ஞாயிறு, 11 ஜனவரி, 2015

காவி உடையில் காலித்தனம்


கலபுரகி, நவ.19-_ சித்தூர், கம்பலேஸ்வரர் மடத்தில் உள்ள சாமியார் சோம சேகர சிவாச்சார்யா (45) என்பவர் 11 வயது சிறுமி யிடம் பாலியல் வன்முறை யில் ஈடுபட்டதாக புகார் வெளியாகி உள்ளது. மடத் துக்கு அருகில் உள்ள வீடு களில் வசிக்கும் சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர் கள் கூட்டாக காவல் நிலையத்துக்குச் சென்று சிறுமிமீதான சாமியாரின் பாலியல் வன்முறை குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
மடத்திலிருந்து 20 மீட் டர் தொலைவில் உள்ள வீட்டிலிருந்து கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று அச்சிறுமி சிறுவர் களுடன் விளையாடுவதற் காக மடத்துக்குள் சென்ற போதுசாமியாரால் பாலி யல் வன்முறைக்கு ஆளாகி யதாக புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புகார் கொடுத்தவர் களில் ஒருவரான ரவீந்திர சஜ்ஜன்ஷெட்டி என்பவர் கூறும்போது, அச்சிறுமி கதறியபடி ஓடியதை அங் கிருந்த மக்கள் பலரும் பார்த் துள்ளனர். மடத்திலுள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்காக மடத் திற்குள் அச்சிறுமி சென் றாள்.
இதுபோன்ற பாலியல் வன்முறைகள் நடக்கும் போது, உடனடியாக காவல் நிலையத்தை அணுகி இருக்க வேண்டும். சிறுமியின் பெற் றோரை, மடத்திலுள்ள சாமியார் மிரட்டியதால், காவல்நிலையத்துக்குச் செல்லாமல் இருந்துள்ள தாக ரவீந்திரா கூறுகிறார்.
அச்சிறுமிக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கும் போது, அச்சிறுமி கூறியதை எழுதியே புகார் அளிக்கப் பட்டுள்ளது.
சித்தூர் மடாதிபதி கைது
சித்தூர் காவல்துறை யினர் காம்பலேஸ்வரா மடத்தின் சாமியாரான சோமசேகர சிவாச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்த னர். சாமியார் தப்பிக்க முயற்சி செய்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை கண் காணிப்பாளர் (பொறுப்பு) பி.மகந்தேஷ் இதுகுறித்து கூறும்போது, 11 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சோமசேகர சிவாச்சார்யாமீது சித்தூர் ரவீந்திரா என்பவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட மருத்துவமனை யில் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற் றது. வழக்கில் குற்றம் சுமத் தப்பட்ட சாமியாருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி குற்றம் நிரூபணம் ஆகி உள்ளது. சாமியார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்டார். நீதி மன்றக் காவலில் இம்மாதம் 29ஆம் தேதிவரை வைப்ப தற்கு நீதிபதி உத்தரவிட்ட தையடுத்து, மடத்தின் சாமியார் சிறையில் அடைக் கப்பட்டார். இவ்வழக்கில் சிறுமி யின் பெற்றோர் போதிய ஒத்துழைப்பை அளிக்க முன்வரவில்லை. இவ்வாறு அவர் கூறி னார்.
விடுதலை,19.11.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக