில் அருகில் காட்டுப்பகுதியில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது தான், பிணமாக கிடந்தது பசவ ராஜ் மனைவி செல்வி என்பது தெரிய வந்தது.. விசாரணையில், அந்த பகு தியை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசியது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர் பூசாரி மற்றும் அவரது கூட்டாளி ஆகியோரை கைது செய்து கொலைக்கான கார ணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியார் கைது

சாமியார்கள் ஜாக்கிரதை!

ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  இவர் ஏற்கெனவே பெற்றோருடன் வந்த ஒரு சிறுமியை பெற்றோர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள நிலையில் தற்போது 2ஆவது முறையாக வசமாக சிக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வென்கோஜியில் ஞானானந்த ஆசிரமம் உள்ளது.  ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரபலமான இந்த ஆசிரமத்தின் தலைவராக சாமியார் பூர்ணானந்த சரஸ்வதி உள்ளார். 

பெற்றோரை இழந்த பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் ஏராளமானவர்கள் இந்த ஆசிரமத்தில் இருந்து வருகின்றனர். இங்கு 15 வயது சிறுமி ஒருவரும் தங்கி இருந்தார். இந்த குழந்தைகளின் பெயரைச்சொல்லி வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் இவரது மடத்திற்கு பலர் பணம் அனுப்பிவருகின்றனர். 

 வேத விற்பன்னர் மற்றும் அனைத்து உலக ஆசைகளில் இருந்தும் விடுபட்டு பூர்ணாகதி அடைந்தவர் என்ற பட்டத் தையும் சாமியார் அமைப்பு இவருக்குக் கொடுத்துள்ளது. இதனை அடுத்து இவர் பூர்ணானந்த சரஸ்வதி என்று அழைக்கப்பட்டார்

 இவர் மீது ஏற்கெனவே ஆசிரமத்தில் உள்ள சிறுமிகளுக்குப் பாலியல் ரீதியில் தொல்லை தருவதாகக் கூறி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. அந்தத் தொலைக்காட்சி செய்தியாளர் மிரட்டப்பட்டார். அதன் பிறகு அந்த பாலியல் வன்கொடுமை செய்தி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்திக்க  பெற்றோருடன் வந்த சிறுமி மீது ஆசைப்பட்டு பெற்றோருக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். 

 ஆனால் அவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாக அந்தக் கொடுமை பாலியல் தொல்லை என்று சாதாரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார்.  அன்றே அதிகாரவர்க்கம் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இந்நிலையில் தான் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி, தனது ஆசிரமத்தில் இருக்கும் மேலும் பல சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 

 அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் அவரது பாலியல் வக்கிரத்தின் கொடுமைகள் தாங்காமல் எதிர்ப்பு தெரிவித்தார்.  அதற்கு அந்தச் சாமியார் "நான் ஏற்கெனவே சிறைக்குச் சென்று வந்துள்ளேன். இனிமேல் என் மீது யார் புகார் கொடுத்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்

ஆகவே இதை வெளியில் சொன்னால் நீயும், இதர பிள்ளைகளும் பல கொடுமைகளை சந்திக்க நேரிடும்" என மிரட்டல் விடுத்தார்.

இதனால் அந்தச் சிறுமி சம்பவம் குறித்து வெளியில் கூற முடியாமல் மனம் நொந்து போனார். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மடாதிபதி பூர்ணானந்தா சரஸ்வதி, சிறுமியையும், ஆசிரமத்தில் உள்ள வேறு சில சிறுமிகளையும் தொடர்ந்து வலுக்கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சிறுமி யாருக்கும் தெரியாமல் ஆசிரமத்தை விட்டு வெளியேறி ரயில் மூலம் விஜயவாடா சென்றார். ரயில் நிலையத்தில் ஆதரவற்ற ஒரு சிறுமி ஒருவர் அழுது கொண்டு இருப்பதைக் கண்ட ரயில்வே காவல்துறையினர் அவரை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதபடி கூறியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து ஆசிரமம் இருக்கும் திஷா என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதியை உடனடியாக  கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

நாடு எந்தத் திசையில் போய்க் கொண்டு இருக் கிறது? சாமியார்கள் என்ற போர்வையில் காமவெறிக் கசடர்கள் கிளம்பி விட்டனர். நாட்டில் நடப்பது மதவாத ஆட்சியாயிற்றே!

சாமியார்கள் எத்தகைய மோசடிப் பேர் வழிகள் என்பதற்கு நித்தியானந்தா, ராம்தேவ் போன்றவர்களே போதுமானவர்கள்.

சாமியார்கள் ஜாக்கிரதை!

சாமியார்கள் எத்தகைய மோசடிப் பேர் வழிகள் என்பதற்கு நித்தியானந்தா, ராம்தேவ் போன்றவர்களே போதுமானவர்கள்.

நித்தியானந்தா தானே நிறுவியதாகக் கூறிக் கொள்ளும் கைலாசா நாடு, அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்தியாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி தப்பி ஓடி, தலைமறைவான நித்தியானந்தா, உலகின் முன்மாதிரி நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்காவிலேயே 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து சாதித்தது எப்படி என்ற கேள்வி அந்நாட்டையே உலுக்கியது.

தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் சாமியார் நித்தியானந்தா மீதான சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. பிரபல நடிகையுடன் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதன் பிறகு பெங்களூருவை அடுத்த பிடதியில் இருந்து முழு நேரமாக இயங்கத் தொடங்கிய நித்தியானந்தா, மதுரை ஆதினத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள், பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டார். இதனால், எழுந்த நெருக்கடி காரணமாகத் தலைமறைவான அவர், 2019ஆம் ஆண்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார். அதுமுதல் அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரிய வரவில்லை.

தலைமறைவாக இருந்த நித்தியானந்தா 2019ஆம் ஆண்டின் இறுதியில் ஹிந்துக்களுக்கு என 'கைலாசா' என்ற தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக திடீரென அறிவித்தார்.

கைலாசாவின் இணையதளமாகக் குறிப்பிடப்படும் (https://kailaasa.org)   இணைய முகவரியில் காணப்படும் அந்தத் தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாட்டில் முறைப்படி இந்துத்துவத்தைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் உலகம் முழுவதும் வாழும் ஹிந்துக்களுக்கான நாடு இது என்றும் கூறிக் கொண்டார்.

அவரது இருப்பிடம் எங்கே என்று இதுவரை அறியப்படாத நிலையில், இந்த இணையதளம் வாயிலாக நித்தியானந்தாவின் போதனைகள் அடங்கிய காட்சிப் பதிவுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. வேடதாரி நித்தியானந்தா எங்கே இருக்கிறார்? அவர் உருவாக்கியதாகக் கூறிக்கொள்ளும் கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பது புரியாத கேள்வி.

அந்த வேளையில்தான், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்துடன் கைலாசா நாடு 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி காட்சிப் பதிவுகள் மற்றும் ஒளிப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியானது.

அந்த காட்சிப் பதிவில் நெவார்க் நகரத்தில் உள்ள சிட்டி ஹாலில் அந்நகர பிரதிநிதிகளுடன், கைலாசா பிரதிநிதிகள் கையெழுத்திடும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக நித்தியின் சீடர்கள் பெருமிதம் தெரிவித்து வந்தனர்.அடுத்து வந்த நாள்களில், அய்.நா. ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கைலாசா பிரதிநிதிகள் உரையாற்றிய காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியானதும், "நித்தியானந்தா உண்மையிலேயே கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டாரோ?  கைலாசா தனி நாடு உண்மைதானோ?" என்ற சந்தேகம் எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் உருவானதுதான் வேடிக்கை!

இதையடுத்து உண்மையறிய களத்தில் இறங்கிய பி.பி.சி.க்கு மின்னஞ்சல் வாயிலாக அய்.நா. பதில் அளித்தது.

"பொது விவாதங்கள் என்ற தலைப்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும்" என்று இந்த  குழுக்களை, மேற்பார்வையிடும் அய்.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி விவியன் குவோக் தெரிவித்தார்.

இரு கூட்டங்களிலும் கைலாசா பிரதிநிதிகள் பதிவு செய்த கருத்துகள் சற்றும் பொருந்தாத வகையில் இருந்ததால் அவற்றை நிராகரிப்பதாக அவர் பதில் அளித்திருந்தார். இதன்மூலம், நித்தியானந்தா கூறிக் கொண்டபடி, கைலாசாவை தனிநாடாக அய்.நா. அங்கீகரிக்கவே இல்லை என்பது நிரூபணமானது.கைலாசாவுக்கு அய்.நா. அங்கீகாரம் என்ற நித்தியானந்தாவின் கூற்று பித்தலாட்டமானது என்று நிரூபணமான நிலையில்தான், அடுத்த அதிர்ச்சி தரும் தகவல் அதே அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது.

அதாவது, நித்தியானந்தாவின் கற்பனை தேசமான 'கைலாசா'வுடன் நெவார்க் நகரம் மட்டுமல்ல, 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் 'சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக பி.டி.அய். நிறுவனம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது.

கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகக் கூறப்பட்ட அமெரிக்க நகரங்கள் மேற்கே பசிபிக் கடற்கரை முதல் கிழக்கே அட்லாண்டிக் கடற்கரை வரை விரவிக் கிடக்கின்றன. வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லே நகரமும் அவற்றில் ஒன்று.

"எங்கள் பிரகடனம் ஒன்றும் அங்கீகாரம் அல்ல. ஒரு விண்ணப்பத்திற்கான பதில்தான் அது. அந்த விண்ணப்பத்தில் இருந்த விவரங்களை நாங்கள் சரிபார்க்கவில்லை," என்று ஜாக்சன்வில்லே நகரம் விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல், கைலாசாவுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் நகரமான நெவார்க்கும் தற்போது பின்வாங்கியுள்ளது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவால் ஏமாற்றப்பட்டதை நெவார்க் சிட்டி ஹால் ஒப்புக் கொண்டுள்ளது. கைலாசா என்ற நாடே இல்லை என்பதைக் கண்டுபிடித்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக நெவார்க் மேயர் அறிவித்துள்ளார். 

நித்யானந்தாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை எழுத வில்லை.சாமியார்களின் யோக்கியதை - இன்று உலகமே காறி உமிழும் அளவுக்கு அம்பலமாகி வருவதை அம்பலப்படுத்தத்தான்.

 வெட்கக்கேடு! காவிகளா, காலிகளா என்று கேட்கும் நிலைதானே இன்று!


திங்கள், 29 மே, 2023

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

  

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்

கோவை, ஏப். 19- கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் ஒன்றை கொடுத் தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திரும ணத்துக்கு பின் நானும், எனது கணவரும் அய்தராபாத்தில் வசித்து வந்தோம். திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நாங்கள் கோவில், கோவிலாக சென்று வந்தோம். அப்போது மத்தியப் பிரதேசத்தில் ஆசிரமம் நடத்தி வரும் ஒரு சாமியார் பற்றி எனது கணவர் அறிந்தார். அவரை சந்தித்து எங்க ளுக்கு குழந்தை இல்லாத விவ ரத்தை தெரிவித்துள்ளார். அந்த சாமியார் சொன்னபடி எனது கணவர் வீட்டுக்கு வந்து இரவு நேரங்களில் பூஜைகளை நடத் தினார்.

ஆக்ரோஷமாக இருந்த அந்த பூஜைகளை பார்த்து நான் அச்சம் கொண்டேன். சாமியார் இப்படித் தான் பூஜைகளை செய்யச் சொன் னார் என்று கூறி எனது கணவர் தெரிவித்து என்னை சமாளித்தார். இந்தநிலையில் சாமியார் பெங் களூர் வந்திருந்தார்.

அவரை பார்க்க எனது கணவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கு தனி அறைக்கு வரச்சொன்ன சாமியார், அவருடைய ஆசைக்கு என்னை இணங்குமாறு கூறினார். அப்போது தான் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என தெரிவித்தார். நான் மறுப்பு தெரிவித்து வெளியே வந்து விட்டேன்.

இதுபற்றி கணவரிடம் தெரிவித்தேன். அவரோ எந்தவித கோபமும் கொள்ளாமல் சாமியார் சொல்படி நடந்து கொள் என தெரிவித்தார். எனது கணவரின் தோழி ஒருவரும் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு சாமியார் சொல்வதை கேட்கும்படி கூறினார். ஆனால் யார் சொல்லை யும் நான் கேட்கவில்லை.

அதன்பிறகு நான் எனது பெற் றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். சில மாதங்கள் கழித்து அய்தரா பாத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றேன். ஆனால் கணவர் என்னை வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டார். சாமி யார் உன்னுடன் வாழக் கூடாது என கூறி இருப்பதாக தெரிவித்து என்னுடன் பேச மறுத்தார்.

அந்த சமயம் சாமியார் என்னை தொடர்பு கொண்டு எனது ஆசைக்கு இணங்கினால் தான் உன் கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்வேன் என்று மிரட் டினார். ஆசைக்கு இணங்காததால் அந்த சாமியார் எனது வாழ்க் கையே அழித்து விட்டார்.

எனவே அந்த சாமியார், எனது கணவர், கணவரின் தோழி ஆகி யோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் கிழக்கு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விவரம் தெரியவந்தது.

மேலும் புகார் மனுவில் அந்த பெண் கூறியுள்ள விவரங்கள் உண்மை தானா என்பது பற்றி விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை யினர் தெரிவித்தனர்.

சாமியார்கள் ஜாக்கிரதை! பூஜை பெயரால் பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை : சாமியார் கைது

 

 திருமலை,மே 19- உடல் நலன் பாதிப்பை சரி செய்ய சிறப்பு பூஜை செய்வதாக கூறி இளம்பெண்ணை நிர்வாணமாக்க முயன்ற மோசடி சாமியார் கைது செய்யப்பட்டார். 

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த தாரகாராமா நகரை சேர்ந்தவர் ஹமாவதி (30). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்தநிலையில், காளஹஸ்தியை சேர்ந்த சுப்பையா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் ஹமாவதி தனது உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சுப்பையா,’உங்கள் வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் உடல் நலக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்’’ என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஹமாவதியிடம் பூஜைக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும் என்றும் சாமியார் கூறியுள் ளார். அதற்கு ஹமாவதி ரூ.20 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டு முன்பணமாக ரூ.7,500அய் போன்பே மூலம் சுப்பையாவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினார். 

கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டில் பூஜை செய்ய இருப்பதாகவும் வீட்டில் உன்னை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது எனவும் ஹமாவதியிடம் கூறினார். இதனையடுத்து, ஹமாவதி தனது வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டார். இதையறிந்து கொண்டு சுப்பையா வந்து அவரது வீட்டில் 6 இடங்களில் கோலமிட்டு மஞ்சள், குங்குமம், எலுமிச்சை வைத்து ஒரு பொம்மையை வரைந்துள்ளார்.

இதன்பின்னர், அந்த பொம்மை வரையப்பட்ட இடத்தில் ஹமாவதியை நிர்வாணமாக அமரும்படி கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத ஹமாவதி, ‘’அவ்வாறு எந்த பூஜையும் வேண்டாம்’’ என கூறியுள்ளார். அத்துடன் இதை ஏற்க மறுத்த ஹமாவதி வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓட முயன்றார். ஆனால், சுப்பையா ஹமாவதியை வலுக்கட்டாயமாக அடித்து நிர்வாணமாக்க முயன்றுள்ளார். அதற்குள் ஹமாவதி அவசர போலீஸ் 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்ததால் ரோந்து பணியில் இருந்த ரேணிகுண்டா நகர காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தபோது சுப்பையா தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஹமாவதி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மோசடி சாமியார் சுப்பையாவை கைது செய் தனர். இவ்வாறு வேறு எங்காவது பூஜை செய்வதாக கூறி இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளானா என்று விசாரிக்கின்றனர்.

புதன், 22 மார்ச், 2023

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் ஒரு வழக்கு

 

பெங்களூரு அக்15 கருநாடகா சித்ரதுர்கா முருக மடத்தில் படிக்கும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச் சாட்டில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சிறீ காவலில் வைக்கப் பட்டுள்ளார்.  கருநாடக மாநி லம் சித்ரதுர்கா முருக மடத்தின் விடுதியில் படிக்கும் இரண்டு  சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்ததாக மடாதி பதி சிவமூர்த்தி முருக சிறீ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையில் சரணடைந்த சிவமூர்த்தி முருகா, செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட் டுள்ளார். முருகசிறீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதி கரித்து வரும் நிலையில், தற் போது மடத்தில் சமையல் பணி யாளராக இருந்த பெண் ஒருவர் புதிதாக புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்வு அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. அந்த பெண், தனது மகள்களில் ஒருவரை காவல் நிலையத்திற்கு  13.10.2022 அன்று அழைத்துச் சென்று, தனது இரண்டு மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார்.

இது தவிர, மேலும் இரண்டு சிறுமிகள் உள்பட மொத்தம் நான்கு சிறுமிகள் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளான தாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலியல் துன் புறுத்தல் குற்றச்சாட்டில், சிறை யில் உள்ள சிவமூர்த்தி முருக சிறீ மீது மைசூர் நசராபாத் காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் கூடுதலாக, முருக மடத் தில் பணிபுரியும் ஊழியரின் குழந் தைகளை பாலியல் ரீதியாக துன் புறுத்திய வழக்கில் முருக மடத்தின் சீடர்கள் உட்பட 7 பேர் மீதும் எப்அய்ஆர் பதிவு செய் யப்பட்டுள்ளது. விடுதி வார்டன், சீடர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடை பெறுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஞாயிறு, 5 மார்ச், 2023

பகவான் கிருஷ்ணனை போல நான் நடந்து கொண்டேன் - அதில் என்ன தப்பு?" என்று கூறிய பாலியல் வன்கொடுமை குற்றவாளி சாமியார் ஆசாராமிற்கு ஆயுள் தண்டனை


 அகமதாபாத், பிப்.1 தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில்,  குஜராத் சாமியார் ஆசாராமிற்க்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

குஜராத் மாநிலம், அகமதா பாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசா ராம் பாபு. இவருக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் உள்ளது. இவரது ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வரும்  பெண் சீடர்களிடம் சாமியார்  அத்துமீறி வந்துள்ளார்.  இது தொடர்பான புகாரின் பேரில்,  கடந்த 2013ஆ-ம் ஆண்டு, ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டன விதித்து  2018-ஆம் ஆண்டு நீதிமன் றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரது ஆசிரம மேனாள் சிஷ்யை ஒருவர், அவர்மீது , அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அவரது மனுவில், தான்,  தனது 17 வயதில் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிர மத்தில் 2001 முதல் 2006 வரை  இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம்  பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு  குஜராத்தின் காந்தி நகரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிந்த நிலையில், நேற்று (31.1.2023) தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் சாமியார் குற்றவாளி என கூறிய நீதிமன்றம், அவரது  மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகள் என கூறிக் கொண்ட 4 பெண்கள் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் களை விடுதலை செய்ததுடன்,  குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

கோவிலில் வெள்ளி தகடுகளை திருடிய அர்ச்சக பார்ப்பனர்கள் கைது


கும்பகோணம், பிப்.4 மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலில் படிச்சட்டத்தின் மீது இருந்த வெள்ளித் தகடுகளை திருடியதாக அர்ச்சகர்கள் 2 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர் பகுதியில் பரிமள ரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த கோவி லில் உற்சவர் சாமி சிலையை தூக்கி செல்ல பயன்படும் படிச்சட்டம் மரத்தால் செய்யப்பட்டு அதன் மேல் வெள்ளித் தகடுகளால் கவசம் இடப்பட்டு இருந்தது.

இந்த படிச் சட்டத்தின் மேல் இருந்த வெள்ளி தகடுகள் கடந்த 2014-ஆம் ஆண்டு வெட்டி எடுக்கப்பட்டு திருட்டு போனது. இதுகுறித்து காவல்துறையில் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையில் புகார்

இந்த நிலையில் படிச்சட்டத்தில் இருந்த வெள்ளிக் கவசத்தை திருடிய வர்கள், பழைய படிச்சட்டத்திற்கு பதிலாக புதிதாக வெள்ளிக் கவசம் இடப்பட்ட படிச்சட்டத்தை தயார் செய்து கோவிலில் வைக்க முயற்சி செய்வதாக சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையில் புகார் மனு அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கோவிலில் இருந்த படி சட்டத்தின் வெள்ளி கவசம் திருடு போனது உறுதி செய்யப்பட்டது.

தீட்சிதர்-பட்டர் கைது

இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், படிச் சட்டத்தில் இருந்த வெள்ளித் தகடுகளை திருடிய குற்றவாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் தீவிர விசார ணையில் சிறீநிவாச ரங்க பட்டர் மற்றும் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரும் இணைந்து படிச் சட்டத்தில் இருந்த வெள்ளி தகடுகளை திருடியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் வெள்ளித் தகடுகளை கட்டி களாக உருக்கி மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்து புதிய படிச் சட்டம் செய்ய ஆர்டர் கொடுத்து உள்ளதும், புதிய படிச் சட்டம் செய்வதற்கு நன்கொடை யாளர்கள் மூலம் பணம் கொடுக்க சொல்லி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

15 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து இருவரும் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி மயிலாடுதுறையில் உள்ள சம்பந்தப் பட்ட நகைக்கடைக்கு நேரில் சென்ற காவல்துறையினர், அங்கு புதிதாக படி சட்டம் செய்ய வைத்திருந்த 15 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசா ரணை செய்யும் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன் றத்தில் நேற்று (3.2.2022) ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வியாழன், 23 செப்டம்பர், 2021

பா.ஜ.க. தலை எடுத்ததால் ஏற்பட்ட நிகர பலன்?


சாமியார்களின் தலைமை மடங்கள் என்று கூறிக்கொண்டு பல இருந்தாலும், அலகாபாத் பாகம்பரி மடம் தான் அனைத்து சாமியார் மடங்களுக்கும் தலைமையானது என்று கூறப்படுகிறது. இதன் தலைவராக இருந்த சாமியார் நரேந்திர கிரி, அய்யத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அடுத்து இவரது மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

அலகாபாத்தில் உள்ள அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற இந்திய சாமியார்களின் தலைமையிடம், சங்கராச்சாரியார் உருவாக்கிய மடங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், மற்ற எந்த ஒரு சாமியார் மடமும் போலியானது என்று அறிக்கை விட்டுள்ள இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சாமியார்  நரேந்திர கிரி.

இந்த நரேந்திரகிரி சாமியார் முலாயம் சிங் ஆட்சிக்காலத்திலும், அகிலேஷ் ஆட்சிக் காலத்திலும் பாஜகவின் உதவியால் அரசை கலைத்துவிடுவேன் என்று மிரட்டியவர்.  அதுமட்டுமல்லாமல் உத்தரப் பிரதேச தலைமைக் காவல் ஆணையரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வளைத்துக் கொண்டார். இதன் காரணமாக தலைமை செயலகத்தில் உத்தரப் பிரதேச தலைமைக்காவல் ஆணையரே பட்டினிப் போராட்டம் நடத்தினார். இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த அளவிற்கு சாமியார் அரசியலில் தனது ஆதிக்கத்தைக் செலுத்தியிருந்தார்.

 மரணமடைந்த சாமியார் நரேந்திர கிரிக்கு முறையற்ற பெண் தொடர்புகள் அதிகம் உண்டு. இவர் தமது பாதுகாப்பாளராக இருந்தவரின் மனைவியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்து அந்த விவகாரம் வெளியே தெரிந்த உடன் அந்தப் பாதுகாவலருக்குப் பல கோடி மதிப்பிலான மாளிகையை எழுதிக்கொடுத்தார். இதனை அடுத்து ஊர்க்காரர்கள் சில ஆயிரங்கள் மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்த காவலருக்கு பல கோடி மதிப்பு மாளிகை எப்படி சொந்தமானது என்று கேட்டுப் போராட்டம் நடத்தினர்.

 இந்த விவகாரத்தில் சாமியார் தனது பெயர் வராமல் இருக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து எதிர்ப்பாளர்களை மடக்கிய தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மடத்தை நிர்வகிக்கும் சில நிர்வகிகளுக்கும், சாமியாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது,

 இந்த நிலையில் இவரது மோசடிகளை வெளிக்கொண்டு வருவோம் என்று மிரட்டிய அவரது முக்கிய சீடர்கள் - பல பெண் களோடு அவர்களும் தொடர்பில் இருந்து மடத்தின் சொத்துக்களை வாரி வழங்கினர். 

சமீபத்தில் சாமியாரின் தலைமை சீடரும், யோகா குரு என்று தன்னைக் கூறிக்கொள்ளுபவருமான   ஆனந்த கிரி முதலமைச்சர் ஆதித்யநாத்தைச் சந்தித்து  தலைமை சாமியார் நரேந்திர கிரி குறித்துப் பல புகார்களை சான்றுகளோடு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து தற்போது மரணமடைந்த சாமியார் நரேந்திர கிரி தன்னுடைய சீடர்கள் குறித்த புகாரை கொடுக்க  மோடி, அமித்ஷா,  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் போன்றவர்களை சந்திக்க முயற்சித்தார். கரோனா காரணமாக அவருக்கு அனுமதி கிடைக்காததால் தனது சீடர்களின் முறையற்ற பாலியல் காணொலிகள், அவர்கள் பெண்களுக்கு எழுதிக்கொடுத்த மடத்தின் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மோடிக்கு அனுப்ப முடிவு செய்து சேகரித்து வைத்திருந்தார். இதனை அறிந்துகொண்ட   யோகா குரு என்று தன்னைக்கூறிக்கொள்ளும் ஆனந்த கிரி  கடுமையான மோதலில் ஈடுபட்டார் 

இதையடுத்து, அகாடா பரிஷத் மற்றும் பாகம்பரி மடத்திலிருந்து ஆனந்த் கிரி வெளியேற்றப்பட்டார்.  இந்த நிலையில் தலைமை சாமியார் நரேந்திரகிரி அய்யத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.  அவரது அறையில் இருந்த பல பொருட்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதும் தெரியவந்துள்ளது.

 சாமியார் மடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல, அயோத்தியில் உள்ள சாமியார் மடங்களில் வெளிநாடுகளில் இருந்து கூட விலைமாதர்களை சீடர்கள்  என்ற பெயரில் அழைத்துவந்து கூத்தடித்த விவகாரங்கள் காணொலிகளாக வெளியாகி சாமியார்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன.

 இப்படி பல சாமியார்கள் பாலியல் வக்கிரம் கொண்டு அலைவதும், சிக்கிக் கொண்ட பிறகு சொத்துக்களை எழுதிக் கொடுப்பதும் மக்களிடத்தில் அவமதிப்பை ஏற்படுத்தி விட்டது. சாமியார்களின் மோசடிகளைப் பயன்படுத்தி சிலர் சாமியார்களிடம் பெண்களை அனுப்பி அதை ரகசியமாக படம் பிடித்து மிரட்டுவது, அவ்வாறு மிரட்டுபவர்கள் கொலை செய்யப்படுவதும், அலகாபாத், வாரணாசி, பைசாபாத் (அயோத்தியா) போன்ற இடங்களில் பொதுவான காட்சியாக உள்ளது.  ஆனால் இப்போது இந்தியாவிற்கு சாமியார்களின் தலைவராக உள்ள நரேந்திர கிரி மரணம் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது,

 இவர் 2015 ஆம் ஆண்டு பாலியலைத் தூண்டும் போதை மருந்துகளை கொண்டுவரச்சொன்னதாக டில்லி விமான நிலையத் தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கூறியதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த மடத்திற்கு நாடு முழுவதும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் பக்தர்கள் நன்கொடையாக கொடுத்தவை ஆகும்.

உ.பி.யில் முதல் அமைச்சராக இருப்பவரே - ஒரு மடத்தின் தலைவராக இருந்தவர்தானே!

பா.ஜ.க. அரசியலில் தலை எடுக்க ஆரம்பித்ததால் ஏற்பட்ட நிகர பலன் இதுதான்!

இந்துராஜ்ஜியம் அமைக்கத் துடிப்போர் பதில் கூறுவார்களா?